காலி சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற இரண்டு கைதிகளை, சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்தனர்.

காலி சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற கைதிகள் இருவரை சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி மடக்கிப் பிடித்ததுடன், இதன் போது சந்தேக நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த கைதி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

காலி சிறைச்சாலை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (03-05-2026) பிற்பகல் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது. பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகளே இவ்வாறு சிறையிலிருந்து தப்பியோட முயற்சித்துள்ளனர்.

இதன்போது சுதாரித்துக்கொண்ட சிறைச்சாலை அதிகாரிகள், தப்பியோட முயன்ற கைதிகளை மடக்கிப் பிடித்தனர். அந்த முயற்சியின் போது ஒரு கைதி மீது அதிகாரிகள் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் கையில் காயமடைந்த குறித்த சந்தேகநபர், உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான கஜநாயக தெரிவித்தார்.

Related posts

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!