யாழ்ப்பாணத்தில் 800 லீட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது.

சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஏழாலை பகுதியில் பாரிய கொள்கலன்களில் டீசல் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் , அவற்றை சேமித்து வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரிடம் இருந்தும் சுமார் 800 லீட்டர் டீசலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

டீசலை பதுக்கி வைத்து கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு அவற்றை விற்பனை செய்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டிலையே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

முதல் தமிழீழ தற்கொடையாளர்,   தியாகி பொன். சிவகுமாரன்  வீர வணக்க நாள் ஜூன் 5, 1974

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றது.

வட்டவன் கூட்டுப் படுகொலையின் “41வது ஆண்டு நினைவு நாள்” உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.