அமிழ்து
www.amizhthu.com
  • தமிழீழம்
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

முதன்மை செய்திகள்

தமிழீழம்

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – சுவிஸ்

by Amizhthu 5 December 2025
written by Amizhthu

04.12.2025 – தமிழ்க் கல்விச்சேவை / TESS Care

இன்று (04.12.2025) மன்னார் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகி இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் மற்றும் வீடுதிரும்பத் தயாராகும் அளவாகை, ராசூல் புதுவெளி, பொன்தீவுக் கண்டல் ஆகிய இடங்களிலுள்ள 244 குடும்பங்களுக்கு மன்னார் கரித்தாஸ் – வாழ்வோதயம் அமைப்பின் உதவியுடன் உலர் உணவு வழங்கப்பெற்றது.

04.12.2025 – தமிழ்க் கல்விச்சேவை / TESS Care

இன்று (04.12.2025) மட்டக்களப்பு கரித்தாஸ் – எகெட் அமைப்பின் உதவியுடன் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் 145 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கப்பெற்றது.
வழங்கப்பெற்ற இடங்கள்:
அம்பாறை மாவட்டம் – துரைவந்திமேடு கிராமம்
மட்டக்களப்பு மாவட்டம் – இழுக்குப்பொத்தானை, முந்தன் குமாரவில் கிராமங்கள்

04.12.2025 – உறவுக்குக் கைகொடுப்போம் அமைப்பு.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் 200 உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டன.

04.12.2025 – தமிழ்க் கல்விச்சேவை / TESS Care

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் ஆண்டான்குளம் கிராமத்தில் 105 குடும்பங்களுக்கு தமிழ்க் கல்விச்சேவை / TESS Care இனால் உலர் உணவு வழங்கப்பட்டது.

03.12.2025 – மார்த்தினி ஞானலிங்கேசுவரர் சைவநெறிக்கூடம்.

தாயகத்தில் ஏற்பட்ட பேரிடரின் போது ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் முற்றாக பாதிக்கப்பட்ட மன்னார் தேக்கம் கிராமத்தைச் சேர்ந்த 42 ( நாற்பத்து இரண்டு)குடும்பங்களுக்கு இன்று (03.12.2025) அவசரகால உதவியாக சுவிஸில் உள்ள வலே மானில சைவ நெறிக்கூட ஞான லிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிதிப்பங்களிப்பில் அரிசி, மா,பருப்பு,சோயா, சீனி,தேயிலை, பிஸ்கற், பனடோல் ஆகியவை அடங்கிய உணவுப் பொதியுடன் சிறுவர்களுக்கான பால்மா, பெட்சீற், நுளம்புவலை என்பனவும் வழங்கப்பட்டது. தாயகம் நோக்கிய புலம்பெயர் மக்களின் உதவிகரம் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைப்பதாக அமைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

02.12.2025 – உறவுக்குக் கைகொடுப்போம் அமைப்பு

தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த 22 குடும்பங்களிற்கும் சிறாட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த 66 குடும்பங்களுக்கும் உலர்உணவுப் பொருட்கள், பால்மா, பிஸ்கட் மற்றும் பாய், போர்வை, குழந்தைகளுக்கான பம்ப்ஸ் என்பன அடங்கிய பொதி இன்று (02.12.2025) வழங்கப்பட்டது.இவ்வுதவியானது உறவுக்குக் கைகொடும்போம் சுவிஸ் அமைப்பின் நிதிப்பங்களிப்போடு இப்பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
5 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

பதுளையில் 22,793 நுகர்வோர் குடிநீரைப் பெற முடியவில்லை; 51,916 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை; 76 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன – அமைச்சர் சமந்த வித்யாரத்ன

by Amizhthu 5 December 2025
written by Amizhthu

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பதுளை மாவட்டம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 22,793 பாவனையாளர்களுக்கு இன்னும் குழாய் ஊடான குடி நீரை வழங்க முடியாத நிலைமை காணப்படுகிறது. 51,916 வீடுகளுக்கு இன்னும் மின் விநியோகமும் தடைபட்டுள்ளதாக பெருந்தோட்ட, உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் பதிவான பாதிப்புக்கள் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

15,008 குடும்பங்களைச் சேர்ந்த 51,457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 88 பேர் உயிரிழந்துள்ளதோடு, காயமடைந்த 15 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

9 பேர் மண்சரிவுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படுவதோடு, எவ்வித தகவலும் இன்றி நால்வர் காணாமல் போயுள்ளனர்.

7630 குடும்பங்களைச் சேர்ந்த 24 396 பேர் 159 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 3,647 குடும்பங்களைச் சேர்ந்த 14,483 பேர் அவர்களது உறவினர்களது வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் அனர்த்தங்களின் பாதிப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றமையாலும், பெரும்பாலான வீதிகள் ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளமையாலும் முழுமையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. எனினும் 298 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 5,138 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் பாரியளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனர்த்தங்களால் பதுளையில் சுமார் 95,915 பாவனையாளர்களுக்கு நீர் விநியோகம் தடைபட்டது. 73,121 பாவனையாளர்களுக்கு மீள நீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் 22,793 பாவனையாளர்களுக்கு இன்னும் குழாய் ஊடான குடி நீரை வழங்க முடியாத நிலைமை காணப்படுகிறது. அவர்களுக்கு இயன்றவரை பவுசர்கள் மற்றும் நீர்த்தாங்கள் மூலம் நீரை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். 290,222 மொத்த மின் பாவனையாளர்களில் 197,798 பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் தடைபட்டது.

