அமிழ்து
www.amizhthu.com
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

முதன்மை செய்திகள்

தமிழீழம்

யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பேருந்தில் இருந்த 69 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

by Amizhthu 29 November 2025
written by Amizhthu

யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிகொண்டது. அப் பேருந்தில் பயணம் செய்த 69 பேர் அனுராதபுரம் மற்றும் புத்தளம்  மாவட்டங்களுக்கு இடையிலான கலாஓயா பகுதியில் பாதுகாப்பாக கூரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள்  பாதுகாப்பாக  மீட்கப்பட்டு நொச்சிகாமம்  வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

இடர்மிகுந்த சூழலில் புத்தளம் மற்றும் அனுராதபுர  மாவட்ட  செயலாளர்கள் , விமானப்படை, கடற்படை இராணுவம், பொலிஸார் , அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும்  மீட்பு பணியாளர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு பயணிகளை பாதுகாப்பாக  மீட்டமைக்கு யாழ்ப்பாண மாவட்ட மக்கள் சார்பில் நன்றிகளை  தெரிவித்துக் கொள்கிறேன்.

சகல மாவட்ட அரச அதிபர்களுடனான  ஜனாதிபதியின் zoom கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தினுடைய வெள்ள நிலவரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்படி  விடயம்  ஜனாதிபதியின் கவனத்திற்கு  கொண்டு வரப்பட்டதுடன் ஜனாதிபதியின்  செயலாளர், அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.  .

பல்வேறு நெருக்கடிகள்,  இடர்பாடுகளுக்கு  மத்தியிலும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும்  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் என்ற வகையில் நன்றி கலந்த  பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
29 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கையில் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் சமூக ஊடகங்களில் பல போலியான தகவல்கள் பரவி வருகின்றன.

by Amizhthu 29 November 2025
written by Amizhthu

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் சமூக ஊடகங்களில் பல போலியான தகவல்கள் பரவி வருவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கருத்து வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த தகவல்கள் போலியானது எனவும் சீரற்ற வானிலையால் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் இவ்வாறான போலி தகவல்களை சமூக ஊடகங்களில் பரவ வேண்டும் எனவும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
29 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Video News - காணொளி செய்திகள்

ஒக்ஸ்போர்ட் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் என்னதான் நடக்கிறது??

by Amizhthu 29 November 2025
written by Amizhthu

ஒக்ஸ்போர்ட் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் என்னதான் நடக்கிறது??

What’s happening at the Oxford World Tamils History Centre?

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
29 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

பாலியல் தொழிலும் – விஜயின் அரசியலும் !

by Amizhthu 29 November 2025
written by Amizhthu

(முழுமையாக படித்து விட்டு கோபப்படுங்கள்)

இப்போதெல்லாம் நகரங்களில் புறவழிச் சாலைகளின் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் இருவர் என்ற கணக்கில் ஜொலிக்கும் உடை உடுத்தி, செல்போனில் ஃப்ளாஷ் லைட் எரியவிட்டு பாலியல் தொழில் செய்யும் பெண்களை பார்க்க முடிகிறது.

அவர்களை கடந்து போகும் போதெல்லாம் பல்வேறு சிந்தனைகள் மனதில் தோன்றும். தமிழர் மாண்பு, தமிழர் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் இவற்றின் மீது எப்போது இடிவிழத் தொடங்கியது ? என்ற நினைவு மனதை இரணமாக்கும்.

அந்த தொழில் செய்யும் பெண்களை நினைத்து நமக்கு கோபம் வரவேண்டுமா ? பரிதாபப் படவேண்டுமா ? என்ற கேள்விக்கு என்னிடம் இன்றளவும் பதில் இல்லை.

அவர்கள்மீது கோபம் கொண்டால் அவர்களை இந்த நிலைக்கு தள்ளிய சூழல் மீது கோபம் வேண்டும். அவர்கள் மீது பரிதாபம் கொண்டால் அவர்களை போல் இருக்கும் பலர் வேறு வேலைகள் செய்து வாழ்கிறார்களே என்ற எண்ணம் வருகிறது. அவர்கள் மீது கோபப்படுவதை விட…! அவர்களை நுகர்வோர்களாக பயன்படுத்தும் சமுதாய கழிவுகளை என்ன சொல்வது ?,

திருமணம் ஆகி மனைவியின் மீது மோகம் குறைந்த நிலையில் ஒருவரோ, அல்லது திருமணம் ஆகாமல் இருக்கும் இளவயதில் இருக்கும் ஒருவரோ அல்லது இந்த இரண்டிலும் இல்லாமல் தன்னுடைய அந்த நேரத் தேவைக்காக எதையும் செய்யலாம், அல்லது எதையும் மீறலாம் என்று நினைக்கும் வக்கிர புத்தி உள்ளவர்களாக இப்படி ஏதோ ஒரு வகையினர்தான் அவர்களின் நுகர்வோர். இவர்களுக்கு அறம், பொருள், கற்பு என எந்தவித சமுதாய நோக்கும் இல்லாமல் அந்த நேரத்து சுகம் என்பதை தாண்டி வேறு எதுவும் இல்லை.

இவற்றை தடுத்து நிறுத்தவேடிய காவல்துறைகள் மற்றும் பொது புத்தி இவர்களை அனுமதிப்பதோடு மட்டுமின்றி நுகர்வு பொருளாக பயன்படுத்தவும் செய்கிறது…

நிற்க… !

அரசியலில் தவெக…!

அன்றைய தினத்தில் காங்கிரசின் அடாவெடியை தடுக்க இல்லாத ஒன்றை தத்துவமாக வைத்து 1949 திமுக உருவானது. அதன் பிறகு தமிழகத்தில் உருவான எந்த கட்சிக்கும் தனித்த சித்தாந்த வரையறை என எதுவும் கிடையாது நாம் தமிழர் கட்சியை தவிர. திமுகவில் இருந்து அதிமுக, மதிமுக, தனியாக தேமுதிக, மக்கள் நீதி. மையம், என எல்லாம் பெயரில் சிறிய மாற்றங்களோடு வந்தனவே தவிர வேறு எதுவும் அவர்களே பேசி தங்களை பிரகடன படுத்திக்கொள்ள வில்லை.

திமுக = காங்கிரஸ் எதிர்ப்பு
அதிமுக = திமுக எதிர்ப்பு
மதிமுக = திமுக எதிர்ப்பு
மையம் = எதை எதிர்த்தது என தெரியவில்லை
அமமுக = EPS எதிர்ப்பு

நாம் தமிழர்க்கட்சியை பொறுத்தவரை தனித்த கொள்கை வரையறை கோட்பாட்டு பாதை, தனித்த தலைமை என எல்லாவற்றிலும் உயிர்ப்பு நிலை தத்துவத்தோடு களத்தில் உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் :

உண்மையில் இந்த கட்சியின் கொள்கை என்ன ?, சித்தாந்தம் என்ன ?, எதை எதிர்ப்பது ? எதை ஆதரிப்பது ? என எதுவும் புரியாமல், தன்னிடம் உள்ள திரைக்கவர்ச்சி என்ற ஒற்றை மூலதனம் எதுவும் இல்லை. அந்த சாலையோரத்தில் நிற்கும் பாலியல் தொழிலாளி போல்…! இந்த வார்த்தை உங்களுக்கு. மிகக் கடுமையாக தோன்றலாம். உற்றுப் பார்த்தால் உண்மை தெளிவு பெறலாம் !

கொள்கை தலைவர்கள் !
காமராஜர் = இந்திய தேசியம்
பெரியார் = இந்திய தேசியத்தை எதிர்த்த மாதிரி நடித்த திராவிட பேர்வழி
அம்பேத்கார் = சட்டம் ஒருக்கப்பட்டோர் விழிப்புணவு
வேலுநாச்சியார் = விடுதலை போராட்ட குறியீடு
அஞ்சலை அம்மாள் = தவெக வெளிபடுத்த வில்லை.

உண்மையில் அம்பேத்கார் அவர்களை மதித்தால் விஜய் கட்சி தலைவனாக இருக்க முடியாது. சட்டத்தை இயற்றியவர் கொள்கை தலைவராக கொண்டு, பிளாக் டிக்கெட் வருமானம், இலாட்டறி டிக்கெட் வருமானம் ஒருபுறம் என இவர்களின் தகுதி என்னவென்று பாருங்கள்.

கொள்கைத் தலைவர்களை வரிசை படுத்தி இவர்களால் கொள்கையை சொல்லவும் முடியாது, கொள்கையை வரிசைப்படுத்தி இவர்களால் கொள்கை தலைவர்களையும் சொல்ல முடியாது. ஏனென்றால் இவர்களிடம் கொள்கை என்ற ஒன்று கிடையாது.

காமராஜர் : இவர்களை பொறுத்தவரை தன்னை நேர்மையானவராக கட்டிக்கொள்ள, அவரை ஒரு சமுதாயத்தினராக பார்ப்பவர்களின் வாக்கினை பெற !

பெரியார் : தெலுங்கர்கள் மற்றும் நாயக்கர்களின் மற்றும் பிறமொழியாளர்களின் வாக்கினை பெற !

அம்பேத்கார் : ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கினை பெற !

வேலு நாட்சியார் : தென் மாவட்டங்களில் மறவர்களின் வாக்கினை பெற !

அஞ்சலை அம்மாள் : வட மாவட்டங்களில் வன்னியர்களின் வாக்கினை பெற !

அண்ணா : காஞ்சிபுரத்தில் மக்களை ஏமாற்ற !

செங்கோட்டையன் : மேற்கு மாவட்டங்களில் கவுண்டர்களின் வாக்கினை பெற !

கஸ்டமர்களின் பார்வையை ஈர்க்கும் வகையில் விதவிதமாக ஆடையணிந்து நிற்கும் சாலையோர பாலியல் தொழில்களுக்கும் இந்த அணுகுமுறைக்கும் என்ன வேறுபாடு உங்களால் காணமுடிகிறது ?

தேர்தல் வாக்குறுதியாக வீட்டுக்கு ஒரு கார் இலட்சியம், பைக் நிச்சயம் என்பதெல்லாம் ஒரு கோமாளி கூட சொல்ல மாட்டான். விஜயின் சமீபத்திய அறிக்கையின் படு வீட்டுக்கு 39 இலட்சம் தேவை படும். ஏற்கனவே ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 இலட்சம் டெபாசிட் செய்கிறேன் என்ற மோடியையே கோமாளியாக பார்த்த நாம், இந்த நாகரீக கோமாளியை எப்படி பார்ப்பது ?

எப்படியாவது அரியணை ஏறிவிட வேண்டும் என்ற வெறியை தவிர வேறு எதுவும் இல்லை. தன்னை பார்க்க வந்து 41 பேர் இறந்து போனார்கள் என்ற பெருந்துயரை ஒருவனால் எளிதாக கடந்துவிட முடியும் என்றால் அவன் எதற்கு சங்கடப் பட போகிறான் சொல்லுங்கள் ?

வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழில் செய்யும் ஒருவரால் அவருக்கும் அவரை நுகர்வு செய்யும் பயனாளருக்கும் மட்டுமே பாதிப்பு.

ஆனால் என்ன நடந்தாலும், எத்தனை பேர் செத்தாலும், கொள்கை, கோட்பாடு என எது இல்லாவிட்டாலும், பிளாக் டிக்கெட், இலட்டரி டிக்கெட் பணம் என்றாலும், சாதிக்கு ஒரு ஆள்களாக பிடித்தேனும் அதிகாரத்தை அடையவேண்டும் என்ற அரசியல் விபச்சாரம் நாட்டுக்கே, நாட்டு மக்களுக்கே ஆபத்தானது.

சாலையில் தன்னுடைய வயிற்று பிழைப்பிற்காக நிற்கும் பாலியல் தொழிலாளி போல…

எந்தவித தனித்த கொள்கை கோட்பாடு என எதுவும் இல்லாவிட்டாலும் அதிகாரத்தை அடைந்தே தீருவேன் என்ற வெறியோடு விஜய் நிற்கிறார் !

பாலியல் தொழிலாளியை நோக்கி சொல்லும் நுகர்வோர் போல, 50 வருட அரசியல் அனுபவம் கொண்டுள்ள செங்கோட்டையன் சென்றுள்ளார். இந்த பட்டியல் இனி நீளும் என்றே நினைக்கிறேன் !

அரசியலை ஒரு கவர்சி தொழிலாக மாற்றுகின்ற வேலையை துளிகூட அரசியல் அறிவற்ற விஜய் செய்கிறார் !

தேர்தல் களம் 2026 இவர்களுக்கு சரியான பதிலைச் சொல்லும் !

வேறு வழியில்லை என்ற நிலையில் அந்த வேலையை செய்யும் பாலியல் தொழிலாளிகளை கூட மன்னித்து அவர்களை நல்வழி படுத்தி விடலாம். ஆனால் விஜய் போன்றோர்கள் மன்னிக்க கூடாது !

நன்றி

தமிழம் செந்தில்நாதன்
29-11-2025

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
29 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘தித்வா’ புயல் காரணமாக இலங்கையில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

by Amizhthu 29 November 2025
written by Amizhthu

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘தித்வா’ புயல் காரணமாக இலங்கையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதுவரை அங்கு மழை தொடர்பான விபத்துகளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள, ‘டிட்வா’ புயலால், நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது.

