ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7:08 ஆக பதிவானது.

ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 5-ம் தேதியன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எதிரொலியாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 7: 08 ஆக பதிவானது. கம்சட்கா பகுதி யில் கடலுக்கு அடியில் 128 கி.மீ. ஆழத்தில் (80 மைல்) மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக யு.எஸ்.ஜி.எஸ். எனப்படும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தல் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின. சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.

Related posts

சிங்கள கைக்கூலி, தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி!

நீதியை நோக்கிய பேரணி – லண்டன்

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 41வது ஆண்டு நினைவு நாள் உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.