சில மின் உற்பத்தி இயந்திரங்கள் (ட்ரான்ஸ்போமர்) வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பதுளை மாவட்டத்திலுள்ள 1315 மின் உற்பத்தி இயந்திரங்களில் 844 மின் உற்பத்தி இயந்திரங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றுக்கு பதிலாக 556 மின் உற்பத்தி இயந்திரங்கள் சேவையில் இணைக்கப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படுகிறது. மேலும் 288 மின் உற்பத்தி இயந்திரங்களை மீளமைக்க வேண்டியுள்ளது.

எவ்வாறிருப்பினும் இதுவரையில் 145 882 பாவனையாளர்களுக்கு மின் விநியோகம் மீள வழங்கப்பட்டுள்ளது. 51 916 வீடுகளுக்கு இன்னும் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. பதுளையில் மாத்திரம் 14 வைத்தியசாலை கட்டமைப்புக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டன. மஹியங்கனை, கந்தேகெதர வைத்தியசாலைகளும், ஸ்பிரின்வெலி, எபரோ , சில்மியாபுர வைத்திய மத்திய நிலையங்களும் பாரியளவில் சேதமடைந்துள்ளன.

எவ்வாறிருப்பினும் மஹியங்கனை வைத்தியசாலையில் விசேட சத்திரசிகிச்சை பிரிவு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 175 தொலைதொடர்பு தூண்களில் 76 தூண்கள் சேதமடைந்தன. அவற்றில் 66 தூண்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. பதுளையிலுள்ள 36 பிரதான வீதிகளில் 25 வீதிகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அவற்றில் சில தற்காலிகமாக திறக்கப்பட்டன. தற்போது 16 வீதிகள் முற்றாக திறக்கப்பட்டுள்ளன. எனினும் 9 வீதிகளை இன்னும் மீளத்திறக்க முடியாதுள்ளது.

பசறை – லுணுகலை, வெலிமட – நுவரெலியா வீதிகளை மறுசீரமைப்பதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏனைய 175 சிறுவீதிகளை மீள் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை 76 பாடசாலைகள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. 13 பாடசாலைகள் பாரதூரமான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன. இவை அனைத்தையும் விரைவில் மீள் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள என்றார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
5 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கையில் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.8 மில்லியனைத் தாண்டியுள்ளது – பேரிடர் மேலாண்மை மையம்

by Amizhthu 5 December 2025
written by Amizhthu

தித்வா புயலால் நாடளாவிய ரீதியில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு இன்றுடன் ஒருவாரம் நிறைவடைந்துள்ளது. கடந்த ஒருவாரமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், காணாமல் போனோரை தேடும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வியாழக்கிழமை (04-12-2025) பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளது.

வியாழக்கிழமை (04-12-2025) மாலை வரை நாடளாவிய ரீதியில் 509 680 குடும்பங்களைச் சேர்ந்த 1 814 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 481 பேர் உயிரிழந்துள்ளதோடு, காணாமல் போயுள்ள 345 பேரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது மாத்திரமின்றி 1967 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 50 173 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அனர்த்த நிலைமை காரணமாக 48 559 குடும்பங்களைச் சேர்ந்த 171 492 பேர் 1236 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறலின் படி நேற்றைய தினம் நாட்டின் பல பகுதிகளிலும் மாலை வேளையில் கன மழை பெய்தது. அதேபோன்று இன்றைய தினமும் வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வட-மத்திய மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 6 முதல் 9 வரை மழையுடனான காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும்பாலும் தென் மாகாணத்தைப் பாதிக்கும். அத்தோடு இந்த மழைக்காலநிலையானது மத்திய மாகாணத்தில் குறிப்பாக குறிப்பாக மாத்தளை, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைப் பாதிக்கும். அந்த அடிப்படையிலேயே மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான ஆறுகள் பெருக்கெடுத்தமையால் வெள்ள நீரில் மூழ்கியிருந்த பல தாழ் நிலப்பகுதிகளில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது. எனினும் களனி கங்கையை அண்மித்த சில தாழ் நிலப்பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ள நீர் காணப்படுகிறது. இதேவேளை கலா ஓயா மற்றும் மகாவலி கங்கiயை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
5 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
கட்டுரைகள்

வரலாற்று ஆவணப்படுத்துதலே ஒரு தேசத்தின் நீதிக்கான, இறுதிப் படைக்கலன்

by Amizhthu 5 December 2025
written by Amizhthu

அறிமுகம் : வரலாற்று ஆவணப்படுத்தலின் தவிர்க்க முடியாத வலிமை

இன அழிப்புக்கு உள்ளாகும் எந்தவொரு தேசத்திற்கும், ஆழமான வரலாற்றுப் பதிவுகளும் சாட்சியங்களும் வெறும் நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சி அல்ல. அது, உலகின் மனசாட்சியை நோக்கி நீட்டப்படும் மிக வலிமையான, அழிவில்லாத படைக்கலன் ஆகும்.