திருகோணமலை, பதுல்லா, மாத்தறை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டியதால் திறந்து விடப்பட்டுள்ளன.

தேயிலை தோட்டங்கள் நிறைந்த பதுல்லா மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில், 16 பேர் உயிருடன் புதைந்தனர். இலங்கையில் வெள்ளம், நிலச்சரிவால் இதுவரை, 56 பேர் பலியாகி உள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும், 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பி விடப்பட்ட விமானங்கள் மாயமான 21 பேரை தேடும் பணி முழு வீச்சில் நடக்கிறது. பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதால், ரயில் சேவையும் முடங்கி உள்ளது. மேலும், விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மணிக்கு, 90 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

‘டிட்வா’ புயல் காரணமாக, இலங்கை செல்ல வேண்டிய ஐந்து விமானங்கள் கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

துபாய் மற்றும் தோஹாவிலிருந்து தலா ஒரு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், அபுதாபியிலிருந்து எத்தியாட் ஏர்வேஸ் விமானம், கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் திருப்பி விடப்பட்டது.

மும்பையில் இருந்து கொழும்பு புறப்பட்ட இண்டிகோ விமானமும், மோசமான வானிலை காரணமாக, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்தியா துணை நிற்கும்: பிரதமர் மோடி

சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட பதிவு: ‘டிட்வா’ புயலால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு என் இரங்கல்கள். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களும் விரை வில் மீண்டு வர என்னுடைய பிரார்த்தனைகள். இந்த நெருக்கடியான நேரத்தில், ‘ஆப்பரேஷன் சாகர் பந்து’வின் கீழ், கப்பலில் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான மனிதாபிமான உதவிகளை இந்தியா அவசரமாக அனுப்பி உள்ளது. நிலைமை மேம்படவும் மேலும் உதவிகள் வழங்கவும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
29 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இரத்த தானம் வழங்க முன்வருமாறு இலங்கை தேசிய இரத்தமாற்று சேவை நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

by Amizhthu 29 November 2025
written by Amizhthu

அனர்த்த நிலை காரணமாக இரத்த வங்கி ஊடாக மேற்கொள்ளப்படும் இரத்த விநியோகம் ஸ்தம்பிதம். இரத்த தானம் வழங்க முன்வருமாறு தேசிய இரத்தமாற்று சேவை நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக நாரஹேன்பிட்ட தேசிய இரத்த மத்தியஸ்தானத்திற்கும், அதிக இரத்தம் தேவைப்படும் பின்வரும் இரத்த வங்கிகளுக்கும் இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதன்படி, நாரஹேன்பிட்டி தேசிய இரத்த மத்தியஸ்தானத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை  ( 011 236 9931, 011 722 0677) இரத்த தானம் வழங்க முடியும்.

காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

ராகம போதனா வைத்தியசாலை – 011 296 0535/ 011 2959261
மகரகம ஹோப் வைத்தியசாலை – 011 284 9525/ 011 289 7377
கப்பல் அனுப்புதல் – 021 2223063/ 021 2222261
குருநகலை – 037 2229617/ 037 2223873
அநுராதபுரம் – 025 2222261/ 025 2236424
கண்டி – 081 2203100/ 081 2222261
பதுளை – 055 2222124/ 055 2222261
அம்பாந்தோட்டை – 047 2222016/ 047 2220261
கருப்பு – 034 2222261/ 034 2236529
இரத்னபுர – 045 2226592/ 045 2222261
திருகோணமலை – 026 2231385/ 026 2222600
காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலை (091 2226066/ 091 2232267)
மாத்தறை கம்புருகமுவ தெற்கு இரத்த மையத்தில் (041 3415665) ஆகிய இடங்களில்  இரத்த தானம் வழங்க முடியும்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
29 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கையில் சீரற்ற வானிலை: காவல்துறை அவசர தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

by Amizhthu 29 November 2025
written by Amizhthu

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் அனர்த்த சூழ்நிலைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க தொலைபேசி இலக்கங்கள்  பொலிஸ் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவுகள், வெள்ளம் மற்றும் பலத்த காற்று ஆகியவற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான, அவசர காலங்களில், நாடு முழுவதும் அமைந்துள்ள 47 பொலிஸ் பிரிவுகளின் செயல்பாட்டு அறைகளுக்கு பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்கலாம். 

