சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி, திருச்செந்துாரில் தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி ஆகியோர் போட்டியிட, தி.மு.க.,வினர் விருப்ப மனு அளித்தனர்.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு பெறும் பணி, தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று துவங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், 1,000 ரூபாய் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றனர். பொதுத் தொகுதிகளில் போட்டி யிட, விண்ணப்பக் கட்டணமாக 25,000 ரூபாய்; தனித் தொகுதிகளில் போட்டியிட 15,000 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனுவில், கட்சியில் வகிக்கும் பொறுப்பு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வேறு அமைப்புகளில் வகிக்கும் பதவி, கட்சி போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி, திருச்செந்துார் தொகுதியில் கனிமொழி ஆகியோர் போட்டியிட, கட்சியினர் விருப்ப மனு அளித்தனர்.
- ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழை: குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நெருங்குகிறது
- தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வியடைந்தார்.
- தமிழக அரசியல் மாற்றம்: நிச்சயமற்ற தன்மையும் மறுசீரமைப்பும் கொண்ட ஒரு புதிய யுகம் (2026)
- “திமுக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக” வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
- அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இளஞ்சிவப்பு பலூன்களை பறக்கவிட்டு “மகளிர் தின” வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
- தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ், பாமக, விசிக ஆதரவை முயற்சிக்கிறது!