மாரவில கடற்பரப்பில் சுமார் 953 கிலோகிராம் கெண்டு இலைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மாரவில கடற்பரப்பில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, சுமார் 953 கிலோகிராம் கெண்டு இலைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடலில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 27 சந்தேகத்திற்கிடமான மூடைகளை கடற்படையினர் சோதனையிட்ட போதே இந்தத் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது.

கடற்படையினரின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, பிடிபடுவதைத் தவிர்க்க கடத்தல்காரர்கள் இதனை கடலில் வீசிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட அனைத்து கெண்டு இலைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related posts

நோய்வாய்ப்பட்ட சமூகமா இது.? TVK உறுப்பினர்களின் உறவுகள் ஜாக்கிரதை. மனநோயாளர்கள் கவனம் தேவை.!

கொழும்பில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது!

ஐரோப்பாவின் பிளவுபட்ட முன்னணி: போர் நிதி, எரிசக்தி சார்பு மற்றும் புவிசார் அரசியல் முரண்பாடு