பொலிஸ் பிரிவுகளின் செயல்பாட்டு அறைகளின் தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
29 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

🚨களனி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவசரகால வெளியேற்ற அறிவுறுத்தல்.

by Amizhthu 29 November 2025
written by Amizhthu

அடுத்த சில மணித்தியாலங்களில் களனி ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக, களனி மற்றும் அதனை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரித்து வருவதால் உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

களனி பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள மேவெல்ல, பெத்தியாகொட, சிங்காரமுல்ல, பேலியாகொட, வெலேகொட, ஹுணுப்பிட்டி வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முகாம்கள் அமைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து இடம்பெயரும் மக்களுக்கு தங்குமிட வசதிகள் கீழ்க்கண்ட பாதுகாப்பு முகாம்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன:

  • களனி ரஜமகா விகாரை – விகாரமஹாதேவி ஓய்வு மண்டபம்
  • குருகுல மகா வித்தியாலயம்
  • தர்மாலோக வித்தியாலயம்
  • தர்மதாஸ மகா வித்தியாலயம்
  • ஜயதிலகாரம வித்தியாலயம்
  • வெதமுல்ல வித்தியாலயம்
  • துட்டுகெமுனு வித்தியாலயம்
  • வெவிபார விகாரை

பாதுகாப்பு முகாம்களில் குடிநீர், உணவு, மருத்துவ உதவி மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கமும், மீட்பு பணிப்பிரிவுகளும் மக்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுதல்கள் வழங்கி வருவதால், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
29 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
புலம்பெயர் தமிழர்கள்

தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025 – சுவிஸ்

by Amizhthu 29 November 2025
written by Amizhthu

மாவீரர் நாள் 2025 சுவிஸ் – (படங்கள்)

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
29 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
கட்டுரைகள்

பேரழிவு நேரங்களில் மொழி புறக்கணிப்பு : இலங்கையின் மிகப் பெரிய தொடர்ச்சியான தேசிய தோல்வி

by Amizhthu 28 November 2025
written by Amizhthu

அறிமுகம் : இயற்கை தாக்கும் வேளையிலும் அரசு தொடரும் பாகுபாடு

இலங்கை இன்று மீண்டும் ஒரு பேரழிவு சூழ்நிலையை எதிர்கொள்கிறது. கனமழை, வெள்ளம், மண்சரிவு, மக்கள் இடப்பெயர்ச்சி – ஆயிரக்கணக்கான உயிர்கள் அபாயத்தில் உள்ளன. இத்தகைய தருணங்களில் சரியான, துல்லியமான மற்றும் உடனடியான தகவல் பரிமாற்றம் நிர்வாகச் செயல் மட்டுமல்ல; அது உயிர் மற்றும் மரணம் இடையிலான தீர்மானப் புள்ளியாகும்.

ஆனால் அத்தகைய சூழலிலும் கூட, பாசனத் திணைக்களம் தனது முக்கிய அறிவிப்புகளை சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டு, தமிழ் பேசும் மக்களை திட்டமிட்டவாறு புறக்கணிக்கிறது. இது ஒரு தொழில்நுட்பத் தவறல்ல. இது ஒரு சாதாரண நிர்வாகக் குறைபாடுமல்ல. இது கடந்த 75 ஆண்டுகளாக வேரூன்றிய கட்டமைப்பு பாகுபாட்டின் தெளிவான வெளிப்பாடாகும்.

இங்கே உண்மையான பேரழிவு இயற்கை வெள்ளம் அல்ல; தமிழரை சம உரிமையுள்ள குடிமக்களாக ஏற்க மறுக்கும் அரசின் தொடர்ச்சியான மனநிலையே ஆகும்.

பேரழிவு தொடர்பான தகவல் : உரிமையா? அல்லது தயவா?

ஒரு உண்மையான ஜனநாயக நாட்டில் பேரழிவு எச்சரிக்கைகள்:

• உடனடியானவை ஆக வேண்டும்

• அனைவருக்கும் அணுகக்கூடியவை ஆக வேண்டும்

• புரிந்துகொள்ளக்கூடியவை ஆக வேண்டும்

• மொழி சார்ந்த உள்ளடக்கச் சமத்துவத்துடன் அமைய வேண்டும்

மொழி என்பதே உயிர் காக்கும் தகவலின் முதன்மை ஊடகம். ஒரு நாடு இரண்டு மொழிகளில் மட்டுமே உயிர் காக்கும் அறிவிப்புகளை வெளியிடும்போது, அது நடைமுறையில்:

• ஒரு மக்களின் வாழ்வுரிமையை மறுக்கிறது

• பாதிப்புக்கு அவர்களை திட்டமிட்டு உட்படுத்துகிறது

• குடிமக்களுக்கிடையில் படிநிலை அமைக்கிறது

வெள்ள அபாயம் நிறைந்த பிரதேசங்களில் வாழும் தமிழ் சமூகங்கள் இதன் நேரடி பலியாட்களாக மாறுகின்றனர். அவர்களுக்கு தகவலை மறுப்பது என்பது பாதுகாப்பைப் பறிப்பதற்குச் சமம்.

