தமிழீழத் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் (14-12-2025) இடம்பெற்றது.








தமிழீழத் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் (14-12-2025) இடம்பெற்றது.








நமது தேசியத் தலைவர் மற்றும் தளபதிகள் மட்டுமன்றி, தமிழீழ மக்கள் அனைவராலும் அன்புடன் “பாலா அண்ணா” என அழைக்கப்பட்டவரும், சர்வதேச அரசியல் அரங்கில் சிறந்த ராஜதந்திரியாகவும், அரசியல் சாணக்கியராகவும், எமது தேசியத் தலைவரின் அரசியல் ஆலோசகராகவும் விளங்கிய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் லண்டன் சட்டன் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், அனைத்துலக மகளிர் பொறுப்பாளர் ஆரபி அவர்கள் ஈகைச்சுடரை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு, நினைவு வணக்க நிகழ்வுகள் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்றன.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு













முன்னுரை
தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில், ஆயுதம் ஏந்தாத போராளிகளுள், ஆயுதங்களுக்குச் சமமான அரசியல் வலிமையைக் கொண்ட ஒரே ஆளுமை எனச் சொல்வதானால், அது கலாநிதி அன்ரன் பாலசிங்கம் என்பதில் ஐயமில்லை.
அவர் ஒரு தனிநபர் அல்ல;
ஒரு அரசியல் குரல்,
ஒரு தேசிய சிந்தனை,
ஒரு அங்கீகரிக்கப்படாத தேசத்தின் முகவரி.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பரிணாம வளர்ச்சி, அதன் சர்வதேச அணுகுமுறை, அதன் பேச்சுவார்த்தைத் தந்திரங்கள் ஆகியவற்றின் பின்னால் நிற்கும் மூளையாக அவர் விளங்கினார்.
ஆரம்ப வாழ்க்கை: சிந்தனையாளரின் உருவாக்கம் (1938–1970)
கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 1938 ஆம் ஆண்டு மார்ச் 4 அன்று பிறந்தார்.
இளம் வயதிலேயே கல்வி, வாசிப்பு, உலக அரசியல் ஆகியவற்றில் அபார ஆர்வம் கொண்டவர்.
லண்டனில் அவர்:
• பத்திரிகையாளராக,
• பின்னர் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் மொழிபெயர்ப்பாளராக
பணியாற்றினார்.
இதுவே அவருக்கு
• மேற்குலக அரசியல் சிந்தனை,
• இராஜதந்திர மொழி,
• சர்வதேச அரசியல் நடைமுறைகள்
என அனைத்தையும் உள்ளங்கையில் கொண்டு வந்த பயிற்சி காலம்.
கெரில்லா போரியல் நூலும் பிரபாகரனுடனான சந்திப்பும்
1970களில், பாலசிங்கம் கெரில்லா போர் முறை குறித்து ஒரு முக்கியமான அரசியல்–போரியல் நூலை எழுதியிருந்தார்.
இந்த நூல்:
• இந்தியாவில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த
• தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதன் விளைவாக:
• பிரபாகரன் – பாலசிங்கம் தொடர்பு,
• அதுவே தமிழ் தேசிய போராட்ட வரலாற்றின் முக்கிய அரசியல் கூட்டணி ஆக மாறியது.
1983 – கறுப்பு யூலைக்குப் பின்: போராட்டத்திற்குள் அரசியல்
1983 கறுப்பு யூலை இன அழிப்புக்குப் பின்,
பாலசிங்கம் தம்பதியினர் இங்கிலாந்தை விட்டு வெளியேறி இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தனர்.
இந்தியாவில்:
• பயிற்சி முகாம்களில் இருந்த இளம் போராளிகளுக்கு
• அவர் அரசியல் வகுப்புகளை நடத்தினார்.
இதன் முக்கியத்துவம்:
போராட்டம் உணர்ச்சியல்ல;
அது வரலாற்று நீதி,
தேசிய உரிமை,
சுய தீர்மான உரிமை.
இந்த அரசியல் கல்வியே:
• புலிகள் இயக்கத்தை ஒரு கட்டுப்பட்ட தேசிய விடுதலை இயக்கமாக மாற்றியது.
திம்பு பேச்சுவார்த்தை – 1985: தேசிய கோட்பாட்டின் பிரகடனம்
திம்பு பேச்சுவார்த்தை (1985)
ஈழத் தமிழ் அரசியல் வரலாற்றில் முதல் முக்கிய சர்வதேச பேச்சுவார்த்தை.
இதில் பாலசிங்கம்:
• புலிகள் குழுவின் அரசியல் ஆலோசகராக
• “தமிழர் ஒரு தேசிய இனம்” என்ற கோட்பாட்டை
• ஆவணமாகப் பதிவு செய்தார்.
