Wednesday, April 1, 2026

கண்டியில் யாசகப் பெண் கொடூரமாக கொலை!

0 comments

கண்டியில் துட்டைகைமுனு மவத்தை பகுதியில் இளைஞன் ஒருவன், யாசகப் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23-01-2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான இளைஞன் கண்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கண்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஆவார்.

யாசகப் பெண்ணுக்கும் இளைஞனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00