இது நிர்வாக அலட்சியம் அல்ல; இது நிறுவன வன்முறை.

மொழி ஒடுக்குமுறையின் வரலாற்றுத் தொடர்ச்சி

இந்த சம்பவத்தை தனித்த நிகழ்வாகக் காண முடியாது. இது இலங்கையின் நீண்டகால மொழி அரசியலின் தொடர்ச்சியே:

• 1956 ஆம் ஆண்டு “சிங்களம் மட்டும்” சட்டம் தமிழரின் மொழி உரிமைகளை அடித்து நொறுக்கியது.

• அரசு சேவைகள், காவல் துறை, நீதித்துறை மற்றும் அவசர நடவடிக்கைகள் தொடர்ச்சியாக சிங்கள மையப்படுத்தப்பட்டன.

• தமிழுக்கு வழங்கப்படும் அக்கறை பெரும்பாலும் காட்சிப்படுத்தலாக மட்டுமே இருந்து வந்துள்ளது.

இன்றைய பேரழிவு எச்சரிக்கை மொழி புறக்கணிப்பு, அதே பழைய சிந்தனை முறையின் நவீன வடிவமாகும்: தமிழ் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல – விருப்பத் தேர்வு மட்டுமே.

அரசின் மனோபாவம் : ஆபத்தான அலட்சியத்தின் உளவியல்

இங்கே மிக அபாயகரமானது மொழி இல்லாமை மட்டும் அல்ல; அதன் பின்னிலுள்ள மனநிலையே:

• “தமிழர்கள் எப்படியும் சமாளித்துக் கொள்வார்கள்” என்ற எண்ணம்

• ஆங்கிலம் அனைவருக்கும் புரியும் என்ற தவறான ஊகம்

• சிங்கள மக்கள் முதன்மை என்ற மறைமுக ஆதிக்க உணர்வு

இது அறியாமை அல்ல; இது தமிழரை காண மறுக்கும் திட்டமிட்ட அரச மனநிலை.

மொழி புறக்கணிப்பின் உயிர்ப்பழிவு விளைவுகள்

பேரழிவு நேரங்களில் மொழி தடைகள் உருவாக்கும் விளைவுகள்:

• இடப்பெயர்வு தாமதம்

• எச்சரிக்கை நிலைகளை தவறாக புரிந்து கொள்வது

• பாதுகாப்பு முகாம்களை அடையத் தவறுதல்

• உயிரிழப்புகள்

• மன உளைச்சல் மற்றும் பயம்

கிராமப்புற தமிழ் சமூகங்களுக்கு இது மரணம் – வாழ்வு என்ற இரட்டைத் தீர்ப்பாக மாறுகிறது.

உலகளாவிய நெறிமுறைகளும் இலங்கையின் தோல்வியும்

சர்வதேச பேரழிவு மேலாண்மை தரநிலைகள் வலியுறுத்துவது:

• மொழிச் சமத்துவ தகவல் பரிமாற்றம்

• சமூக மையமயமான அறிவிப்பு அமைப்புகள்

• பண்பாட்டு உணர்வுடன் கூடிய செயல்முறைகள்

ஆனால் இலங்கை இவற்றை வெளிப்படையாக மீறிக் கொண்டே, உலக அரங்கில் “ஒத்திசைவுச் சமூக நாடு” என்ற முகமூடியை அணிகிறது.

உண்மையான பேரழிவு : 75 ஆண்டுகளான இடைவிடா அவமதிப்பு

இயற்கை தாக்கும் போதும் தமிழரை புறக்கணிக்கும் அரசு, ஒற்றுமை பற்றி பேசுவது மிகப் பெரிய பரிதாபம்.

தமிழ் மக்கள் 75 ஆண்டுகளாக அனுபவித்தவை:

• மொழி ஒடுக்குமுறை

• பண்பாட்டு அழிப்பு

• அரசியல் புறக்கணிப்பு

• இராணுவமயமாக்கல்

• நிர்வாக அக்கறையின்மை

இப்போது கூட, உயிர் காக்கும் தகவலிலும் தமிழர் மறுக்கப்படுகிறார்.