திம்பு கோட்பாடுகள்:
• தமிழர் ஒரு தனி தேசிய இனம்
• தமிழர் தாயகம்
• சுய தீர்மான உரிமை
• முழுமையான அரசியல் சமத்துவம்
இவை அனைத்தும் பாலசிங்கத்தின் சிந்தனை வடிவமைப்பின் விளைவு.
தலைமை பேச்சுவார்த்தையாளர்: அங்கீகரிக்கப்படாத தேசத்தின் இராஜதந்திரி
காலப்போக்கில்:
• பாலசிங்கம்
→ புலிகளின் தலைமை பேச்சுவார்த்தையாளர்,
→ அரசியல் ஆலோசகர்,
→ பிரபாகரனின் நெருங்கிய நண்பர்.
நோர்வே, இந்தியா, சர்வதேச பேச்சுவார்த்தைகள்
அவர்:
• ஆங்கிலப் புலமை,
• தர்க்கரீதியான வாதம்,
• சர்வதேச சட்ட மொழி
மூலம்,
தமிழர் பிரச்சினையை உலக அரசியல் மேசைக்கு கொண்டு வந்தார்.
“Tamil people are a nation with the right to self-determination”
என்ற வாக்கியம்,
உலக அரசியல் பதிவுகளில் பதியப்பட்ட தருணம் – பாலசிங்கம்.
2002 பத்திரிகையாளர் மகாநாடு: வரலாற்று ஆவணம்
ஏப்ரல் 2002,
இலங்கை அரசு – புலிகள்
புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முன் நடைபெற்ற
அரிய பத்திரிகையாளர் மகாநாடு.
பிரபாகரனுடன்:
• மொழிபெயர்ப்பாளர்,
• அரசியல் விளக்ககரராக
பாலசிங்கம் பங்கேற்றார்.
இன்று வரை அது:
• ஒரு வரலாற்று ஆவணம்,
• ஒரு தேசிய அரசியல் அறிக்கை.
மார்க்சியத்திலிருந்து தமிழ் தேசியம்
ஆரம்பத்தில்:
• மார்க்சியவாதி.
பின்னர்:
• ஈழத் தமிழரின் வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில்
• தமிழ் தேசிய அரசியல் கோட்பாட்டை வரையறுத்தவர்.
வர்க்கப் போராட்டத்தை விட, இன அடக்குமுறையே மைய பிரச்சினை என அடையாளம் கண்டவர்.
எதிரிகளையும் உலகையும் எதிர்கொண்ட சாமர்த்தியம்
நீலன் திருச்செல்லம்,
லக்ஸ்மன் கதிர்காமர்,
மற்றும் சர்வதேச பொறுப்பற்ற ராஜதந்திரிகள்—
இவர்களை:
• தனித்து,
• அறிவால்,
• அரசியல் தர்க்கத்தால்
எதிர்கொண்ட அரிய ஆளுமை.
மறைவும் அரசியல் வெற்றிடமும் (2006)
14.12.2006
தமிழ் தேசிய போராட்டத்தின் உச்சகட்டத்தில்
தேசத்தின் குரல் மௌனமானது.
அவரது மறைவு:
• ஒரு பெரும் அரசியல் வெற்றிடம்,
• போராட்டத்தின் பின்னாளைய வரலாற்றில்
திரும்ப முடியாத இழப்பு.
முடிவுரை
அன்ரன் பாலசிங்கம்
ஒரு மனிதர் அல்ல;
ஒரு அரசியல் காலம்.
ஆயுதமற்ற போராளி,
ஆயுதங்களுக்குச் சமமான சிந்தனையாளர்,
தமிழர்களின் அரசியல் முகவரி.
இனத்தின் அரசியல் முகம் – தேசத்தின் குரல்.
எழுதியவர்


ஈழத்து நிலவன்
தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் |
உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை, இராணுவ ஆய்வாளர்
Introduction
In the history of the Tamil national liberation struggle, few individuals wielded influence without arms yet possessed power equal to weaponry. Dr. Anton Balasingham stands unparalleled among such figures. He was not merely an intellectual or political advisor; he was the ideological backbone, the diplomatic voice, and the theoretical architect of the Tamil national liberation movement.

The political evolution of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), its engagement with international actors, and its articulation of Tamil national rights on the global stage were all profoundly shaped by Balasingham’s intellect and vision. To state that his life laid the foundation for the internationalization of the Tamil struggle would not be an exaggeration.
Early Life and the Formation of a Political Thinker (1938–1970)
Dr. Anton Balasingham was born on 4 March 1938. From an early age, he demonstrated deep intellectual curiosity, particularly in political theory, history, philosophy, and global affairs.
While living in London, he worked:
• as a journalist, and later
• as a translator at the British High Commission.
