இலங்கையில் ஒரே வாரத்தில் நிகழ்ந்த வாகன விபத்துகளில் 49 பேர் உயிரிழந்தனர்!

நாடளாவிய ரீதியில் ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மதுபோதையில் அல்லது போதைப்பொருள் பாவித்த நிலையில் வாகனம் செலுத்தியமையினாலேயே இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை இடம்பெற்றுள்ளதாக சுட்டிகாட்டினார்.

அபாயகரமான முறையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்துமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.