பின்லாந்து தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில், செந்தளிர் விளையாட்டு விழா 2026.
எதிர்வரும் 14.06.2026 வந்தா நகரில் மாபெரும் தமிழர் விளையாட்டுப் பெருவிழா காலை 9 மணியிலிருந்து ஆரம்பமாகி நடைபெறும்.
அனைவரும் வாரீர்!!
சிறுவர் முதல் பெரியோர் வரை விளையாட்டுகளில் பங்குபற்ற முடியும். நீங்களும் உங்கள் குழந்தைகளை விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற வைக்க விரும்பின், கீழ்க்காணும் இணையவழி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
ஒவ்வொரு விளையாட்டுவீரரும் பங்குபற்ற விரும்பும் 3 தனி விளையாட்டுக்களைத் தெரிவு செய்து விண்ணப்பித்து போட்டியில் கலந்துகொள்ளலாம்.
எனவே மேற்படி விதிமுறைகளைப் புரிந்துகொண்டு விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பீர்கள் என நம்புகின்றோம். நன்றி.