This period was formative. It exposed him to:
• Western political thought,
• diplomatic language,
• international legal discourse, and
• the operational culture of global diplomacy.
These experiences later enabled him to articulate the Tamil national question in a language intelligible to the international system.
Guerrilla Warfare Theory and the Encounter with Prabhakaran
During the 1970s, Balasingham authored a significant work on guerrilla warfare theory, examining revolutionary movements and armed liberation struggles worldwide.
This work attracted the attention of Velupillai Prabhakaran, leader of the LTTE, who was then undergoing military training in India. Prabhakaran recognized Balasingham not merely as a theorist, but as a strategic political mind capable of giving ideological coherence to the armed struggle.
Their initial contact marked the beginning of one of the most consequential political partnerships in Tamil national history—one that would shape the movement’s ideological clarity and diplomatic posture for decades.
Post–Black July 1983: Integrating Politics into Armed Struggle
Following the Black July pogrom of 1983, Balasingham and his wife left the United Kingdom and relocated to India, where the LTTE’s early training camps were located.
There, Balasingham conducted political education classes for young Tamil fighters. His instruction emphasized that:
The struggle must not be reduced to violence alone, but must be grounded in history, political legitimacy, and the right of a people to self-determination.
Through these classes, the LTTE was transformed from a purely militant organization into a disciplined national liberation movement with a coherent political ideology.
Thimphu Talks 1985: Codifying Tamil National Claims
The Thimphu Peace Talks of 1985 represented the first major international diplomatic engagement of the Tamil liberation movement.
Balasingham served as the chief political advisor to the LTTE delegation. It was here that the foundational principles of Tamil national politics—later known as the Thimphu Principles—were formally articulated:
• Recognition of Tamils as a distinct nation
• Recognition of the Tamil homeland
• The right to self-determination
• Full political equality
These principles were not rhetorical slogans; they were carefully structured political doctrines, largely shaped by Balasingham’s theoretical framework.
Chief Negotiator: Diplomat of an Unrecognized Nation
As the struggle evolved, Balasingham rose to become:
• the Chief Negotiator of the LTTE,
• its Principal Political Strategist, and
• the closest political confidant of Prabhakaran.
He represented the Tamil cause in negotiations facilitated by India, Norway, and other international actors.
Through:
• precise legal reasoning,
• fluent command of English,
• and disciplined argumentation,
He succeeded in bringing the Tamil national question into the realm of international political discourse, rather than allowing it to be dismissed as an internal security issue.
His assertion that:
“The Tamil people constitute a nation with the right to self-determination.”
became a defining political statement echoed in global diplomatic discussions.
The 2002 Press Conference: A Historic Political Document
In April 2002, prior to the signing of the Ceasefire Agreement between the Sri Lankan government and the LTTE, a rare joint press conference was held.
Balasingham appeared alongside Prabhakaran, serving both as:
• interpreter, and
• political explicator to the international media.
This event remains a historical political record, encapsulating the LTTE’s official stance and vision at a critical moment in the peace process.
From Marxism to Tamil Nationalism
Balasingham’s intellectual journey began in Marxist thought. However, through engagement with the lived historical experience of Eelam Tamils, he moved beyond class-based analysis.
He concluded that:
• ethnic oppression,
• denial of collective rights, and
• systematic state violence
did Tamils in Sri Lanka face the primary contradictions.
Thus, he emerged as one of the foremost theorists who redefined Tamil nationalism as a historically grounded national liberation struggle rather than a derivative ideological movement.
Confronting Adversaries with Political Precision
Balasingham displayed exceptional intellectual courage in confronting:
• domestic political opponents such as Neelan Tiruchelvam and Lakshman Kadirgamar, and
• what he described as irresponsible international diplomats.
He did so not through rhetoric, but through reasoned political argument, legal clarity, and historical evidence—often standing alone against powerful global narratives.
Death and the Strategic Void (2006)
Dr. Anton Balasingham passed away on 14 December 2006, at a time when the Tamil liberation struggle stood at a critical historical juncture.
His death created:
• a profound political and diplomatic vacuum, and
• a loss that the movement could not fully recover from in its later phases.
For the Tamil people, his passing was not merely a personal loss—it was a historical rupture.
Conclusion
Dr. Anton Balasingham was not simply an individual.
He was an era, a political language, and a national voice.
• An unarmed combatant,
• a thinker equal in force to weapons,
• and the political face of a stateless nation.
The political identity of a people found its voice in him.

Written by

Eelaththu Nilavan
Tamil National Historian |
Researcher in Global Politics, Economics, Intelligence, and Military Analyst
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 29’ம் திகதி பல்கலைக்கழகத்திற்குள் வெளியிலுள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 சிரேஷ்ட மாணவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் குறித்த வழக்கு (12-12-2025) வெள்ளிக்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 19 மாணவர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் ஸ்டானிஸ்லாஸ் அவர்களின் 19’ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள்.

