மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் யானை தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிக்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (01-03-2026) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் முனைக்காடு கிராமத்தினை சேர்ந்த 74 வயதுடையவர் ஆவார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை முனைக்காடு கிராமத்திற்குள் உள்நுழைந்த காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியத்துடன் மனிதர்களையும் தாக்கியிருந்தது.

இதனால் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவ்வாறு அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவரே இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அந்த வகையில் குறித்த கிராமத்தில் யானை தாக்கி இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிட த்தக்கது.

Related posts

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றது.

வட்டவன் கூட்டுப் படுகொலையின் “41வது ஆண்டு நினைவு நாள்” உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.

முல்லைத்தீவு – பழைய வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதியை “தமிழ் இனப் படுகொலைக்கான நினைவுச் சின்னமாக” பாதுகாக்க வேண்டும் என எம்.பி. ரவிகரன் வலியுறுத்துகிறார்!