புதிய எரிபொருள் QR குறியீடு: இலங்கையின் வாகன உரிமையாளர்களின் பிரச்சனைகள் இன்று தீர்க்கப்பட்டன!

New Fuel QR Code

முன்னர் QR குறியீட்டைப் பெற்ற மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் நபர்கள் எவ்வித சிக்கலுமின்றி புதிய QR குறியீட்டைப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் அல்லது தொலைபேசி இலக்கங்கள் மாறியுள்ளவர்கள் மற்றும் புதிய வாகனங்களை கொள்வனவு செய்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை மிக விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் அத்தியாவசிய சேவைகள், விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட விசேட பிரச்சினைகள் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, இன்றைய தினத்திற்குள்ளேயே அவற்றுக்கான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழக மீனவர்களால் தாக்கப்பட்ட பரித்திதுறை மீனவர் வழக்கில் நீதி கிடைக்கச் செய்யுமாறு ஆளுநரையும் உபாலி சமரசிங்கவையும் ரவிகரன் எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.

தாய்லாந்து போதைப்பொருள் கடத்தல்: இதன் முக்கிய சூத்திரதாரிகளான 2 தேரோக்களைக் கைது செய்ய இன்டர்போல் உதவி கோரியுள்ளது.

எரான் விக்ரமரத்ன சமகி ஜன பலவேகயவில் உள்ள அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுகிறார்.