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
முன்னுரை
தமிழ் இலக்கிய மரபில் பரணி எனப்படும் சிற்றிலக்கிய வகை, வீரத்தையும், அரசியலையும், போரின் காலமறிந்த காட்சிகளையும், உணர்ச்சி புரட்சிகளையும் ஆழமாக தமிழர்களின் மனப்பாங்கில் பதிக்கக்கூடிய தன்மை கொண்டது. சங்க காலத்திலிருந்து வளர்ந்த இவ்வகை நூல்களில் மிக முக்கியமான ஒன்று கலிங்கத்துப் பரணி.

முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போரில் கிடைத்த வெற்றியைப் பாடினாலும், அதன் இலக்கிய ஆழம், போர்தத்துவம், வீரக் கண்காணிப்பு மற்றும் குலப் பெருமை — ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நிகழ்ந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உளவியல் உணர்வுகளுடன் ஆழமான ஒத்திசைவை கொண்டுள்ளது.
பண்டைய பரணியின் கற்பனைச் சாயல்கள், சோழப் பேரரசின் வரலாற்றுப் பெருமை மற்றும் போர்க்கள யதார்த்தங்கள் — இவை நவீன தமிழ்ப்போராட்டத்தின் வாழ்வியல் உணர்வால் மீண்டும் உயிர் பெற்றுள்ளன. இக்கட்டுரை, கலிங்கத்துப் பரணியின் முழு வரலாறு மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அதன் உணர்வுப் பிணைப்புகளை விரிவாக ஆய்வு செய்கிறது.
கலிங்கத்துப் பரணி — வரலாற்று மற்றும் இலக்கியப் பின்னணி
1. நூலாசிரியர் மற்றும் காலச்சூழல்
• கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் சயங்கொண்டார், பிற்காலத்தில் “பரணிக்கோர் சயங்கொண்டான்” என்று சிறப்பிக்கப்பட்ட புலவர்.
• இவர் முதலாம் குலோத்துங்க சோழனின் அவையில் இருந்த திறனாளி.
• பரணி பாடலின் தலைவராக முதலாம் குலோத்துங்க சோழன் இருந்தாலும், போரின் வீர நாயகன் கருணாகரத் தொண்டைமான், அமைச்சரும் படைத்தலைவனும் ஆவார்.
போர்: வரலாற்று யதார்த்தம்
பொ.யு. 1112ம் ஆண்டில் வட கலிங்க மன்னன் அனந்தவர்மன் திறை செலுத்த மறுத்தபோது, குலோத்துங்க சோழனின் ஆணையின் கீழ் கருணாகரத் தொண்டைமான் படையுடன் முற்றுகை செய்தார். போரில் வெற்றி பெற்றது அந்த காலத்தின் வரலாற்றுப் பெருமையாக இலக்கியமாகவும் பதிவு செய்யப்பட்டது.
2. பரணி இலக்கியத்தின் அமைப்பு மற்றும் தனிச்சிறப்புகள்
பரணி வகையின் இலக்கணம்
பரணி இலக்கியம் பொதுவாக:
• ஆயிரம் யானைகளை வென்ற வீரனை களைகட்டுகிறது;
• அரசாட்சியை நிலைநாட்டிய படைத்தலைவனை புகழ்கிறது;
• அசாதாரண வீரத்தையும், தைரியத்தையும் கொண்ட தலைவரை மையமாகக் கொண்டது.
கலிங்கத்துப் பரணியின் கட்டமைப்பு
மொத்தம் 599 தாழிசைகள், இதில்:
• கடவுள் வாழ்த்து
• கோயில் பாடல்கள்
• காடு பாடல்கள்
• தேவியைப் பாடல்
• பேய் முறைப்பாடு
• இந்திரசாலம் (மாயை)
• அவதாரம்
• இராச பாரம்பரியம்
• களப் போர் வர்ணனைகள்
பல்வேறு இலக்கியப் பிரிவுகள் அடங்கியுள்ளன.
போர்க்களச் சித்திரங்கள்
போரின் கொடூரம், வீரத்தின் எழுச்சி ஆகியவை மிகைப்படுத்தப்பட்ட கற்பனையுடனும் தீர்க்கமான வெளிப்பாட்டுடனும் வர்ணிக்கப்பட்டுள்ளன.
