திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் அமைந்துள்ள வெளிச்ச வீட்டு கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (12-04-2026) குடும்ப சமையல் சென்ற 19 வயது இளைஞர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (12-04-2026) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது திடீரென எழுந்த கடல் அலை காரணமாக குறித்த இளைஞர் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர் மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த சௌமி முஹம்மது அப்லல் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
- கடற்புலி லெப். கேணல் இரும்பொறை | 16.09.2001
- சாட்ஜிபிடி AI கார்ட்டூன் டிரெண்ட் மோசடிக்காரர்களுக்கு புதிய ஆயுதமாக மாறலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை
- அகவை வாழ்த்து – டிசம்பர் 30
- அமெரிக்காவின் அதிக வரிகளையும் மீறி இந்தியாவின் ஏற்றுமதி 20% உயர்வு — வர்த்தகத் தாங்குதன்மை குறித்து புதிய கேள்விகள்
- கோவையின் ஐ.டி. துறை ஏற்றுமதி 2024–2025’ம் நிதியாண்டில் 15,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.!
- விளிம்பில் ஐரோப்பா ரஷ்யா–உக்ரைன் போரின் புதிய கட்டம்
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞனின் திடீர் மறைவால் அந்தப் பகுதி மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்படுகின்றன.