மாத்தறை, வெல்லமடம பகுதியில் வீதி தடையினை மீறி வாகனம் ஓட்டிச் சென்ற கார் மீது பொலிஸார்  துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸார், காரை நிறுத்துமாறு உத்தரவிட்டபோதும் உத்தரவை மீறி காரினை தொடர்ந்து ஓட்டிச் சென்ற நிலையில் இந்த துப்பாக்கி பிரேயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்ட கார், மாத்தறை, ஜனராஜ மாவத்தை பகுதியில்  கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த காரில் பயணித்தவ இருவரும் தப்பிச் சென்ற நிலையில் மோட்டார் வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!