தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து தியாகிகளின் தியாகத்தின் 33வது ஆண்டு நினைவு நாள் பெல்ஜியத்தில் நடைபெற்றது.

பெல்சியத்தில்  நடைபெற்ற தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு.  

தளபதி கேனல் கிட்டு உட்பட பத்து வீரவேங்கைகளின் 33 ஆவது  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திங்கள் (19.01.2025) அன்று பெல்சியத்தில்    உணர்வுபூர்வமாக  நினைவுகூரப்பட்டது. ஆரம்ப நிகழ்வுகளுடன் தளபதி கேணல். கிட்டு அவர்கள் ஆற்றிய போராட்ட, அரசியல் நகர்வுகள் பற்றிய சிறப்புரையை திருமதி பிரபாகாரி அவர்கள் வழங்கினார். தளபதி.கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகளைத் தாங்கிய கவிதைகள் மற்றும் பேச்சுக்கள் இடம்பெற்றது. தாயக எழுச்சிப் பாடல்களும் இசைக்கப்பட்டன. இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டு, எமது தாயக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” தாரக மந்திரத்துடன் இனிதே நிறைவு பெற்றது

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.