இலங்கையில் ஒரே வாரத்தில் நிகழ்ந்த வாகன விபத்துகளில் 49 பேர் உயிரிழந்தனர்!

நாடளாவிய ரீதியில் ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மதுபோதையில் அல்லது போதைப்பொருள் பாவித்த நிலையில் வாகனம் செலுத்தியமையினாலேயே இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை இடம்பெற்றுள்ளதாக சுட்டிகாட்டினார்.

அபாயகரமான முறையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்துமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

மண்டியிட மறுத்த வேங்கை கூட்டம்

கீவ் எரிந்த இரவு: “ஓரேஷ்னிக்”, பழிவாங்கல், மற்றும் ரஷ்யா–உக்ரைன் போரின் புதிய கட்டம்

இலங்கையின் பொருளாதார பிளவு: கடன், நாணய அழுத்தம் மற்றும் கட்டமைப்பு சமநிலையின்மை