வங்கக்கடலில் காவியமான தளபதி கிட்டு உட்பட 10 வீரர்களின் 33 வது நினைவேந்தல் நிகழ்வு – நல்லூர்

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வங்கக்கடலில் காவியமான தளபதி கிட்டு உட்பட 10 வீரர்களின் 33 வது நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 16.01.2026 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்திருக்கும் கிட்டுப் பூங்காவில் நடைபெறும்.

இந் நினைவேந்தல் நிகழ்வில் சிறப்பம்சமாக நல்லூர் தியாக தீபம் திலீபன் ஆவணக் காப்பத்தினால் உருவாக்கப்பட்ட ‘கிட்டு ஒரு தனி மனித வரலாறு’ என்னும் தொனிப் பொருளுடன் தளபதி கிட்டுவின் வாழ்வியல் தொடர்பான ஆவணக் காட்சியமுகம் திறந்து வைக்கப்படும்.

நன்றி

போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும்
நல்லூர் தியாக தீபம் திலீபன் ஆவணக் காப்பகம்

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.