தமிழக அரசு விரைவு பஸ்களில், பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது

இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

அரசு விரைவு பஸ்களில், 90 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கான முன்பதிவு துவங்கி உள்ளது.

கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் வாயிலாக, ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். வரும் 2026 ஜன., 14ல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு செல்வர். அவர்கள் இப்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

விரைவு பஸ்களில் முன்பதிவு அதிகம் இருந்தால், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சிறப்பு பஸ்கள் அறிவிப்பு, ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

அரசு போக்குவரத்துக் கழகத்தின், www.tnstc.in என்ற இணையதளம் அல்லது அதன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.