தமிழகத்தில் ரூ.75 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்களை தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் பறிமுதல் செய்துள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, மாநிலம் முழுதும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட, 23.74 கோடி ரூபாய் ரொக்கம், 51 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள், 5.63 கோடி ரூபாய் மதிப்பிலான, போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 23.19 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி, 21.96 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பொருட்கள் என, 75.03 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.