இராணுவத்தின் பீரங்கிகளைவிடவும், ராஜதந்திர மேசைகளில் முன்வைக்கப்படும் சட்ட வாதங்களைவிடவும், துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்ட இன அழிப்பு வரலாறே ஒரு தேசத்தின் இருப்பையும், அதன் நீதிக் கோரிக்கையையும் உறுதிப்படுத்தும் மாபெரும் சக்தியாக விளங்குகிறது.

இந்த ஆவணங்களே:

• பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரலாற்று சாட்சியாகவும்
• எதிர்காலத் தலைமுறைக்கான பாடமாகவும்
• சர்வதேச சமூகத்திடம் நீதி கோரும் ஆதாரமாகவும்
• குற்றத்தை மறைக்க முயலும் சக்திகளுக்கு எதிரான தார்மீகச் சாட்டையாகவும்
மாறுகின்றன.

ஆவணப்படுத்தலின் உலகளாவிய தத்துவம் : யாட்வஷேம் – ஒரு முன்மாதிரி

இஸ்ரேலின் ஜெருசலேமில் நிறுவப்பட்டுள்ள யாட்வஷேம் (Yad Vashem) குளூகோஸ்ட் (Holocaust) நினைவகம், வரலாற்று ஆவணப்படுத்தல் எவ்வாறு ஒரு தேசத்தின் அரசியல் – தார்மீக – இருப்பியல் ஆயுதமாக மாறுகிறது என்பதற்கான மிக உயர்ந்த எடுத்துக்காட்டாகும்.

நாசி ஜெர்மனியால் சுமார் 60 இலட்சம் யூதர்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டதின் வரலாறு வெறும் தகவல் தொகுப்பாக அல்ல. அது இஸ்ரேல் தேசத்தின் உருவாக்கம், பாதுகாப்பு மற்றும் நியாயம் ஆகியவற்றின் மூல மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

• நிறுவனமயப்படுத்தப்பட்ட நுணுக்கம்

• கொலையாளிகளின் பெயர்கள், உத்தரவுகள், புகையிரத பாதைகள், முகாம்களின் வரைபடங்கள்
• பல இலட்சம் பலிக்களின் தனிப்பட்ட அடையாளங்கள், அன்றாடப் பயன்பாட்டு பொருட்கள்
• ஒவ்வொரு சாட்சியும் மிகத் துல்லியமாக, தொழில்நுட்ப உதவியுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது
•
இது வெறும் அருங்காட்சியகம் அல்ல; ஒரு தேசத்தின் நினைவுக் கோட்டை ஆகும்.

• நீதிக்கான மூலோபாயம்

• “Never Again – இனி ஒருபோதும் இல்லை” என்ற உறுதியை உலகின் முன் பதிய வைக்கும்
• இஸ்ரேலின் இராணுவ சக்தியைவிடவும், அணுகுண்டு சக்தியைவிடவும், இந்த ஆவணங்களே உலகின் முன் அதன் உயிர்வாழும் உரிமையைச் சட்டபூர்வமாக்குகின்றன

ஈழத் தமிழ்த் தேசத்தின் வரலாற்றில் ஆவணப்படுத்தலின் தார்மீகக் கட்டாயம்

தமிழ்த் தேசத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு ஒரு தற்செயல் சம்பவம் அல்ல. அது நீண்ட காலமாக திட்டமிட்ட, அரச ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சதி ஆகும்.

“கடந்ததை மறந்துவிடுங்கள்” என்று கூறுவது — எதிர்காலத்திற்கான உரிமையை நாமே அழித்துக்கொள்வதற்கு இணையானது.

ஈழத் தமிழர்களின் துன்ப வரலாறு, ஆயுதப் போராட்டத்தின் அவசியம், தனிநாட்டுக் கோரிக்கையின் நியாயம், தேசிய தற்காப்பின் தேவை ஆகிய அனைத்திற்கும் அடித்தளமாக இருக்கிறது.

1. சாத்வீக வழிமுறைகளின் அழிவும் ஆயுதப் போராட்டத்தின் நியாயமும்

தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தியதற்கு முன்பு, பல ஆண்டுகள் அகிம்சை, ஜனநாயகம் மற்றும் சமாதான வழிகளையே பின்பற்றினர்.

• சத்தியாக்கிரகத்தின் படுகொலை

• தமிழ்த் தேசியத் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் (Thanthai Selva) முன்னெடுத்த போராட்டங்கள்
• சிங்கள கும்பலால் நடுவீதிகளில் தாக்கப்பட்டன
• 75 வயதான தலைவரை தெருவில் தாக்கி, உண்ணாவிரதம் செய்ய விடாமல் தடுத்து, தமிழரின் அகிம்சை முயற்சிகளை நசுக்கியது

• ஆயுத தற்காப்பிற்கான வரலாற்று நியாயம்

• அகிம்சை வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டபோது, ஆயுதம் தீவிரவாதம் அல்ல – தற்காப்பு உரிமை
• இது அடுத்த தலைமுறை உணர்ந்து கொள்ள வேண்டிய வரலாற்றுப் பாடம்

2. இன அழிப்பின் சங்கிலித் தொடர் : 1956 – 1983 – 2009

தமிழர்கள் மீதான வன்முறை தற்செயல் அல்ல. அது — நெடுங்காலமாக தொடர்ந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட, அரச ஆதரவு கொண்ட இன அழிப்பு திட்டம்.

