பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 வயதான நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பொலன்னறுவை, வெலிகந்தை பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் வழக்கமான கடமைகளின் போது சந்தேக நபர் பொலிஸ் உத்தரவுகளை மீறி முன்னேறியதுடன், அதிகாரிகளை கூர்மையான ஆயுதங்களால் தாக்க முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தங்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த 28 வயதான நபர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை – வெலிகந்தை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும், சம்பவத்தின் முழு பின்னணியை கண்டறிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.