திரண்ட ரத்தம், சிதறிய உடல்கள், பேய்கள் போர்க்களத்தில் உலவும் காட்சிகள், வீரர்களின் தைரியம் வாசகரை உள்ளார்ந்த மனப்போராட்டத்திற்கு அழைக்கும் வகையில் பதிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் — வரலாற்று மற்றும் அரசியல் அடித்தளம்
1. போரின் காரணங்கள்
நீண்டகாலமாக தமிழர்கள் எதிர்கொண்டவை:
• மொழியடக்குமுறை
• அரசியல் பாகுபாடு
• கல்வி மற்றும் பொருளாதார ஒடுக்குமுறை
• வன்முறைத் தாக்குதல்கள்
இதனால் சுயநிர்ணய உரிமை தமிழர்களின் கட்டாய தேவையாக மாறியது.
பண்டைய சோழப் போரின் காரணங்களிலிருந்து மாறுபட்டாலும், “நீதி நிலைநாட்டல்” என்ற அடிப்படைத் தத்துவம் இரண்டிலும் உள்ளதாகக் காணப்படுகிறது.
2. ஆயுதப் போராட்டத்தின் தோற்றம்
அமைதிப் போராட்டங்கள் மற்றும் பாராளுமன்ற முயற்சிகள் தோல்வியடைந்தபோது, தமிழர்களின் தேசிய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஆயுதப் போராட்டம் உருவானது.
3. போரின் வீரம் மற்றும் தியாகம்
தமிழீழப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்கள்:
• தியாகமிக்க மாவீரர்கள்
• பொதுமக்கள்
• பெண்கள் மற்றும் இளைஞர்கள்
இவர்களின் செயல்பாடுகள் தேசிய உணர்வின் மையத் திறக்கோலாக அமைந்தது.
ஒப்பீட்டு ஆய்வு — கலிங்கத்துப் பரணியும் தமிழீழ விடுதலைப் போராட்டமும்
போரின் நோக்கம் மற்றும் நோக்கங்கள்
• கலிங்கத்துப் பரணி: அரச நீதி நிலைநாட்டல், திறை மறுப்பு, அரச அதிகாரம்.
• தமிழீழ விடுதலைப் போராட்டம்: இனஅடையாளம், சுயநிர்ணய உரிமை, தேசிய விடுதலை.
தலைமை மற்றும் வீரத் தத்துவம்
• பரணி: கருணாகரத் தொண்டைமான் போரின் வீரன், குலோத்துங்கன் பேரரசருக்கு புகழ்.
• தமிழீழ போராட்டம்: போராளிகள் தியாகமிக்க வீரர்கள், தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், தேசிய தலைமை உருவாக்கியவர்கள்.
போர்க்கள அனுபவம்
• பரணி: கற்பனை மிகைப்படுத்தப்பட்ட போர்காட்சி.
• தமிழீழம்: உண்மையான கொடூரம், உயிரிழப்புகள், மக்கள் பாதிப்பு.
வரலாற்று மற்றும் பாரம்பரியக் கடமை
சோழர், பாண்டியர் மற்றும் சங்க கால வீர மரபுகள் தமிழீழப் போராளிகளுக்கு வரலாற்று அடையாளச் சின்னமாக இருந்தன. கலிங்கத்துப் பரணியும் இதே “வீரச் சின்னம்” உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.
தத்துவார்த்த ஒற்றுமை — போரின் தேவை மற்றும் தியாகம்
• பரணி: திறை மறுப்பு அரசியலுக்கான நியாயமான காரணம்.
• தமிழீழம்: உயிர்வாழ்வதற்கும் மொழியையும் இனத்தையும் காப்பதற்குமான மனித உரிமை.
பரணி வீரர்கள் இறந்து புகழ் பெறுகிறார்கள்;
தமிழீழ போராளிகள் உயிர் தியாகம் செய்து இனத்தின் நினைவில் நிலைத்திருக்கின்றனர்.
இரண்டுமே வீரம், தியாகம் மற்றும் நீதி என்ற பொது மனிதத் தத்துவத்தை பிரதிபலிக்கின்றன.
நவீன அரசியல் வாசிப்புகள்
1. இலக்கிய நினைவகம் மற்றும் தேசிய அடையாளம்
காலத்தைக் கடந்து பரணி காவியங்கள் சமூகத்தின் அடையாளத்தை மீண்டும் வரையறுக்க உதவுகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், கலிங்கத்துப் பரணி தமிழ் போராட்டத்திற்கு ஆழமான சிந்தனை மற்றும் உணர்ச்சி அடையாளமாக மாறியுள்ளது.
2. வரலாறும் நினைவகமும்
தமிழீழப் போராட்டம் தன் வீர மரபுகளை பண்டைய தமிழ் வரலாற்றின் பெருமைகளுடன் இணைத்தது. சோழர் நாட்டின் போர்த்திறன், கடற்படை, பாதுகாப்புக் கொள்கைகள்—all find resonance in modern struggle narratives.
முடிவுரை
கலிங்கத்துப் பரணி என்பது வெறும் வீரச் சிற்றிலக்கியம் அல்ல. அது ஒரு இனத்தின் போர்தத்துவம், வீர மரபு, தியாக உணர்வு மற்றும் அரசியலின் நியாயம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வரலாற்றுச் சாட்சி.