• 1956 முதல் – சிங்களம் மட்டும் சட்டம்

• மொழி, கல்வி, வேலைவாய்ப்பு, நிர்வாகம் அனைத்திலும் தமிழரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியது
• 1958, 1977, 1981, 1983… ஒவ்வொரு ஆண்டும் தமிழரின் இனம், வீடுகள், நூலகங்கள், நூல்கள், பெண்கள், குழந்தைகள் மீது வன்முறை நிகழ்ந்தது

• 1983 – கருப்பு ஜூலை (Black July)

• திட்டமிட்ட அரசுப் படுகொலை
• சிறைச்சாலைகளில் தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர்
• அரசுப் படை, காவல்துறை, கும்பல்கள் ஒரே நோக்கில் செயல்பட்டன

• 2009 – இறுதி இன அழிப்பு (முள்ளிவாய்க்கால்)

• No Fire Zones – வஞ்சக நடைமுறை
• மருத்துவமனை, பள்ளிகள், கல்லறைகள் தாக்கம்
• பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை
• UN Panel Report, Darusman Report ஆகிய சர்வதேச ஆதாரங்கள்
• இதன் ஆவணப்படுத்தல் தமிழ்த் தேசத்தின் இறுதி இன அழிப்பின் முழுமையான சாட்சி

3. உலக மற்றும் பிராந்திய சக்திகளுக்கான ஆவணத் தேவையம் : இந்தியா – IPKF

• ஆவணக் காப்பகம் பகைநாடுகளுக்கெதிரானது மட்டுமல்ல; அது எதிர்கால ராஜதந்திர உறவுகளுக்கான பாதுகாப்பு கோடு
• இந்தியப் படைகள் (IPKF) ஈழத்தில் வைத்த பாதிப்புகள், அழிக்கப்பட்ட கிராமங்கள், கொல்லப்பட்ட பொதுமக்கள், பெண்கள் மீதான வன்முறைகள் – உண்மை ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட வேண்டும்
• ஆவணப்படுத்தாமை எதிர்கால உறவுகளில் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு

4. சட்ட அடிப்படை

• UN Genocide Convention (1948)
• Rome Statute – ICC
• War Crime | Crimes Against Humanity | Genocide
• ஆவணங்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்கு சட்ட ரீதியான ஆதாரம் தரும்

5. டிஜிட்டல் ஆவண மையம் (Future Action Plan)

• Tamil Digital Archive – மாதிரி
• வீடியோ, ஆடியோ, புகைப்படங்கள், ஆவணங்கள், பொருட்கள், மண், எலும்புகள்
• வெளிநாடுகளில் வரலாற்று மையங்கள்
• எழுத்தாளர், ஆய்வாளர், ஊடகவியலாளர், சட்ட வல்லுநர் ஒன்றிணையல்

6. உலக வரலாற்று ஒப்பீடு (Comparative Genocide Studies)

• யூதர்கள் – பாலஸ்தீனர்கள் – ரோஹிங்யா – ஆர்மேனியர்கள் – தமிழர்கள்
• selective justice – உலக அரசியல் மௌனம்
• தமிழர்களின் பிரச்சனை ஏன் மறைக்கப்படுகிறது?

ஆவணக் காப்பகங்களே – நீதிக்கான இறுதிப் போர்

• இளைய தலைமுறையின் வரலாற்று அறியாமை = ஆவணப் போரின் தோல்வி
• ஆவணப்படுத்துதல் = எதிர்கால ஆயுதம்

• உலகை வெட்கப்பட வைக்கும் சக்தி

• உலகம், “நீங்கள் எங்கே இருந்தீர்கள்?” என்று கேட்கும் வலிமை

• பிச்சை அல்ல — உரிமை

• நியாயத்தை உரிமையுடன் கோரல்
• சாட்சிகள், புகைப்படங்கள், வீடியோக்கள், அறிக்கைகள், கல்லறைகள், சுவடுகள் – அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்ட காப்பகம்

செயற்திட்டத்தின் கட்டாயம்

• தமிழின அழிப்பின் ஆதாரங்களை உலகளாவிய அளவில் சேகரித்தல்
• வெளிநாடுகளில் வரலாற்று ஆவண மையங்கள் நிறுவல்
• இளைய தலைமுறைக்காக டிஜிட்டல் காப்பகங்கள் உருவாக்கல்
• எழுத்தாளர், ஆய்வாளர், ஊடகவியலாளர், சட்ட வல்லுநர் அனைவரும் ஒன்றிணையல்

ஒருமித்த செயல் சாத்தியமில்லையெனில், ஒவ்வொருவரும் தனித்தனியாகவாவது இந்த சுமையைத் தாங்க வேண்டும்.

முடிவுரை

தமிழ்த் தேசத்தின் எதிர்காலம், போர்க்கள வெற்றியாலோ அல்லது தற்காலிக அரசியல் உடன்பாடுகளாலோ இல்லை.

அது — ஆவணப்படுத்தப்பட்ட நீதியின் வலிமையால் மட்டுமே உலக வரலாற்றில் நிரந்தரமாக பதியப்படும்.

வரலாறு எழுதப்படாவிட்டால் மறக்கப்படும். ஆவணப்படுத்தப்படாவிட்டால் கொல்லப்படும்.

வரலாற்று ஆவணப்படுத்துதலே… தமிழ்த் தேசத்தின் இறுதி படைக்கலன்.

