யாழ். சுன்னாகம் உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து திங்கட்கிழமை (03.11.2025) உயிர்மாய்த்துள்ளார்.

உடுவில், மல்வம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார்.

இந்த நபர் இதற்கு முன்னரும் ஒரு தடவை உயிர்மாய்க்க முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 41வது ஆண்டு நினைவு நாள் உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் இரத்தக் கறை

பிரிகேடியர் சொர்ணம் : தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் “எதிர்த்தாக்குதல் தளபதி” — தமிழ் மக்களின் வீரம், நிமிர்வு மற்றும் அடங்காச் செருக்கின் அடையாளம்