இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி (David Lammy) கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரக குழுவினரை சந்தித்தார்.
இந்த சந்திப்பு, பிரித்தானியா – இலங்கை கூட்டுறவை தினந்தோறும் வலுப்படுத்துவதில் அயராது உழைக்கும் உயர்ஸ்தானிகரக பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் உற்சாகத்தையும் பாராட்டுவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி நடவடிக்கைகள், மனிதாபிமான உதவித் திட்டங்கள், வர்த்தக உறவுகள், தூதரக நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கும் மக்களுக்குமான தொடர்புகள் போன்ற பல்வேறு துறைகளில் உயர்ஸ்தானிகரக குழுவினர் மேற்கொண்டு வரும் பணிகள், பிரித்தானிய மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவை மேலும் விரிவுபடுத்தவும், பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இவ்வகை உயர் மட்ட சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.
- “டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக உள்ளது” – அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
- இந்த அரசு கடந்த ஆட்சியின் மதவாதப் போக்கைப் பின்பற்றக் கூடாது – சிவஞானம் சிறீதரன் எம்.பி.
- கல்ஓயா ஆற்றில் முதலை இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
- பிரிட்டனின் மன்னர் சார்லஸ் தனது தம்பி இளவரசர் ஆண்ட்ரூவின் அரச பட்டங்களை பறிப்பதற்கான முறையான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார்.
- இந்தியாவின் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பதினைந்து விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
- அமெரிக்கா வழங்கிய TH‑57 ஹெலிகாப்டர்கள்: இலங்கையின் பேரிடர் மீட்பு திறனை உயர்த்தும் புதிய கட்டம்