உடனடி மாற்றங்கள் அவசியம்

• அனைத்து பேரழிவு அறிவிப்புகளும் மூன்று மொழிகளில் கட்டாயம் வெளியிடப்பட வேண்டும் (தமிழ், சிங்களம், English).

• மொழி புறக்கணிப்பை செய்த நிறுவனங்கள் சட்டப் பொறுப்பேற்க வேண்டும்.

• “பல மொழி அவசர தகவல் ஆணையம்” உருவாக்கப்பட வேண்டும்.

• தமிழ் பேசும் பிரதேசங்களில் நேரடி குறுஞ்செய்தி அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

• அனைத்து அவசர நிர்வாகத் துறைகளிலும் தமிழ் மொழி அதிகாரிகள் இருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

முடிவுரை : மக்களிடம் பேசாத அரசு அவர்களை காப்பாற்றவும் இயலாது

பேரழிவு நேரங்களில் தன் மக்களுடன் அவர்களின் மொழியில் பேச மறுக்கும் அரசு, அவர்களை பாதுகாக்கும் நெறிமுறையையும் இழக்கிறது.

தமிழ் மக்கள் சிறப்பு உரிமை கேட்கவில்லை.
அவர்கள் உயிர் உரிமையை மட்டுமே வலியுறுத்துகிறார்கள்.

வெள்ளம் ஒருநாள் வடியும்.
ஆனால் தமிழர்மேல் தொடரும் பாகுபாட்டின் வெள்ளம் இன்னும் பெருக்கெடுக்கிறது.

இதுவே இலங்கையின் உண்மையான தேசிய பேரழிவு.

எழுதியவர் 
ஈழத்து நிலவன்
28/11/2025

Linguistic Exclusion in Times of Disaster: Sri Lanka’s Greatest Ongoing National Failure

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
28 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
கட்டுரைகள்

Linguistic Exclusion in Times of Disaster: Sri Lanka’s Greatest Ongoing National Failure

by Amizhthu 28 November 2025
written by Amizhthu

Introduction: When Nature Strikes, the State Still Discriminates

Sri Lanka is once again facing a disaster situation. Heavy rainfall, floods, landslides and displacement threaten thousands of lives. At such moments, accurate and timely communication is not merely an administrative duty — it is a matter of life and death. Yet, in a shocking display of institutional arrogance and historical continuity of discrimination, the Irrigation Department continues to issue critical disaster warnings only in Sinhala and English.

This is not a technical oversight. It is not a minor procedural lapse.
It is a deliberate manifestation of a 75-year-old structural mindset that marginalises Tamil-speaking citizens even in moments of national emergency.

The real disaster here is not only the flood itself — it is the persistent refusal of the Sri Lankan state to recognise Tamil people as equal citizens entitled to protection, information, and dignity.

Disaster Communication is a Human Rights Obligation, Not a Privilege

In any functioning democratic state, disaster warnings must be:

• Immediate

• Accessible

• Understandable

• Inclusive

Language is the primary medium through which survival instructions are conveyed. When a government issues life-saving information in only two languages, excluding the native language of a significant population, it effectively:

• Withholds the right to life

• Endangers vulnerable communities

• Creates a hierarchy of citizens

Tamil-speaking people are not passive observers; they live in flood-prone districts, plantation regions, coastal areas, and rural zones that are often the first to be devastated. To deny them real-time information is to expose them intentionally to risk.
This is state negligence cloaked as bureaucratic routine.

A Historical Pattern of Linguistic Oppression

This incident cannot be isolated from Sri Lanka’s long history of institutionalised linguistic discrimination:

• The 1956 Sinhala Only Act laid the foundation for exclusion.

• Public services, government forms, police communication, and emergency responses have consistently prioritised Sinhala.

• Token recognition of Tamil has remained symbolic rather than operational.

What we witness today is simply the modern expression of an old ideology: Tamil inclusion is optional. Sinhala dominance is permanent.

Even after decades of civil war, international pressure, constitutional amendments, and promises of reconciliation, the state apparatus continues to behave as if Tamil lives are administratively inconvenient.

The Psychology of State Arrogance

The most alarming aspect is not merely the absence of Tamil communication, but the mindset behind it:

• A belief that Tamil people can “manage somehow”

• An assumption that English is universally accessible

• A subconscious hierarchy where Sinhala speakers receive priority protection

This is not ignorance. This is systemic numbness to Tamil existence.