தமிழீழ விடுதலைப் போராட்டம் — எதிர்ப்பை வென்று எழும் சுயமரியாதையின் நவீன வரலாறாக திகழ்கிறது.
இரண்டும் காலம், அரசியல் சூழல் மற்றும் வரலாற்று பின்னணியில் வேறுபட்டாலும், வீரம், தியாகம், போரின் யதார்த்தம், நீதி தேடும் உணர்ச்சி, ஒரு இனத்தைப் பாதுகாக்கும் பெருமை ஆகிய அம்சங்களில் ஒன்றுபடும்.
இதனால், கலிங்கத்துப் பரணியும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் மனித விடுதலையின் ஒரே நூலிழையில் இணைக்கப்பட்ட இரண்டு காலச்சுவடுகள் ஆகின்றன.

╭──────────────────────╮
எழுதியவர் ஈழத்து நிலவன்
╰──────────────────────╯
13/12/2025
கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த நெரிசல் விபத்து தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்காக, கரூர் கலெக்டர் அலுவலக பயணியர் மாளிகையில், சி.பி.ஐ., சிறப்பு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, சிபிஐ எஸ்பி பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தவெக பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம், சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர். இந்நிலையில், கரூர் மாவட்ட அரசு தரப்பு மற்றும் போலீசார் வழங்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதன் அடிப்படையில் த.வெ.க., தலைவர் விஜயை சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கரூருக்கு விஜயை அழைத்தால் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால், சென்னை சிபிஐ அலுவலகத்தில் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக, விஜய்க்கு டில்லியில் இருந்து சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் மண்சரிவு அபாயமுள்ள 14 மாவட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்கள் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30 சதவீத்தையும், மொத்த சனத்தொகையில் 34 சதவீதத்தையும் கொண்டுள்ளன.

எனவே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் துரிதமாக அவ்விடங்களிலிருந்து வெளியேற மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (12-12-2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்;
மண்சரிவு அபாயமுள்ள 14 மாவட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்கள் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30 சதவீதமானவையாகும். அத்தோடு மொத்த சனத்தொகையில் 30 சதவீதத்தை இந்த மாவட்டங்கள் கொண்டுள்ளன. கடந்த நவம்பர் 20ஆம் திகதி முதல் இதுவரையில் 2710 இடங்களை ஆய்வு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 589 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை தித்வா புயலின் பின்னர் நிலங்களில் வெடிப்புக்கள் ஏற்படுதல் உள்ளிட்ட 736 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மண்மேடு சரிந்து விழுதல் 482, கற்பாறை பிளவு 42 என்பன பதிவாகியுள்ளன. இவை தவிர நிலங்கள் தாழிறங்குதல், விரிசல்கள் ஏற்படல் என்பனவும் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பல குழுக்கள் ஏற்கனவே மண்சரிவுகள் பதிவாகியுள்ள இடங்களில் தொடர்ச்சியான ஆய்வுகளை முன்னெடுத்துள்ளன.
100 மீற்றருக்கும் அதிக தூரத்துக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ள 1200 இடங்கள் செய்மதிப்படங்கள் ஊடாக அடையாளங் காணப்பட்டுள்ளன. வீடுகளுக்கு சேதங்கள் ஏற்படாமல் 919 மண்சரிவுகளும், வீடுகளுக்கு சேதங்கள் ஏற்படுத்திய 322 மண்சரிவுகளும் பதிவாகியுள்ளன. 1291 வீடுகள் மண்சரிவுகளில் முற்றாக சிக்கியுள்ளன. இந்த எண்ணிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படக் கூடும். மண்சரிவுகள் ஏற்படக் கூடிய 15 000 இடங்கள் இனங்காணப்பட்டு அவை தொடர்பில் மக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர சட்ட விரோத கட்டடங்கள், எமக்கு அறிவிக்கப்படாத பல இடங்கள் கூட மண்சரிவு அபாய எச்சரிக்கை மிக்கவையாக இருக்கலாம். கடுகன்னாவை பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்ட இடம் தொடர்பில் 2016ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே எச்சரிக்கை விடுக்கப்படும் பிரதேசங்களில் எக்காரணத்துக்காகவும் கட்டடங்களை நிர்மானிக்க வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
இம்முறை மண்சரிவுகளாலேயே அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. எனவே மண்சரிவு தொடர்பில் வழங்கப்படும் முன்னெச்சரிக்கைகளை அவதானித்து அதிகூடிய மழைவீழ்ச்சிகளின் போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மக்களை அறிவுறுத்துகின்றோம் என்றார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்செயற்பாடுகள் இருக்கவில்லையெனவும், கடற்புலிகளின் தளபதி வடக்கு, கிழக்கு கடற்பரப்பை தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அதனால் தாயகப்பரப்பிலிருந்த மீனவர்களின் வாழ்வாதாரம் தன்னிறைவு பெற்று செழித்திருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை தற்போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலால் தாயகப்பரப்பிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (12-12-2025) இடம்பெற்ற இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறல் செயற்பாடுகளுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிற்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (12-12-2025) மிகப் பாரிய ஒரு கவனயீர்ப்புப் போராட்டமொன்று மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரதிற்காக கையேந்தி நிற்கும் நிலையினை இந்த கவனயீர்ப்புப் போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது. இந்திய இழுவைப்படகுகளின் அட்டகாசமான செயற்பாடுகள் தொடர்கின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகள் இல்லாமல் கடற்பரப்பை தனது பூரண கட்டுப்பாட்டில் நேர்த்தியாக வைத்திருந்தார்.
