மனித நேய ஈருருளிப்பயணத்தின் 17வது நாளான இன்றைய நாள் சுவிஸ் நாட்டில் தொடர்கிறது.
இன்று 28/02/2026 காலை அகவணக்கத்துடன் சுவிஸ் பெர்ண் நகரில் ஆரம்பித்த மனித நேய ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.
தற்சமயம் ஐரோப்பாவில் நிலவும் சீரற்ற காலநிலையின் மத்தியிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி சற்றும் தளராது பயணித்து இன்று மாலை சுவிஸ் லவுசான் நகரில் நிறைவுபெற்றது.
தமிழினத்தின் விடுதலையை இலக்காக கொண்டு நாளை காலை ஜெனிவா மாநகரை நோக்கி பயணிக்கும்.
“நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.”
-தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”
