“இந்தியா யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியாது” – ஜெய்சங்கர்.

கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: உலகளாவிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு தற்போது சீனாவில் நடைபெறுகிறது. எரிசக்தியைப் பொறுத்தவரை, அமெரிக்கா இறக்குமதியாளராக இருந்து தற்போது ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. அமெரிக்காவும், சீனாவும் உலகின் விதிகளை மாற்றியுள்ளன. அமெரிக்கா மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு உள்ளது.

உலகம் முழுவதும் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியா அமைதியாக இருக்காது. இந்தியா இப்போது தனது பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.இப்போது உலகில் நமது செல்வாக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2014க்கு முன்பு, அத்தகைய சிந்தனை இல்லை. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதை எங்களது நோக்கம். இதற்கு தான் நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்.

தொழில்துறையில் வளர்ச்சியை கொண்டு வர வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும். இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலகளவில் முக்கிய பொறுப்புகளை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியா யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியாது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

Related posts

கடவுச்சீட்டு குடியுரிமைக்கான ஆவணம் அல்ல: இந்திய மத்திய அரசு

இந்தியாவின் பீகாரில் நடைபெற்ற நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததற்காக 30 பேர் கைது!

இந்தியா தற்காலிகமாக டெலிகிராமை முடக்கியது: தேர்வு மோசடி விசாரணை தீவிரம்