அந்தவகையில் விடுதலைப் புலிகளின் காலத்தில் வடபகுதி மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தினைப் பூர்த்திசெய்யக்கூடியவகையில் தமது கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொண்டுவந்தனர்.
ஆனால் தற்போது இந்திய இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த இந்திய்இழுவைப்படகுகளின் அத்து மீறல்களுக்கு எதிராகவும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிராகவும் பாராளுமன்றில் தொடற்சியாக நான் குரல் கொடுத்துவருகின்றேன்.
குறிப்பாக ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டங்கள், பாராளுமன்றில் உரையாற்றுதல், பாராளுமன்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் அமைச்சரிடம் கேள்வி எழுப்புவது என பலவளிகளிலும் நான் இந்த இந்திய்இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடு மற்றும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றேன்.
அதேவேளை இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்துக் கலந்துரையாடும் சந்தர்ப்பங்களிலும், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளால் எமது மீனவமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவருவதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறியுமிருக்கின்றேன்.
அந்தவகையில் இந்திய உயர்ஸ்தானிகரும் அதனை ஏற்றுக்கொண்டதுடன், படிப்படியாக இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுமெனவும், அதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்திருந்தார்.
வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், களிநொச்சி நான்கு மாவட்டங்களிலும் வாழும் எமது மீனவக்குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தினைக் கொண்டுசெல்வதில் பல்வேறு இடர்பாடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். இவ்வாறான தொரு இக்கட்டான நிலையிலேயே மீனவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒழுங்கான முறையிலே இந்த மீனவர்களுடைய கடற்றொழில் செயற்பாட்டை இந்த அரசாங்கம் பாதுகாக்கவேண்டும். இந்திய இழுவைப்படகுகளும், தென்னிலங்கையைச் சேர்ந்த சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத தொழில்செயற்பாடுகளும் நிறுத்தப்படுமெனில் எமது மீனவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் எதனையும் வழங்கத் தேவையில்லை. எமது மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தினைத் தாமே மேம்படுத்திக்கொள்வார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து யாழ்மாவட்ட செயலாளரையும் நேரில் சந்தித்து அவருக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளேன்.
வடபகுதி மீனவர்கள் படும் துன்பங்களை முற்று முழுதாக நான் அறிவேன். முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு மற்றும், நாயாற்றைச் சேர்ந்த மீனவர்களும் 11.12.2025 அன்று இரவு எனக்கு தொலைபேசி அழைப்பெடுத்து இந்திய மீனவர்கள் அத்து மீறி எமது கடற்பரப்பினுள் நுழைந்து சட்டவிரோதமான முறையில் கடற்தொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக என்னிடம் மிகுந்த வேதனையுடன் முறையிட்டனர்.
இவ்வாறான அத்துமீறல் செயற்பாடுகளால் எமது கடல் வளங்கள் அபகரிக்கப்படுவதால், எமது மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்படுவதுடன், மீனவக்குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளும் பாதிக்கின்றன.
இவ்வாறு எல்லைதாண்டி வந்து அத்துமீறலில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை இந்த அரசாங்கத்தினால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை.
இவ்வாறு அத்துமீறல் செயற்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்தத் தவறியதனாலேயே எமது மீனவர்கள் மீன்பிடிப் படகுகளையும், வலைகளையும் காட்சிப்பொருட்களாக வைத்துக் கொண்டு இங்கு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவேண்டிய நிலை எழுந்துள்ளது.
எனவே எமது மீனவர்களின் மீனவர்களின் பாதிப்பு நிலையுணர்ந்து இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
தொடர்ந்தும் இந்த விவகாரத்தில் இந்த அரசு மெத்தனப் போக்குடன் செயற்படக்கூடாது.
இலங்கை மற்றும் இந்திய அரசுகள் முறையான விதத்தில் அணுகி இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகாணவேண்டும்.
