மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் யானை தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிக்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (01-03-2026) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் முனைக்காடு கிராமத்தினை சேர்ந்த 74 வயதுடையவர் ஆவார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை முனைக்காடு கிராமத்திற்குள் உள்நுழைந்த காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியத்துடன் மனிதர்களையும் தாக்கியிருந்தது.

இதனால் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவ்வாறு அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவரே இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அந்த வகையில் குறித்த கிராமத்தில் யானை தாக்கி இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிட த்தக்கது.

Related posts

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார்.

கெப்பாபுலவில் தங்கள் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஈழத் தமிழரும், இந்திய வம்சாவளி தமிழரும், ஒன்று சேர்ந்தால்தான் இலங்கை தமிழர்