யாழ்ப்பாணம், சாவகச்சேரி – சரசாலை பகுதியில் நேற்று (21-03-2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று காலை 8.30 மணியளவில் சரசாலை – கனகம்புளியடிப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புத்தூரிலிருந்து மீசாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

விபத்து இடம்பெற்ற போது முச்சக்கர வண்டியில் நால்வர் பயணித்துள்ளனர். இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும், முச்சக்கர வண்டியின் சாரதியும், அதிலிருந்த மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து டிப்பர் வாகனத்தின் சாரதி சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் கவனீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருமகனால் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரின் சடலம் கண்டுபிடிப்பு!

வவுனியா நெல் கொள்முதல் குறித்து விவசாயிகள் புகார்