When a government cannot ensure basic multilingual disaster alerts, it demonstrates not only incompetence but also moral bankruptcy.

The Deadly Consequences of Linguistic Exclusion

Language barriers in disaster situations lead to:

• Delayed evacuation

• Misunderstanding of warning levels

• Failure to access relief centres

• Increased casualties

• Psychological trauma

For rural Tamil-speaking communities, especially the elderly, women, and daily wage earners, this exclusion can mean the difference between survival and death.

In practical terms, language discrimination becomes structural violence.

International Standards and Moral Failure

Globally accepted disaster management principles emphasise:

• Inclusive risk communication

• Community-based multilingual alerts

• Cultural and linguistic sensitivity

Sri Lanka openly violates these principles while continuing to portray itself internationally as a post-conflict democracy committed to reconciliation.
This contradiction exposes a fundamental truth: The state’s problem is not logistics — it is ideology.

The Real Disaster: 75 Years of Institutional Contempt

What greater irony than a nation preaching unity while systematically excluding a major linguistic community from even disaster warnings?

For 75 years, Tamil people have endured:

• Cultural erosion

• Linguistic suppression

• Political marginalisation

• Militarisation

• Administrative hostility

And now, even when water rises and lands collapse, the state still chooses discrimination.

This is not governance. This is structural neglect.

What Must Change Immediately

• Mandatory trilingual disaster alerts (Tamil, Sinhala, English).

• Legal accountability for government departments that fail in inclusive communication.

• Establishment of a Multilingual Emergency Communication Authority.

• Real-time SMS and broadcast systems in Tamil-controlled regions.

• Recruitment of Tamil language officers in all disaster management units.

Anything less is deliberate negligence.

Conclusion: A State that Fails to Speak to Its People Has Ceased to Protect Them

When a government refuses to speak to its citizens in their own language during a life-threatening crisis, it reveals the true hierarchy of its compassion.

Tamil-speaking people are not asking for privilege.
They are demanding survival.

The flood will eventually subside.
But the deeper flood — of discrimination, silence, and systemic indifference — continues to drown the foundations of justice in Sri Lanka.

And that is the true national tragedy.

『Written by  Eelaththu Nilavan』
                28/11/2025

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
28 November 2025 1 comment
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

வங்காள விரிகுடாவில் உருவான ‘தித்வா’ புயல் நாளை மறுநாள் சென்னையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

by Amizhthu 28 November 2025
written by Amizhthu

வங்கக்கடலில் இலங்கை அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை, ‘தித்வா’ புயலாக வலுவடைந்தது. இது, நாளை மறுநாள் சென்னையை நெருங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பி.அமுதா கூறியதாவது:


தென்மேற்கு வங்கக்கடலில், தெற்கு இலங்கை அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது, நேற்று காலை, ‘தித்வா’ புயலாக வலுவடைந்தது. ‘தித்வா’ என்றால் நீர்பரப்பு என பொருள் கூறப்படுகிறது. ஏமன் நாட்டின் பரிந்துரை அடிப்படையில் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நேற்று மதியம் நிலவரப்படி, சென்னையில் இருந்து 700 கி.மீ., தொலைவில், புதுச்சேரியில் இருந்து 610 கி.மீ., தொலைவில் தித்வா புயல் மையம் கொண்டிருந்தது. மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்த இந்த புயல், நேற்று பிற்பகல் முதல் மெதுவாக நகரத் துவங்கியுள்ளது.

இந்த புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில், நாளை மறுதினம் சென்னை, புதுச்சேரி கடலோர பகுதிகளை நெருங்க வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது, அடுத்தடுத்த நகர்வுகள் அடிப்படையில் தெரிய வரும்.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலுார், கடலுார் மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், அடுத்த ஐந்து நாட்களுக்கு பலத்த சூறாவளி வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். – இவ்வாறு அவர் கூறினார்.

கரையை கடப்பது எங்கே? வங்கக்கடலில் இலங்கை அருகில் உருவாகியுள்ள தித்வா புயல், வடக்கு, வடமேற்கு திசையில் நகர்கிறது. நேற்றைய நிலவரப்படி, அதன் உத்தேச பாதை விபரத்தை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, நாளை மறுதினம் தித்வா புயல் சென்னையை நெருங்கி வர வாய்ப்புள்ளது. ஆனால், இங்கு கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. சென்னையை கடந்த பின், தித்வா புயல் ஆந்திரா நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புயல் கரையை கடக்காமல் கடலில் இருக்கும் நிலையில், கடலோர மாவட்டங்களில் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
28 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d