╭──────────────────────╮
  எழுதியவர்  ஈழத்து நிலவன்
╰──────────────────────╯
05/12/2025


Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
5 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
NEWS

Documenting History: The Ultimate Weapon of Justice for a Nation

by Amizhthu 5 December 2025
written by Amizhthu

Introduction: The Irresistible Power of Historical Documentation

For any nation subjected to genocide, deep historical records and evidence are not merely attempts to recall memories. They extend toward the conscience of the world as an indestructible, powerful instrument.

Beyond the weapons of war or the debates on diplomatic tables, accurately documented accounts of genocide serve as a nation’s proof of existence and as a foundation for claiming justice.

These records become:

• Testimonies for the affected communities
• Lessons for future generations
• Evidence demanding justice from the international community
• A moral barrier against forces attempting to erase crimes

Global Philosophy of Documentation: Yad Vashem – A Model

The Yad Vashem Holocaust Memorial in Jerusalem, Israel stands as the highest example of how historical documentation transforms into a political, moral, and existential weapon for a nation.

The systematic killing of approximately 6 million Jews by Nazi Germany is not merely archived information; it serves as the foundation for Israel’s creation, protection, and legitimacy.

• Systematized Precision

• Names of perpetrators, orders, train routes, and maps of concentration camps
• Millions of victims’ personal identities and daily belongings
• Each piece of evidence is meticulously documented using scientific and technological methods

This is not merely a museum; it is the memory vault of a nation.

• Strategic Purpose for Justice

• These records uphold the Jewish declaration “Never Again” before the world
• They serve as a stronger instrument than military power, legally securing Israel’s right to exist in front of the world

The Moral Imperative of Documentation in Eelam Tamil History

The genocide against the Tamil nation was not a spontaneous act but a long-planned, state-backed historical conspiracy.

To say “forget the past” in such a context is equivalent to surrendering future rights.

Documenting the Tamil people’s suffering forms the foundation for:

• The necessity of armed struggle
• The legitimacy of the demand for a separate homeland
• The need for national self-defense

This documentation is both a historical responsibility and a national duty.

1. The Collapse of Peaceful Methods and the Justification for Armed Struggle

Before taking up arms, the Tamil people practiced nonviolence, democracy, and peaceful approaches for decades, as historical evidence shows.

• The Sathiyamkharam Struggle

• Led by S.J.V. Chelvanayagam (Thanthai Selva)
• Nonviolent protests in public streets were violently suppressed by Sinhalese mobs
• A 75-year-old leader was attacked in the streets, prevented from fasting, and peaceful resistance was crushed — demonstrating the state’s oppressive face

• Historical Justification for Armed Defense

• When all peaceful avenues were blocked, bearing arms was not terrorism but a legitimate act of self-defense
• This is a critical historical lesson for future generations

2. The Chain of Genocide: 1956 – 1983 – 2009

The violence against Tamils was systematic, state-backed, and continuous.

• 1956 Onwards – “Sinhala Only” Law

• Language, education, employment, and administration systematically downgraded Tamils to second-class citizens

• Subsequent years, 1958, 1977, 1981, 1983… saw mass violence targeting Tamil communities, homes, libraries, schools, women, and children

• 1983 – Black July

• Not a mere riot, but state-planned ethnic massacres
• Tamil prisoners were killed even in jails
• Government troops, police, and mobs acted as two sides of the same coin
• Documentation of these events is critical to establish historical legitimacy for a separate Tamil homeland

• 2009 – The Final Genocide (Mullivaikkal)

• No Fire Zones became death traps
• Hospitals, schools, and cemeteries were attacked
• Women and children were massacred
• Verified international reports: UN Panel, Darusman Report
• Estimated Tamil civilian deaths: 40,000–70,000
• This documentation is the final record of the planned genocide against Eelam Tamils

3. Documentation for Global and Regional Powers: India – IPKF

A historical archive is not just a tool against enemies, but a safeguard for future diplomatic and strategic relations.

• India – IPKF – Hidden History

• Indian Peace Keeping Force operations in Eelam
• Destroyed villages, massacred civilians, sexual violence
• Must be documented truthfully
• Failing to do so risks accepting subjugation while claiming friendship in future diplomacy

4. Legal Foundations

• UN Genocide Convention (1948)
• Rome Statute – International Criminal Court (ICC)
• Categorization: War Crimes | Crimes Against Humanity | Genocide
• Documentation provides legal grounds for a separate nation claim

5. Digital Archive Initiative (Future Action Plan)

• Creation of Tamil Digital Archive
• Types of records: videos, audios, photos, documents, artifacts, soil samples, bones
• Historical centers abroad for research and display
• Collaboration of scholars, journalists, and legal experts

6. Global Comparative Genocide Studies

• Jews, Palestinians, Rohingya, Armenians, Tamils
• Selective justice and global political silence
• Reasons why Tamil genocide remains marginalized internationally

Archival Records: The Final Battlefield for Justice

• Lack of historical knowledge among the younger generation = failure of the archival struggle
• Documentation = the ultimate future weapon

• Power to Shame the World

• The world witnessed Tamil genocide yet remained silent
• Our archives give the moral right to ask: “Where were you?”

