கொழும்பில் வாள்களுடன் இளைஞர் கைது!

கொழும்பில் மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலிவத்த பிரதேசத்தில் வாள்களுடன் இளைஞன் ஒருவன் மட்டக்குளி பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (09-01-2026) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரான இளைஞனிடமிருந்து 10 வாள்களும் 16 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு, சத்தியம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் அவசியம் என பிரிட்டன் வலியுறுத்துகிறது!

சர்வதேசப் பங்கேற்புடன் கூடிய ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன!

இலங்கையின் இன்றைய வானிலை!