கடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன் / கப்டன் சிதம்பரம் | 04.05.1991

கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன், கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் வீரவணக்க நினைவுகளோடு..

பெரியதம்பி சந்திரன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 20.12.1972
வீரச்சாவு: 04.05.1991
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்

துயிலுமில்லம்: எள்ளங்குளம்
துயிலும் நிலை: நினைவுக்கல்


யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் 04.05.1991 அன்று சிறிலங்காக் கடற்படையின் கட்டளைக் கப்பலான “அபிதா” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன், கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவுகளுடன்..

சம்புக்குட்டி பத்மநாதன்
சோதிபுரம், மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: ..
வீரச்சாவு: 04.05.1991
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்

துயிலுமில்லம்:
துயிலும் நிலை:


யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடலில் 04.05.1991 அன்று எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன் ஆகிய மாவீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம்.

1988 – 1989 ஆண்டுகளில் ரோஹணவிஐய வீர, உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஐயரத்தினா கூறியிருந்தார்.

இந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன் விஐயரத்தினா பத்திரிக்கையாளர்களிடம் சாவுக்கஞ்சாத விடுதலைப்புலிகளின் தொடர்தாக்குதல்களால் சிறிலங்கா படைகளுக்கு பெரும் அச்சமும் சேதமும் ஏற்படுகிறது என்றார்.

தென் தமிழீழம் , மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் அவர்களின் பெயரில் தமிழீழ போரியல் வரலாற்றில் “ஜெயந்தன் படையணியாக” தடை எனும் பகை மோதி பல களங்களில் வியக்கத்தக்க சாதனைகள் படைத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

வீரவேங்கை ரமேஸ் 10.03.1989

38 ஆம் ஆண்டு வீரவணக்கம் “யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான்” 03.03.2026

​27.02.2007 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் காவியம் படைத்த கடற்கரும்புலிகள் நினைவில்.