மசாஜ் சென்டர் போல வேடமிட்டு நடத்தப்பட்ட விபச்சார விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் நான்கு பேர் கைது!

பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையமென்ற போர்வையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், நான்கு பெண்களைக் கைது செய்துள்ளனர்.

பேலியகொடை பொலிஸாருக்கு செவ்வாய்க்கிழமை (10-03-2026) கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

விபச்சார விடுதியை நிர்வகித்த குற்றச்சாட்டில் ஒரு சந்தேக நபரும், அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காகத் தங்கியிருந்த மேலும் மூன்று சந்தேக நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காசன்பிட்டிய, பன்னிபிட்டிய,பொலன்னறுவை,ஹட்டன் பகுதிகளைச் சேர்ந்த 29 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!