வடக்கு மீனவர்கள் மாத்திரமல்ல கிழக்கு மீனவர்களும் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுகின்ற நிலைகள் காணப்படுகின்றன. ஆகவே எமது மீனவர்களை வாழவிடுங்கள் என்றுதான் கேட்கின்றோம்.
ஏன் எமது மீனவர்களை நோகடிக்கின்றீர்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே நொந்துபோயிருக்கின்ற எமது மீனவமக்களை மேலும் மேலும் நோகடிக்கின்றீர்கள்.
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து எமது மீனவர்களை நிம்மதியாக வாழவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.
குறித்த இளைஞனின் பூதவுடலுக்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாம் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி இருந்தனர்.

வவுனியாவை சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரண் (வயது 27) என்ற இளைஞன் , விபத்தில் சிக்கிய நிலையில் , கடந்த 08ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது மூளையின் செயற்பாடுகள் படிப்படியாக குறைவடைந்து மூளைச்சாவை அடைந்தார்.
அது தொடர்பில் இளைஞனின் பெற்றோருக்கு வைத்தியர்கள் அறிவித்ததை அடுத்து, குடும்பத்தினர் இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் தானம் செய்ய முன் வந்தனர்.

அதனை அடுத்து இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவக் குழு வெள்ளிக்கிழமை (12-11-2025) வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் அகற்றி, அவை இரண்டு நோயாளிகளுக்கு மாற்று சிறுநீரகமாக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன.
அதேவேளை உயிரிழந்த ராஜ்கரனுக்கு சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாமால் இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆசியாவின் தொழில்நுட்ப துறை 2026 வரை வலுவான ஒப்பந்த நடவடிக்கைகளைத் தொடரும் என UBS Group AG தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் அடித்தளம் மற்றும் புதிய தொழில்நுட்ப தளங்களில் முதலீட்டாளர்கள் அதிகளவில் மூலதனத்தை செலுத்துவதால், இந்த வளர்ச்சி வேகம் குறையாது என வங்கி மதிப்பிட்டுள்ளது.

UBS நிர்வாகிகள் குறிப்பிட்டதாவது, 2025 தொடக்கத்தில் உலக சந்தை அதிர்வுகளால் மந்தமாக இருந்தாலும், இரண்டாம் காலாண்டில் பரிவர்த்தனை நடவடிக்கைகள் மீண்டும் வேகமடைந்து, கோடை மாதங்களில் அதிகரித்தன. UBS ஆசிய-பசிபிக் TMT (தொழில்நுட்பம், ஊடகம், தொலைத்தொடர்பு) முதலீட்டு வங்கித் துறையின் இணைத் தலைவர் ஆக்சல் கிரேஞ்சர், “இந்த துறை மந்தமடையும் அறிகுறிகள் எதுவும் இல்லை” எனக் கூறினார்.
UBS ஆய்வாளர்கள், ஆசியா (ஜப்பான் தவிர) பங்குகள் 2026-இல் 11% உயர்வு பெறும் என எதிர்பார்க்கின்றனர். தொழில்நுட்பம் முக்கிய வளர்ச்சி இயந்திரமாக இருக்கும்.
சீனா, AI மற்றும் அரைச்செலுத்தி (semiconductor) துறைகளில் அரசாங்க ஆதரவு மற்றும் புதுமை வாயிலாக முன்னிலை வகிக்கும். இந்தியாவின் விரிவடைந்துவரும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சிங்கப்பூரின் நிதி மையப் பங்கு, பிராந்திய ஒப்பந்த நடவடிக்கைகளுக்கு முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.
UBS எச்சரிக்கையிட்டதாவது, உலகளாவிய வட்டி அழுத்தங்கள் மற்றும் புவியியல் அரசியல் சிக்கல்கள் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை குறைக்கக்கூடும். சீனாவில் ஒழுங்குமுறை கண்காணிப்பு மற்றும் ஆசியாவின் கடுமையான நாணயக் கொள்கைகள் சில பரிவர்த்தனைகளை மந்தமாக்கும் அபாயம் உள்ளது.
UBS கணிப்பு, ஆசியாவின் தொழில்நுட்ப துறைக்கு முக்கிய தருணத்தை வெளிப்படுத்துகிறது. AI சார்ந்த புதுமைகள் மற்றும் மூலதன சந்தை வலிமை, சமீபத்திய ஆண்டுகளில் மிக வலுவான ஒப்பந்தச் சுழற்சியை உருவாக்குகின்றன. 2026-இல் வலுவான வருமானம் எதிர்பார்க்கப்படுவதால், உலகளாவிய முதலீட்டாளர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைத் தேடும் முக்கிய துறையாக ஆசிய தொழில்நுட்பம் நீடிக்கும்.