கொழும்பில் வாள்களுடன் இளைஞர் கைது!

கொழும்பில் மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலிவத்த பிரதேசத்தில் வாள்களுடன் இளைஞன் ஒருவன் மட்டக்குளி பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (09-01-2026) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரான இளைஞனிடமிருந்து 10 வாள்களும் 16 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!