இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி (David Lammy) கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரக குழுவினரை சந்தித்தார்.
இந்த சந்திப்பு, பிரித்தானியா – இலங்கை கூட்டுறவை தினந்தோறும் வலுப்படுத்துவதில் அயராது உழைக்கும் உயர்ஸ்தானிகரக பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் உற்சாகத்தையும் பாராட்டுவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி நடவடிக்கைகள், மனிதாபிமான உதவித் திட்டங்கள், வர்த்தக உறவுகள், தூதரக நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கும் மக்களுக்குமான தொடர்புகள் போன்ற பல்வேறு துறைகளில் உயர்ஸ்தானிகரக குழுவினர் மேற்கொண்டு வரும் பணிகள், பிரித்தானிய மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவை மேலும் விரிவுபடுத்தவும், பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இவ்வகை உயர் மட்ட சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.
- தற்போதைய போர் சூழலில், சமையல் எரிவாயுவை (எல்பிஜி) மிகவும் கவனமாகப் பயன்படுத்துவது அவசியம்.
- 16 ஆண்டுகளில் 4 இலட்சம் அலகுகள் குருதிக் கொடை – நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை
- இலங்கை வானிலை அறிக்கை
- செம்மணி மனித புதைகுழிகளை மேலும் தோண்டுவதற்கு ரூ. 2 கோடிக்கு ஒப்புதல்.
- த.வெ.க. தலைவர் விஜயை சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க முடிவு
- 33 மணி நேர கருப்பர் வரலாறு பாடம்: உலகச் சாதனை நோக்கிய இரண்டு ஆசிரியர்களின் வரலாற்றுப் பயணம்