காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது; இந்திய ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாத குழுவினர் ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினர் முறியடித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில், உள்ள எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஒரு பயங்கரவாதக் குழு நாட்டிற்குள் ஊடுருவ முயற்சிப்பதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் எச்சரித்தனர்.

பின்னர் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. எல்லை பாதுகாப்புப் படையினர் அந்தக் குழுவை வெற்றிகரமாக சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகள் 3 பேர் சரணடைந்தனர்.

அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு ஏகே-47 ரக துப்பாக்கிகள், மூன்று கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் தொலைபேசிகள் ஆகியவை அடங்கும். அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது.

Related posts

விடுபட வேண்டிய போதைகள் ! சினிமா போதையா? மது போதையா ?

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!