ஒடிசாவில் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

ஒடிசாவில் பஸ்சும், லாரியும் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு லாரியும் பயணிகளுடன் சென்ற பஸ்சும் மோதி, காலை 11 மணிக்கு விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர். பின்னர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் பாசுதேவ் பெஹெரா கூறுகையில், ”சாலையில் பழுதுபார்க்கும் பணி காரணமாக பஸ் தவறான பாதையில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. ரூர்கேலாவிலிருந்து கொய்டாவுக்குச் சென்று கொண்டிருந்த போது பஸ் விபத்தில் சிக்கி உள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது”, என்றார்.

Related posts

32 ஆம் ஆண்டு மாபெரும் தமிழர் விளையாட்டு விழா – பிரித்தானியா

இன உணர்வோடும், மொழிப் பற்றோடும் தமிழை வளர்த்து வரும் புதிய விடியல் குழு அமைப்பின் அரும்பணி தொடர என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துகள்! – செந்தமிழன் சீமான்

உருவெடுத்து வரும் யூரேசிய அச்சு: புடின் – சி ஜின்பிங் கூட்டணியும் மேற்கத்திய உலக ஒழுங்குடன் வேகமெடுக்கும் மோதலும்