ஆந்திராவில் தலைமறைவாக இருந்த,’யூ டியூபர்’ சவுக்கு சங்கர், சென்னை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில், ஆலந்துார் மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசாரால், பண மோசடி வழக்கில், ‘ யூ டியூபர்’ சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவ காரணங்களுக்காக, சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
எனினும், அவர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ‘ யூ டியூப்’ சேனலில், தி.மு.க., அரசு மற்றும் அதிகாரிகளை விமர்சித்து, ‘வீடியோ’ வெளியிட்டு வந்தார்.
இதனால், அவரது இடைக்கால ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என, சென்னை மாநகர போலீசார், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
- இலங்கை தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களை இங்கிலாந்து துணைப் பிரதமர் சந்தித்தார்.
- மத்திய கிழக்கு போர் சூழ்நிலை: நாளை பிற்பகல் வரை பல விமான சேவைகள் ரத்து – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு
- வெனிசுலா அதிபரை கைது செய்து நாடு கடத்துவது ஜனநாயக விரோத செயல் – பிமல் ரத்நாயக்க
- கிவுல் ஓயா எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
- தேர்தலில் ஸ்டாலினுக்கு 2.0 கிடைக்காது, 0.0 தான் கிடைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
- சார்லி கிர்க்: பல்கலையில் சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
சவுக்கு சங்கர், ஜாமின் நிபந்தனைகளை மீறியதால், அவரை கைது செய்யலாம் என, சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சங்கர், தலைமறைவாக இருந்து, தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதனால் அவரை, தலைமறைவு குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர்.
இந்நிலையில், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கர், தனியார் விடுதி ஒன்றில், சென்னை மாநகர போலீசாரால் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார். அவருடன், அவரது தோழி மாலதி இருந்ததாக கூறப்படுகிறது.