• Not Begging — Claiming Rights

• Justice must be claimed with authority, not with pleas
• Evidence, photographs, videos, reports, cemeteries, and remains must be organized into structured archives

Mandatory Action Plan

• Collect evidence of Tamil genocide globally
• Establish historical centers abroad
• Create digital archives for future generations
• Unite scholars, journalists, and legal experts in a coordinated effort

If collective action is impossible, each individual must bear the responsibility personally.

Conclusion

The future of the Tamil nation will not be secured by battlefield victories or temporary political agreements.

It will be guaranteed through the power of documented justice, permanently etched in world history.

History that is not written will be forgotten. History that is not documented will be destroyed.

Therefore, documenting history is… the ultimate weapon of the Tamil nation.

╭────────────────────╮
Written by  Eelaththu Nilavan
╰────────────────────╯
05/12/2025

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
5 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
கனடா

சிவசுப்பிரமணியம் கஜேந்திரன் அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு – அனைத்துலகத் தொடர்பகம்.

by Amizhthu 4 December 2025
written by Amizhthu

தமிழீழப்பற்றோடும் தாய்மொழிப்பற்றோடும் தனது இறுதிமூச்சுவரைத் தமிழீழ விடுதலைக்காகப் பணியாற்றிய சிவசுப்பிரமணியம் கஜேந்திரன்;  அவர்கள், 24.11.2025 அன்று உடல்நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி எமக்குப் பெருந்துயரினை ஏற்படுத்தியுள்ளது.  

இவர், தமிழீழத் தேசியத்தலைவரையும் தமிழீழத்தையும் தாய்மொழியையும் ஆழமாக நேசித்த மனித நேயமுள்ள பண்பாளராவார். தமிழீழத் தேசியத்தலைவரது தலைமைத்துவப் பண்புகளில் மிகுந்த உறுதிப்பாடு கொண்டவராவார்.  

இவர், 1993ம் ஆண்டு புலம்பெயர்ந்து கனடா நாட்டின் ரொரன்ரோவில் பல்வேறு தாயக வேலைத்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி, ஒரு தேசியச்செயற்பாட்டாளராகத் தன்னை இணைத்துக் கொண்டவராவார். உலகத் தமிழர் அமைப்பு, கனடாத் தமிழ்க் கல்லூரி ஆகியவற்றில் தன்னை இணைத்துச் செயற்பட்டதுடன், “டவுண்ரவுண்” எனும் இடத்தின் ஒரு பகுதிப்பொறுப்பாளராகச் செயற்பட்டுவந்தவருமாவார்.  

இவர், கனடாவில் தாயகம் சார்ந்த அனைத்துப் போராட்டங்களிலும் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்ததுடன், தமிழ்மக்களை ஒருங்கிணைத்துப் பல எழுச்சிப்போராட்டங்களை முன்னின்று வழிநடத்தியவராவார். தாயகம் நோக்கிய பணிகளை, கடந்த “கொரோனா” நோய்த்தொற்றுக் காலத்தில் கடுங்குளிரான காலநிலையிலும் தன்னலம் கருதாது, மனம் தளராது செய்துமுடித்தவராவார்.  

இவர் வாழ்ந்து வந்த பிரதேசத்தில் மக்களுடன் அன்பாகவும் பண்பாகவும் உறவினைப்பேணித்  தாயகத்தின் வேலைத்திட்டங்களிற்கு மக்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொடுத்தவராவார். இவரின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளிற்காக, தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களிடமிருந்து பாராட்டுக்கடிதத்தினையும் பெற்றிருந்தார்.   

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மீதும் ஆழமான பற்றுதல்கொண்டு,  போராட்டத்தின் ஆரம்பகாலம் தொடக்கம் தனது இறுதிமூச்சு வரை,  தன்னை அர்ப்பணித்துத் தேசவிடுதலைக்காக மிகப்பெரும் பலம் சேர்த்த இவரது  இழப்பில் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்,  உறவினர்,  நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன்,  சிவசுப்பிரமணியம் கஜேந்திரன்;  அவர்களின் விடுதலைப்பற்றிற்காகவும் தேசவிடுதலைக்கு அவர் ஆற்றிய பணிகளிற்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.  

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ” 

அனைத்துலகத் தொடர்பகம், 
தமிழீழ விடுதலைப் புலிகள். 

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
4 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
புலம்பெயர் தமிழர்கள்

மாவீரர் நாள் 2025 – பின்லாந்து

by Amizhthu 4 December 2025
written by Amizhthu

மாவீரர் நாள் 2025 – பின்லாந்து

பின்லாந்தில் பெருந்திரளான மக்களின் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமான தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025 அதன் பின் எழுச்சிப் பாடல்கள் எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் எழச்சிப் பேச்சு என்பனவும் இடம்பெற்றன.

இறுதியில் தேசியக் கொடி கையேற்கப்பட்டு அதன் பின் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் எல்லோரும் சேர்ந்துபாடி இறுதியில் எமது தாரக மந்திரமாம் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற கோசத்துடன் இனிதே நிறைவுபெற்றது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
4 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கை அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகை (ரூ.10,000 – 50,000) பெறுவது எப்படி?

by Amizhthu 3 December 2025
written by Amizhthu

முழு வழிகாட்டி – படிப்படியாக

வெள்ளத்தால் சேதமடைந்த குடும்பங்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகை ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை உள்ளது. இந்த பணம் நீங்கள் உரிமையுடன் பெறக்கூடிய உதவி!


