குறித்த இளைஞனின் பூதவுடலுக்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாம் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி இருந்தனர்.

வவுனியாவை சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரண் (வயது 27) என்ற இளைஞன் , விபத்தில் சிக்கிய நிலையில் , கடந்த 08ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது மூளையின் செயற்பாடுகள் படிப்படியாக குறைவடைந்து மூளைச்சாவை அடைந்தார்.
அது தொடர்பில் இளைஞனின் பெற்றோருக்கு வைத்தியர்கள் அறிவித்ததை அடுத்து, குடும்பத்தினர் இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் தானம் செய்ய முன் வந்தனர்.

அதனை அடுத்து இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவக் குழு வெள்ளிக்கிழமை (12-11-2025) வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் அகற்றி, அவை இரண்டு நோயாளிகளுக்கு மாற்று சிறுநீரகமாக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன.
- தமிழக அரசியலின் மறுசீரமைப்பு 𝟮𝟬𝟮𝟲 — 𝟮𝟬𝟯𝟭 சீமான் • நாம் தமிழர் கட்சி (NTK) • விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK)
- தென் கொரியாவில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை கோரி வழக்கறிஞர்கள் வாதம்
- பிரகாசம் யோண்பிள்ளை | புகழ் வணக்கம் | 03.12.2025
- லெப்.கேணல் மாறன் | 29.09.2008
- முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது.
- சிவசுப்பிரமணியம் கஜேந்திரன் அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு – அனைத்துலகத் தொடர்பகம்.
அதேவேளை உயிரிழந்த ராஜ்கரனுக்கு சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாமால் இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது.