இலங்கைக்கு மீண்டும் ரெட் அலர்ட், கனமழை எச்சரிக்கை

இலங்கையைச் சுற்றி உருவாகியுள்ள டித்வா ‘Ditwah’ சூறாவளிப் புயல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மோசமான வானிலையியல் சூழ்நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் அதிகபட்ச மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாட்டின் சில மாகாணங்களில் 200 மில்லிமீற்றரை மீறும் மிக கன மழை பெய்யும் என்றும் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட வேகத்தில் பலத்த காற்றும் சில மாகாணங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்றடிக்கும் அபாயம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல இடங்களில் உயர் அபாய நிலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • திடீர் வெள்ளப்பெருக்கு
  • நிலச்சரிவு
  • மரங்கள் சாய்வது/வீழ்வது
  • கடல் பகுதிகளில் மிகவும் கடுமையான அலை
    ஏற்கனவே பதிவான மிக கன மழை அளவுகள்
  • வவுனியா – செடிக்குளம் – 315 மிமீ
  • முல்லைத்தீவு, அலம்பில் – 305 மிமீ
  • கண்டி – 223.9 மிமீ
  • மன்னார், மடு – 218.5 மிமீ
  • இரத்தினபுரி – 208 மிமீ

பொது மக்களுக்கு அறிவுறுத்தல்:

  • அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்
  • அதிகாரிகள் வழங்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும்
  • வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்

Related posts

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு, சத்தியம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் அவசியம் என பிரிட்டன் வலியுறுத்துகிறது!

சர்வதேசப் பங்கேற்புடன் கூடிய ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன!

இன்னும் காலம் கடந்துவிடவில்லை – சமூகங்களைப் பாதுகாத்து வலுப்படுத்தும் ஒரு சட்டத்தை நம்மால் உருவாக்க முடியும்.