செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 10 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன: இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு பச்சிளம் குழந்தை அடையாளம் காணப்பட்டன.

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25ஆம் நாள் அகழ்வு பணிகள் திங்கட்கிழமை (15) நடைபெற்றது.

அதன்போது புதிதாக 05 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சிறுவர்கள் குழந்தையின் என்புக்கூடுகள் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மீட்கப்படும் என்புக்கூடுகள் பல உடைந்த நிலையில், நேர்சீரின்மையான நிலையில் காணப்படுகின்றன.

அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 360 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 351 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Related posts

யாழ்ப்பாணத் தீவுப் பகுதியில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன: ஏழு சந்தேக நபர்கள் கைது!

யாழ்ப்பாணம் வலி-வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் கடந்துவிட்டன – யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்டம்!

இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த டெங்கு ஒழிப்பு வாரம் தொடங்கப்பட்டது!