கொழும்பில் வாள்களுடன் இளைஞர் கைது!

கொழும்பில் மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலிவத்த பிரதேசத்தில் வாள்களுடன் இளைஞன் ஒருவன் மட்டக்குளி பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (09-01-2026) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரான இளைஞனிடமிருந்து 10 வாள்களும் 16 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!