Home இந்தியாஇந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

by Amizhthu

ராஜஸ்தான் மாநிலம் பிவாடி நகரில் உள்ள தொழில்துறை பகுதியில் ரசாயன ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் இன்று (பிப்ரவரி 16) தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஆலையில் தீப்பற்றி மளமளவென பரவ தொடங்கியது. அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர், போலீசார் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் தீயில் கருகி தொழிலாளர்கள் ஏழு பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தீ பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீயில் கருகி உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காணும்படி நடந்து வருகிறது. உடல் முழுவதும் தீயில் எரிந்து உள்ளதால் அடையாளம் காணும் பணியில் சிக்கல் நீடிக்கிறது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00