தூத்துக்குடியில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில், அதிர்ஷ்டவசமாக 60 பயணிகள் உயிர் தப்பினர்.

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு ஒன் டு ஒன் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. வாகைகுளம் அருகே சென்று கொண்டிருந்த போது, பஸ்ஸில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்து சுதாரித்துக் கொண்ட பயணிகள், அலறியபடி பஸ்ஸில் இருந்து வெளியேறினர். இதனால், அதிர்ஷ்டவசமாக பயணிகள் 60 பேர் உயிர்தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். பஸ்ஸில் தீப்பிடித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.