வெலிமடை – பதுளை வீதியில் எட்டம்பிட்டிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (07.10.2025) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறி ஒன்றும் கார் ஒன்றுமே இவ்வாறு தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவரேனும் ஒருவர் இரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கையின் இன்றைய வானிலை!

இலங்கையில் கணினி குற்றங்கள் தொடர்பாக 198 வெளிநாட்டினர் கைது!

இலங்கையின் அந்நிய செலாவணி மாற்று விகிதங்கள்