ஆயத்துல்லா அலி கமேனியின் படுகொலையில் இந்திய அரசின் மௌனம் நடுநிலையானது அல்ல!

சோனியா காந்தி

மேற்காசிய நாடான ஈரான் மீது, மற்றொரு மேற்காசிய நாடான இஸ்ரேல் உடன் இணைந்து, அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. இதில், ஈரான் உச்ச தலைவராக இருந்த கமேனி, 86, கொல்லப்பட்டார். ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற் காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.

இந்த விவகாரம் குறித்து, ஆங்கில நாளிதழில், பார்லி., – காங்., குழு தலைவர் சோனியா எழுதிய கட்டுரை: அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில், ஈரான் உச்ச தலைவராக இருந்த கமேனி கொல்லப்பட்டிருக்கிறார். பேச்சு நடக்கும் போதே ஒரு நாட்டின் தலைவரை படுகொலை செய்வது சர்வதேச உறவுகளில் ஒரு மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தும்.

அதிர்ச்சி அளிக்கும் இச்சம்பவத்தில், மத்திய அரசின் மவுனம் அதை விட பெரிய கவலையை தருகிறது. ஈரானின் இறையாண்மை மீறப்பட்டதையோ அல்லது இந்த படுகொலையையோ மோடி அரசு இதுவரை கண்டிக்கவில்லை.

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்; மவுனத்துக்கான காரணம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தாக்குதலை முதலில் துவங்கிய அமெரிக்கா, இஸ்ரேல் பற்றி எதுவும் குறிப்பிடாத பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதலை மட்டும் கண்டித்துள்ளார். வெறும் சம்பிரதாயத்துக்காக, ஆழ்ந்த கவலை என அவர் கூறுகிறார்.

ஒரு வெளிநாட்டு தலைவர் கொல்லப்பட்டது குறித்து , இறையாண்மை அடிப்படையிலும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலும் நம் நாடு தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். ஆனால், அப்படி எதையுமே மத்திய அரசு செய்யவில்லை. இது நம் வெளிநாட்டு கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்குகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிறிலங்கா பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

யுத்தத்தினால் பயங்கரவாதக் கொள்கைகளை மீண்டும் சமூகத்தில் விதைப்பதற்கு இந்நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் உரிமையில்லை என சர்வஜன இளைஞர் முன்னணி எச்சரித்துள்ளது.

வழக்கு தாமதங்களுக்கு பணியாளர் வெற்றிடங்களே காரணம்: தீர்வு காண நடவடிக்கை – சிறிலங்கா நீதி அமைச்சர்!