நடுவானில் துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கி துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் 236 பேருடன் புறப்பட்டது. காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட 4 நிமிடங்களில் அந்த விமானத்தின் வலதுபுறத்தில் இருந்த இன்ஜினில் தீப்பற்றி எரிவதை விமானி கவனித்து விட்டார்.உடனடியாக ஒரு இன்ஜினை அணைத்துவிட்டு, மற்றொரு இன்ஜின் உதவிடன் கோல்கட்டா விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த 225 பயணிகள் மற்றும் 11 ஊழியர்கள் என மொத்தம் 236 பேரும் உயிர் தப்பினர்.

தற்போது அந்த விமானம் கோல்கட்டாவில் தொழில்நுட்பப் பரிசோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

[இந்தப் படம் செயற்கை நுண்ணறிவு குழுவால் விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.]

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.