1️⃣ யாருக்கு இந்த நிவாரணம் கிடைக்கும்?

✔️ வெள்ளத்தால் வீடு சேதமடைந்தவர்கள்
✔️ வீட்டுப் பொருட்கள் சேதமடைந்தவர்கள்
✔️ வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள்
✔️ பயிர்கள் சேதமடைந்த விவசாயிகள்
✔️ சிறு தொழில் பாதிக்கப்பட்டவர்கள்
✔️ காயமடைந்தவர்கள்

📌 நீங்கள் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் வசிப்பது அவசியம். பிரதேச செயலாளர் அலுவலகம் வெளியிடும் பாதிப்பு பட்டியலில் உங்கள் பகுதி இருக்க வேண்டும்.


2️⃣ தேவையான ஆவணங்கள்

📌 தேசிய அடையாள அட்டை
📌 சேதம் ஏற்பட்ட இடங்களின் புகைப்படங்கள் (கட்டாயம்)
📌 வீட்டுப் பொருட்கள் / பயிர் சேதப் புகைப்படங்கள்
📌 வங்கி கணக்கு விவரங்கள்
📌 விவசாயிகளுக்கு – விவசாயச் சான்று
📌 தொழில் செய்பவர்களுக்கு – வணிக/தொழில் அனுமதி


3️⃣ எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

🏢 பிரதேச செயலாளர் அலுவலகம் (முதன்மை இடம்)
✔️ பேரழிவு நிவாரண பிரிவு
✔️ சில இடங்களில் அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று பதிவு செய்வார்கள்
✔️ மாவட்ட செயலாளர் அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள்
✔️ பேரழிவு மேலாண்மை மைய தகவல்
✔️ மொபைல் சேவை கவுண்டர்கள் (சில மாவட்டங்களில்)


4️⃣ விண்ணப்பப் படிவம் எப்படி நிரப்புவது?

✔️ படிவத்தை முழுமையாக படித்து புரிந்து கொள்ளவும்
✔️ அனைத்து விவரங்களையும் சரியாக எழுதவும்
✔️ தவறான தகவல் = விண்ணப்பம் நிராகரிப்பு
✔️ சேத வகையைத் தெளிவாக குறிப்பிடவும்

வீடு / பொருட்கள் / பயிர்
✔️ சேத மதிப்பு நியாயமானதாக இருக்க வேண்டும்
✔️ வங்கி கணக்கு எண் மிகத் துல்லியமாக எழுத வேண்டும்
✔️ தேவையான இடங்களில் கையொப்பம் இட வேண்டும்


5️⃣ சரிபார்ப்பு நடைமுறை

👮 அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு நேரில் வந்து ஆய்வு செய்வார்கள்
📸 நீங்கள் எடுத்த புகைப்படங்கள் காட்ட வேண்டும்
🏠 சேதமான இடங்களை காட்ட வேண்டும்
👥 சில நேரங்களில் அயலவர்கள் சாட்சியாக கேட்கப்படலாம்
📄 கிராம அதிகாரி / கட்டிட அதிகாரி அறிக்கை
➡️ பிரதேச செயலாளர் → மாவட்ட செயலாளர் → பேரழிவு மேலாண்மை அமைச்சகம்
➡️ இறுதி அங்கீகாரம் அங்கிருந்து வரும்


6️⃣ பணம் எப்படி கிடைக்கும்?

💳 பணம் நேரடியாக உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பப்படும்
📩 பணம் சேரும்போது SMS வரும்
❌ இதற்காக எந்த கட்டணமும் இல்லை

தொகை வழங்கப்படும் விதம்:

சிறிய சேதம் – ரூ.10,000

நடுத்தர சேதம் – ரூ.25,000

பெரிய சேதம் – ரூ.50,000

வீடு முழுமையாக இடிந்தால் – மேலும் கூடுதல் நிதி கிடைக்கலாம்


7️⃣ காலவரம்பு

🕒 வெள்ளத்துக்குப் பிறகு உடனடியாக விண்ணப்பிக்கவும்
📌 பொதுவாக 2–3 வாரங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
⌛ பணம் வர 1½ – 2 மாதங்கள் ஆகலாம்


8️⃣ பணம் கிடைக்காவிட்டால்?

✔️ பிரதேச செயலாளர் அலுவலகத்தில் விசாரிக்கவும்
✔️ விண்ணப்ப நிலைச் சரிபார்க்கச் சொல்லவும்
✔️ நிராகரிப்பு காரணத்தை கேட்கவும்
✔️ மீண்டும் விண்ணப்பிக்க முடியுமா என்று தெரிந்துகொள்ளவும்
✔️ மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு எழுத்து முறையீடு செய்யலாம்
✔️ தேசிய பேரழிவு நிவாரண ஹாட்லைனில் தொடர்பு கொள்ளலாம்
✔️ ஊழல்/அநீதி இருந்தால் மேல் அதிகாரியிடம் புகார் செய்யவும்


9️⃣ மோசடிகளிலிருந்து கவனமாக இருங்கள்

❌ கமிஷன் கேட்பவர்களுக்கு பணம் தர வேண்டாம்
❌ எந்த கட்டணமும் இல்லை
❌ போலி விண்ணப்பங்களுக்கு கையொப்பமிட வேண்டாம்
❌ அடையாள அட்டை / வங்கி புத்தகம் யாருக்கும் கொடுக்க வேண்டாம்
✔️ பணம் அரசு ஊடாக மட்டுமே வரும்
✔️ வங்கி கணக்கில் நேரடியாக வர வேண்டும்


