இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி (David Lammy) கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரக குழுவினரை சந்தித்தார்.
இந்த சந்திப்பு, பிரித்தானியா – இலங்கை கூட்டுறவை தினந்தோறும் வலுப்படுத்துவதில் அயராது உழைக்கும் உயர்ஸ்தானிகரக பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் உற்சாகத்தையும் பாராட்டுவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி நடவடிக்கைகள், மனிதாபிமான உதவித் திட்டங்கள், வர்த்தக உறவுகள், தூதரக நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கும் மக்களுக்குமான தொடர்புகள் போன்ற பல்வேறு துறைகளில் உயர்ஸ்தானிகரக குழுவினர் மேற்கொண்டு வரும் பணிகள், பிரித்தானிய மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவை மேலும் விரிவுபடுத்தவும், பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இவ்வகை உயர் மட்ட சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.
- இந்த அரசு கடந்த ஆட்சியின் மதவாதப் போக்கைப் பின்பற்றக் கூடாது – சிவஞானம் சிறீதரன் எம்.பி.
- தமிழீழத் தேசிய நாட்டுப்பற்றாளர் நாள் 2026 – பிரான்ஸ்
- சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைத் திருத்துமாறு இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.
- தமிழகத்தில் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1480 உயர்வு!
- இலங்கையில் வாழும் மலையகத் தமிழ் மக்கள் இந்த நாட்டின் ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர்!
- அன்ரன் பாலசிங்கம் – சு. ப. தமிழ்செல்வன் – வணக்க நிகழ்வு 2025 – சுவிஸ்