Tuesday, March 31, 2026

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் “தியாக தீபம் திலீபனின் 3ஆம் நாள் நினைவேந்தல்” நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

0 comments

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி உணவையும் நீரையும் தவிர்த்து திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். 

அவரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில், 12ஆவது நாளான 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு தியாக தீபம் உயிர் நீத்தார்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00