🔟 கூடுதல் உதவிகள்

அரசு + சர்வதேச அமைப்புகள் வழங்கக்கூடியவை:

✔️ உணவு பொதிகள்
✔️ உலர் உணவு
✔️ வீட்டு பழுது பொருட்கள்
✔️ கல்வி சாதனங்கள்
✔️ இலவச மருந்துகள்
✔️ ரெட் கிராஸ் / ஐ.நா / தொண்டு அமைப்புகள் உதவி

📌 இவை பற்றிய தகவல்களுக்கு உங்கள் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் விசாரிக்கவும்.


சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் நிச்சயம் கிடைக்கும்.
மோசடிகளிலிருந்து விலகி இருங்கள். அரசு அதிகாரிகள் மூலமாகவே செயல்படுங்கள்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
3 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
பிரித்தானியா

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. அவர்களின் 71வது பிறந்தநாள் – கென்ட், பிரித்தானியா பகுதியில் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

by Amizhthu 3 December 2025
written by Amizhthu

26/11/2025 உலகத்தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71வது பிறந்தநாள் நிகழ்வானது, தமிழீழ கலைபண்பாட்டுக் கழகத்தினரால் பிரித்தானியா கென்ட் பகுதியில் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
3 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

வடக்கு மாகாண ஆளுநர் நேற்று மாலை மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

by Amizhthu 3 December 2025
written by Amizhthu

சமீபத்தில் ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதநிலை களை நேரடியாக மதிப்பீடு செய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் நேற்று செவ்வாய்க்கிழமை (02-12-2025) மாலை மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அதன் போது ஆளுநர் நானாட்டான் பிரதேச செயலத்துக்குட்பட்ட அருகம் குண்று, மடுக்கரை உள்ளிட்ட அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களின் நிலை குறித்து நேரில் அறிந்துகொண்டார்.

வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், குடிநீர் மற்றும் மின்சாரம் தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் அவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உரையாடிய ஆளுநர் தேவையான நிவாரண உபகரணங்கள் மற்றும் உடனடி உதவிகளை வேகமாக வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மன்னார் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள உதவிகளை வழங்க அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும் என ஆளுநர் அவர்கள் உறுதியளித்தார்.

இந்த விஜயத்தில் மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் என கலந்து கொண்டனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
3 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 21,863 குடும்பங்களை சேர்ந்த 64098 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

by Amizhthu 3 December 2025
written by Amizhthu

தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இதன்காரணமாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1,312 குடும்பங்களை சேர்ந்த 4,124 நபரும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4,658 குடும்பங்களை சேர்ந்த 14,650 நபரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5,443 குடும்பங்களை சேர்ந்த 17,132 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5,476 குடும்பங்களை சேர்ந்த 15,395 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 2,418 குடும்பங்களை சேர்ந்த 5,868 பேரும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 2,556 குடும்பங்களை சேர்ந்த 6,932 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்றையதினம் (03) காலை 8.30 மணிக்கு வெளியிடப்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மக்கள் மீட்கப்பட்டு ஆறு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள 40 இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் உறவினர் வீடுகளில் 3,872 குடும்பங்களை சேர்ந்த 11,184 நபர்களும், இடைத்தங்கல் முகாம்களில் 1,186 குடும்பங்களை சேர்ந்த 3,537 நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
3 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

இந்தியாவில் ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ சட்ட மசோதா குறித்து ஆலோசனை

by Amizhthu 3 December 2025
written by Amizhthu

 ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ சட்ட மசோதா குறித்து ஆலோசனை நடத்த வருமாறு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உள்ளிட்டோருக்கு பார்லி., கூட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டில் அடிக்கடி நடத்தப்படும் தேர்தல்களால் ஏற்படும் செலவுகளை குறைக்கவும், தேர்தல் நடத்தை விதிகளால் வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்படுவதை தடுக்கவும், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர் மட்ட குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது.

இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒருமனதாக ஏற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிச.,17ம் தேதி, பார்லி.,யில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பா.ஜ., – எம்.பி., சவுத்ரி தலைமையிலான பார்லி கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

சட்ட நிபுணர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் இந்தக் குழு தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், தேர்தல்களை நடத்தும் முழு அதிகாரம் படைத்த தலைமை தேர்தல் கமிஷனுடன் ஆலோசிக்க பார்லி., கூட்டுக் குழு முடிவு செய்துள்ளது.

எனவே, நாளை மற்றும் 17ம் தேதி நடக்கும் ஆலோசனையில் பங்கேற்க வருமாறு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினருமான கீதா கோபிநாத், மற்றொரு உறுப்பினரான சஞ்சீவ் சன்யால் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின், 23வது சட்ட கமிஷன் பிரதிநிதிகளிடமும் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு முன் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, டி.ஓய்.சந்திரசூட், யூ.யூ.லலித் மற்றும் ஜே.எஸ்.கேஹர் ஆகியோரிடமும் பார்லி., கூட்டுக் குழு ஆலோசனை நடத்தியது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
3 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • தமிழீழம்
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d