மாரவில கடற்பரப்பில் சுமார் 953 கிலோகிராம் கெண்டு இலைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாரவில கடற்பரப்பில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, சுமார் 953 கிலோகிராம் கெண்டு இலைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடலில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 27 சந்தேகத்திற்கிடமான மூடைகளை கடற்படையினர் சோதனையிட்ட போதே இந்தத் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது.

கடற்படையினரின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, பிடிபடுவதைத் தவிர்க்க கடத்தல்காரர்கள் இதனை கடலில் வீசிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட அனைத்து கெண்டு இலைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related posts

இலங்கை வானிலை அறிக்கை

தமிழ்நாட்டு மக்களிடம் சினிமாவுக்கும் மதுபானங்களுக்கும் பணம் இருக்கும்போது ஏன் இலவசம்? சீமான் கேட்கிறார்!

மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி