அமிழ்து
www.amizhthu.com
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

முதன்மை செய்திகள்

இலங்கை

புயல் சூறாவளியாக வலுப்பெறுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை – இலங்கை வானிலை ஆய்வு மையம்

by Amizhthu 10 January 2026
written by Amizhthu

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழமுக்கம் நேற்று நாட்டுக்குள் பிரவேசிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் நகர்வு பாதையில் மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அது புயலாக வலுப்பெறுவதற்கான அறிகுறிகளும் இல்லை. எனவே பெரும்பாலான பிரதேசங்களில் எதிர்பார்க்கப்பட்ட கன மழை வீழ்ச்சி குறைவாகவே காணப்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (09-01-2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழமுக்கமானது நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்புக்கு கிழக்காக சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது. இந்த தாழமுக்கம் நேற்று மாலை 5.30 – 11.30க்கு இடையில் நாட்டுக்குள் பிரவேசிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது பயணிக்கும் பாதையில் மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய திருகோணமலை கரையோரத்தின் ஊடாக இப்பகுதி நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடும். எனவே எதிர்பார்க்கப்பட்டளவு கடும் மழை வீழ்ச்சி பதிவாகாது. இத்தாழமுக்கம் புயலாக வலுப்பெறுவதற்கான அறிகுறிகள் இல்லை. எனவே வடக்கு, வடமத்திய, வடமேல் உள்ளிட்ட மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யும். இந்த மாகாணங்களிலுள்ள சில மாவட்டங்களில் 100 மில்லி மீற்றரை அண்மித்தளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.

இவை தவிர ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இம்மாகாணங்களில் 50 – 75 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். ஏனைய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யும். எவ்வாறிருப்பினும் காற்றின் வேகமானது அவ்வாறே காணப்படுகிறது.

குறிப்பாக மத்திய மழை நாட்டை அண்மித்த பகுதிகளிலும், தென் மாகாணத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் போக்கு குறைவடைந்துள்ள போதிலும், ஏனைய மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை காணப்படும். மீன்பிடி மற்றும் கடற்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து அம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளிலும் கடற்றொழில் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு தொடர்ந்தும் அறிவுறுத்தப்படுகிறது. இங்கு மாத்திரமின்றி ஏனைய கடற்பகுதிகளிலும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொறுத்தமற்றது. இன்று சனிக்கிழமையுடன் மழை வீழ்ச்சி படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் படிப்படியாக பலவீனமடைந்து நாட்டைக் கடந்து செல்லும் என்றார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
10 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Video News - காணொளி செய்திகள்

எதற்காக அரங்கு அமைத்தோம் ? | வேறெங்கிலும் கிடைக்காத நூல்கள் அரங்கு எண் 192 | தமிழம் பதிப்பகம்

by Amizhthu 10 January 2026
written by Amizhthu

சென்னை புத்தகக் கண்காட்சி

வெளியில் இருந்து புத்தகங்களை வாங்குவது எப்படி ?

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
10 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கையின் இன்றைய வானிலை அறிக்கை

by Amizhthu 10 January 2026
written by Amizhthu

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் திருகோணமலையின் வடக்கு – வடகிழக்குத் திசையில் சுமார் 100 km தொலைவில் இன்று காலை 4.00 மணியளவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது இன்று சுமார் 5.30 மணியளவில் நலிவடைந்து தாழ் அமுக்கமாக மாறுவதுடன் வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும். இன்று நன்பகல் அளவில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையாக இலங்கை கரையை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் வட அரைப் பகுதியில் வானம் முகில் செறிந்து காணப்படும்.

வட மாகாணத்திலும் அத்துடன் புத்தளம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

வட மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 50 – 60 km வேகத்தில் அடிக்கடி மிகப் பலத்த காற்று வீசக் கூடும். சில வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 km ஆக அதிகரித்தும் காணப்படும். வடமேல் மாகாணத்திலும் அத்துடன் மாத்தளை, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 – 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் மன்னார், ‌காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 35 – 45 km வேகத்தில் வட திசையில் இருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 – 70 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாக் காணப்படும்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 – 3.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
10 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
கட்டுரைகள்

Itching (அரிப்பு) – ஒரு Pharmacist ஆக நோயாளிக்கு வழங்க வேண்டிய முழுமையான ஆலோசனை

by Amizhthu 10 January 2026
written by Amizhthu

 முதலில் கேட்க வேண்டிய அவசியமான கேள்விகள் (Assessment)

👉

எந்தக் கிறீமையும் பரிந்துரை செய்வதற்கு முன், நோயாளியிடம் இந்தக் கேள்விகளை கேட்பது கட்டாயம்:

 அரிப்பு தொடர்பான தகவல்கள்

• அரிப்பு எங்கு உள்ளது? (கை, கால், உடல், முகம், தனிப்பட்ட உறுப்புகள்)
• எத்தனை நாட்களாக இந்த அரிப்பு தொடர்கிறது?
• நாள் முழுவதும் உள்ளதா? அல்லது இரவில் அதிகமாக உள்ளதா?
• சிவப்பு, சிரங்கு, வீக்கம், புண், சீழ் போன்றவை உள்ளனவா?

 தூண்டுதல் காரணங்கள்

• சமீபத்தில் புதிய சோப்பு / டிடர்ஜெண்ட் / வாசனைப் பொருட்கள் பயன்படுத்தியுள்ளீர்களா?
• அதிகமாக வியர்வை ஏற்படுகிறதா?
• பூச்சி கடித்த வரலாறு உள்ளதா?
• ஏதேனும் உணவால் அலர்ஜி ஏற்பட்டதா?

 மருத்துவ வரலாறு

• நீரிழிவு (Diabetes) உள்ளதா?
• தோல் அலர்ஜி அல்லது தோல் நோய் வரலாறு உள்ளதா?
• ஏற்கனவே ஏதாவது கிறீம் பயன்படுத்தியுள்ளீர்களா?
• ஸ்டீராய்டு (Steroid) கிறீம் முன்பு பயன்படுத்தியுள்ளீர்களா?

⚠️

இந்த தகவல்கள் இல்லாமல் கிறீம் பரிந்துரை செய்வது ஒரு மருந்தாளரின் நெறிமுறைக்கு எதிரானது.

 அரிப்புக்கான பொதுவான காரணங்கள் & Pharmacist அணுகுமுறை

 காரணம் 1: உலர்ந்த தோல் (Dry skin / Xerosis)

அறிகுறிகள்
• தோல் மிக உலர்ந்திருக்கும்
• கடுமையான சிவப்பு அல்லது புண்கள் இல்லாது இருக்கும்

✅

பரிந்துரைக்கக்கூடிய கிறீம்கள்

• Moisturizer / Emollient
• White soft paraffin + liquid paraffin உள்ள கிறீம்கள்
• Urea 10% கிறீம் (மிகவும் உலர்ந்த தோலுக்கு)

📌

நோயாளி ஆலோசனை

• குளித்த உடனே கிறீம் தடவ வேண்டும்
• கடுமையான சோப்புகளை தவிர்க்க வேண்டும்

 **காரணம் 2: அலர்ஜி அல்லது எரிச்சல் தோல் அழற்சி
(Allergic / Irritant Dermatitis)**

அறிகுறிகள்
• சிவப்பு + அரிப்பு
• புதிய சோப்பு / டிடர்ஜெண்ட் பயன்படுத்திய வரலாறு

✅

கிறீம்கள்

• Calamine lotion
• Hydrocortisone 1% (மிகக் குறுகிய காலத்திற்கு மட்டும்)

⚠️

முக்கிய எச்சரிக்கை
• முகம், குழந்தைகள், தனிப்பட்ட உறுப்புகளில் ஸ்டீராய்டு பயன்படுத்தக்கூடாது
• அதிகபட்சம் 5–7 நாட்கள் மட்டும்

 காரணம் 3: பூஞ்சைத் தொற்று (Fungal infection)

(மிகவும் பொதுவான காரணம்)
அறிகுறிகள்

• கடும் அரிப்பு
• சிவப்பு, வெள்ளை தழும்புகள், தோல் உரிதல்
• இடுப்பு, கக்குள், விரல்களுக்கு இடையில் அதிகம் காணப்படும்

✅

பூஞ்சை எதிர்ப்பு கிறீம்கள்

• Clotrimazole
• Ketoconazole
• Luliconazole

🚫

கட்டாயமாக தவிர்க்க வேண்டியது
• ஸ்டீராய்டு கலந்த கிறீம்கள்
(Betnovate-N, Quadriderm போன்றவை)

📌

நோயாளி ஆலோசனை

• குறைந்தது 2–4 வாரங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்
• அந்த இடத்தை எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டும்

 காரணம் 4: பூச்சி கடி / சிறிய தோல் அரிப்பு

அறிகுறிகள்
• திடீரென ஏற்பட்ட அரிப்பு
• ஒரு இடத்தில் மட்டும் வீக்கம்

✅

பயன்படுத்தக்கூடியவை

• Calamine lotion
• Antihistamine gel (குறுகிய காலத்திற்கு)

 **காரணம் 5: உடல் முழுவதும் அரிப்பு
(தோலில் தெளிவான மாற்றங்கள் இல்லாமல்)**

சாத்தியமான காரணங்கள்
• உலர்ந்த தோல்
• உட்புற நோய்கள் (நீரிழிவு, கல்லீரல், சிறுநீரக கோளாறுகள்)

✅

Pharmacist ஆலோசனை

• Moisturizer
• தேவையெனில் Antihistamine
• மருத்துவரை அணுக அறிவுறுத்தல் அவசியம்

 வாய் வழி மருந்துகள் (Oral Medicines) – கவனத்துடன்

💊

Antihistamine மாத்திரைகள்
• Cetirizine
• Loratadine

⚠️

நோயாளிக்கு வழங்க வேண்டிய அறிவுரை
• தூக்கம் வரக்கூடும்
• மது அருந்தக்கூடாது
• வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்

 மருந்தில்லா ஆலோசனைகள் (Non-Drug Advice)

🧼

சோப்பு
• Mild soap / syndet பயன்படுத்த வேண்டும்
• தினசரி antiseptic soap தவிர்க்க வேண்டும்

🚿

குளியல்
• வெதுவெதுப்பான நீர்
• அதிகமாக உரசக் கூடாது

👕

உடை
• பருத்தி உடைகள்
• இறுக்கமான, செயற்கை நார் உடைகள் தவிர்க்க வேண்டும்

 மருத்துவரிடம் அனுப்ப வேண்டிய நிலைகள் (Referral Criteria)

🚨

உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியவை

• 2 வாரங்களுக்கு மேலாக நீடிக்கும் அரிப்பு
• புண், சீழ், காய்ச்சல்
• தனிப்பட்ட உறுப்புகளில் அரிப்பு + சுரப்பு
• குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள்
• மீண்டும் மீண்டும் வரும் பூஞ்சைத் தொற்று
• ஸ்டீராய்டு தவறான பயன்பாட்டு வரலாறு

 Pharmacist – நோயாளி தொடர்பாடல் (Professional Counselling Language)

“அரிப்புக்கு காரணம் தெரிந்தால் தான் சரியான கிறீம் சொல்ல முடியும்.
சில விவரங்கள் சொல்லுங்கள்.
தவறான கிறீம் பயன்படுத்தினால் பிரச்சனை அதிகமாகலாம்.”

👉

இது நோயாளியின் நம்பிக்கையை உருவாக்கும்.

 ஒரு மருந்தாளரின் நெறிமுறை பொறுப்பு

❌

 காரணம் தெரியாமல் மருந்து வழங்கக் கூடாது

❌

 ஸ்டீராய்டு தவறான பயன்பாட்டை அனுமதிக்கக் கூடாது

✅

 நியாயமான மருந்து பயன்பாடு

✅

 நோயாளி பாதுகாப்பே முதன்மை

 சுருக்கம் (Exam / Practice Ready)

Assessment → காரணம் கண்டறிதல் → சரியான மருந்து → பயன்பாட்டு காலம் → நோயாளி ஆலோசனை → தேவையெனில் மருத்துவரிடம் அனுப்புதல்

👉

Pharmacist என்பது முதன்மை சுகாதாரப் பாதுகாவலர்; விற்பனையாளர் அல்ல.

  ஆசிரியர்: ஈழத்து நிலவன்
மருத்துவமனை மருந்தாளர் | அரச மருத்துவ ஆராய்ச்சியாளர்
10/01/2026 

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
10 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
NEWS

Itching (Pruritus): A Comprehensive Guide for Pharmacists on Patient Counselling and Management

by Amizhthu 10 January 2026
written by Amizhthu

 Initial Patient Assessment – Essential Questions

👉

Before recommending any cream or medicine, a pharmacist must first assess the patient carefully by asking the following questions:

 Details of the Itching

• Where is the itching located? (Hands, legs, body, face, or private areas?)
• How long has the itching been present?
• Is it persistent throughout the day or worse at night?
• Are there associated symptoms such as redness, rash, swelling, wounds, or pus?

 Possible Triggering Factors

• Have you recently changed soaps, detergents, or cosmetic products?
• Do you experience excessive sweating?
• Was there any insect bite?
• Have you noticed itching after consuming certain foods?

 Medical History

• Do you have diabetes?
• Any previous history of skin allergies or skin diseases?
• Have you already used any creams or medications?
• Have you used steroid creams before?

⚠️

Recommending treatment without obtaining this information is professionally inappropriate and unsafe.

 Common Causes of Itching & the Pharmacist’s Approach

 Cause 1: Dry Skin (Xerosis)

Clinical features
• Dry, rough skin
• No severe redness, wounds, or discharge

✅

Recommended Treatments

• Moisturizers / Emollients
• Creams containing white soft paraffin and liquid paraffin
• Urea 10% cream for severely dry skin

📌

Patient Counselling
• Apply moisturizer immediately after bathing
• Avoid harsh soaps

 Cause 2: Allergic or Irritant Dermatitis

Clinical features
• Redness with itching
• History of new soap, detergent, or chemical exposure

✅

Recommended Treatments
• Calamine lotion
• Hydrocortisone 1% (short-term use only)

⚠️

Important Warnings
• Avoid steroid use on the face, in children, and on private parts
• Do not use for more than 5–7 days

 Cause 3: Fungal Infection (Dermatophytosis)

(One of the most common causes of itching)

Clinical features

• Intense itching
• Red or whitish patches, scaling
• Commonly affects groin, underarms, and spaces between toes

✅

Antifungal Creams
• Clotrimazole
• Ketoconazole
• Luliconazole

🚫

Strictly Avoid
• Steroid combination creams
(e.g., Betnovate-N, Quadriderm)

📌

Patient Counselling
• Apply continuously for at least 2–4 weeks
• Keep the affected area clean and dry

 Cause 4: Insect Bite or Minor Skin Reaction

Clinical features

• Sudden onset of itching
• Localized swelling

✅

Recommended Treatments
• Calamine lotion
• Antihistamine gel (short-term use)

 Cause 5: Generalized Itching Without Visible Skin Changes

Possible causes
• Dry skin
• Systemic conditions (diabetes, liver disease, kidney disorders)

✅

Pharmacist Advice
• Regular use of moisturizers
• Oral antihistamines if appropriate
• Medical referral is strongly advised

 Oral Medications – Use With Caution

💊

Antihistamines
• Cetirizine
• Loratadine

⚠️

Patient Counselling
• May cause drowsiness
• Avoid alcohol
• Do not drive or operate heavy machinery if sleepy

 Non-Drug and Lifestyle Advice

🧼

Soap and Cleansers
• Use mild soaps or syndets
• Avoid daily use of antiseptic soaps

🚿

Bathing Habits
• Use lukewarm water
• Avoid excessive scrubbing

👕

Clothing
• Wear loose, cotton clothing
• Avoid tight or synthetic garments

 When to Refer the Patient to a Doctor

🚨

Immediate medical referral is required if:
• Itching persists for more than 2 weeks
• There is pus, wounds, or fever
• Genital itching with discharge
• The patient is a child or pregnant woman
• Recurrent fungal infections
• History of steroid cream misuse

 Professional Communication: How a Pharmacist Should Speak to the Patient

“To recommend the correct cream, we first need to understand the cause of the itching.
Please share a few details.
Using the wrong cream can make the condition worse.”

👉

This builds trust and promotes patient safety.

 Ethical Responsibilities of a Pharmacist

❌

 Do not dispense medication without a proper assessment

❌

 Do not encourage the misuse of steroid creams

✅

 Promote rational drug use

✅

 Patient safety must always come first

 Summary (Practice & Examination Ready)

Assess → Identify the cause → Select appropriate treatment → Explain duration → Counsel the patient → Refer when necessary

👉

A pharmacist is a frontline healthcare professional, not merely a medicine seller.

✒️

Author: Eelaththu Nilavan
Hospital Pharmacist | Government Medical Researcher
10/01/2026

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
10 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
NEWS

Hot World News – Jan 09 2026

by Amizhthu 9 January 2026
written by Amizhthu

🔥 Major Geopolitical Tensions

  • Iran erupts in nationwide protests, facing a harsh crackdown, internet blackouts, and escalating violence in Kurdish regions.
  • US–Iran tensions spike as Iranian state media accuses “terrorist agents” from the US and Israel of fueling unrest.
  • Greenland crisis deepens: Trump signals long‑term oversight ambitions; Denmark and Greenland reject US pressure, saying “we are not for sale”.
  • Venezuela turmoil intensifies after the US raid that captured Nicolás Maduro. The US Senate moves to curb Trump’s military authority, while Venezuela releases its first prisoners in a “peace gesture”.

⚔️ Conflicts & Security

  • Russia strikes Ukraine with an advanced Oreshnik ballistic missile near the NATO border, raising alarm across Europe.
  • UK & France prepare to send troops to Ukraine if a peace deal with Russia is reached, prompting warnings from Moscow that foreign forces would be “legitimate targets”.
  • Aleppo crisis worsens: Fierce clashes between Syrian forces and the Kurdish-led SDF displace more than 138,000 civilians.
  • Sudan marks 1,000 days of war, with 70% of the population in need and major cities under bombardment.

🌐 US Foreign Policy Shifts

  • Trump administration withdraws the US from dozens of international organizations, including a major UN climate treaty.
  • US aims to control Venezuela’s oil sales indefinitely, reshaping global energy politics.
  • US seizes a Russian‑flagged tanker after a dramatic pursuit across the Atlantic, with UK support.

🛑 Human Rights & Civil Unrest

  • Minneapolis shooting sparks outrage after an ICE agent fatally shoots a woman; video footage circulates widely, and misinformation spreads rapidly.
  • Iran protests intensify, with reports of gunfire, hospital raids, and growing public anger.

🌋 Natural Disasters & Environment

  • Australian bushfires turn catastrophic, forcing evacuations and school closures across multiple regions.
  • Philippines evacuates 3,000 people as activity increases at Mayon Volcano.

📉 Economy & Global Markets

  • Global copper shortage expected to worsen as AI, data centers, and defense demand surge, potentially creating a long‑term supply deficit.
  • Tech giants face scrutiny as AI becomes more embedded in government and public infrastructure, raising concerns about governance and privacy.

📰 Other Notable Headlines

  • Alleged global cybercrime kingpin Chen Zhi was arrested in Cambodia and extradited to China.
  • Saudi‑UAE tensions escalate as Yemen’s separatist leader flees with UAE assistance, deepening regional fractures.
  • Brigitte Bardot’s funeral was held in France, marking the passing of a major cultural icon.

This is a developing story. Updates will follow, so stay tuned.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
9 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
சர்வதேசச் செய்திகள்

சூடான உலக செய்திகள்

by Amizhthu 9 January 2026
written by Amizhthu

🔥 பெரிய புவிசார் அரசியல் பதட்டங்கள்

  • ஈரான் நாடு தழுவிய போராட்டங்களில் வெடிக்கிறது, கடுமையான ஒடுக்குமுறை, இணைய முடக்கம் மற்றும் குர்திஷ் பிராந்தியங்களில் அதிகரித்து வரும் வன்முறையை எதிர்கொள்கிறது.
  • அமெரிக்க-ஈரான் பதட்டங்கள் அதிகரிக்கின்றன ஈரானிய அரசு ஊடகங்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் “பயங்கரவாத முகவர்கள்” அமைதியின்மையைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டுவதால்.
  • கிரீன்லாந்து நெருக்கடி ஆழமடைகிறது: டிரம்ப் நீண்டகால மேற்பார்வை லட்சியங்களை சமிக்ஞை செய்கிறார்; டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அமெரிக்க அழுத்தத்தை நிராகரிக்கின்றன, “நாங்கள் விற்பனைக்கு இல்லை” என்று கூறுகின்றன.
  • நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றிய அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிறகு வெனிசுலா கொந்தளிப்பு தீவிரமடைகிறது. டிரம்பின் இராணுவ அதிகாரத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க செனட் நகர்கிறது, அதே நேரத்தில் வெனிசுலா அதன் முதல் கைதிகளை “சமாதான சைகையில்” விடுவிக்கிறது.

⚔️ மோதல்கள் & பாதுகாப்பு

  • ரஷ்யா உக்ரைனை நேட்டோ எல்லைக்கு அருகில் ஒரு மேம்பட்ட ஓரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணையுடன் தாக்குகிறது, ஐரோப்பா முழுவதும் எச்சரிக்கையை எழுப்புகிறது.

⚔️ மோதல்கள் & பாதுகாப்பு

  • ரஷ்யா உக்ரைனை நேட்டோ எல்லைக்கு அருகில் ஒரு மேம்பட்ட ஓரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணையுடன் தாக்குகிறது, இது ஐரோப்பா முழுவதும் எச்சரிக்கையை எழுப்புகிறது.
  • ரஷ்யாவுடன் ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டால், உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்ப இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தயாராகின்றன, வெளிநாட்டுப் படைகள் “சட்டபூர்வமான இலக்குகளாக” இருக்கும் என்று மாஸ்கோவிலிருந்து எச்சரிக்கைகள் வந்தன.
  • அலெப்போ நெருக்கடி மோசமடைகிறது: சிரியப் படைகளுக்கும் குர்திஷ் தலைமையிலான SDF க்கும் இடையிலான கடுமையான மோதல்கள் 1,38,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களை இடம்பெயர்ந்துள்ளன.
  • சூடான் 1,000 நாட்கள் போரை குறிக்கிறது, 70% மக்கள் தேவைப்படுகிறார்கள் மற்றும் முக்கிய நகரங்கள் குண்டுவீச்சுக்கு உள்ளாகியுள்ளன.

🌐 அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மாற்றங்கள்

  • ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு முக்கிய காலநிலை ஒப்பந்தம் உட்பட டஜன் கணக்கான சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்காவை டிரம்ப் நிர்வாகம் விலக்கிக் கொள்கிறது.
  • வெனிசுலாவின் எண்ணெய் விற்பனையை காலவரையின்றி கட்டுப்படுத்த அமெரிக்கா இலக்கு வைத்துள்ளது, உலகளாவிய எரிசக்தி அரசியலை மறுவடிவமைக்கிறது.
  • இங்கிலாந்து ஆதரவுடன் அட்லாண்டிக் முழுவதும் ஒரு வியத்தகு முயற்சிக்குப் பிறகு, ரஷ்ய கொடியுடன் கூடிய டேங்கரை அமெரிக்கா கைப்பற்றியது.

🛑 மனித உரிமைகள் & சிவில் அமைதியின்மை

  • மின்னியாபோலிஸ் துப்பாக்கிச் சூடு ஒரு ICE முகவர் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து சீற்றத்தைத் தூண்டுகிறது; வீடியோ காட்சிகள் பரவலாகப் பரவி வருகின்றன, மேலும் தவறான தகவல்கள் வேகமாகப் பரவுகின்றன.
  • ஈரான் போராட்டங்கள் தீவிரமடைகின்றன, துப்பாக்கிச் சூடு, மருத்துவமனை சோதனைகள் மற்றும் அதிகரித்து வரும் பொதுமக்களின் கோபம் பற்றிய தகவல்கள்.

🌋 இயற்கை பேரழிவுகள் & சுற்றுச்சூழல்

  • ஆஸ்திரேலிய காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்துகிறது, பல பிராந்தியங்களில் வெளியேற்றங்கள் மற்றும் பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
  • மாயோன் எரிமலையில் செயல்பாடு அதிகரிக்கும் போது பிலிப்பைன்ஸ் 3,000 பேரை வெளியேற்றுகிறது.

📉 பொருளாதாரம் & உலகளாவிய சந்தைகள்

  • AI, தரவு மையங்கள் மற்றும் பாதுகாப்பு தேவை அதிகரித்து வருவதால், நீண்டகால விநியோக பற்றாக்குறையை உருவாக்கும் வாய்ப்புள்ளதால், உலகளாவிய செப்பு பற்றாக்குறை மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தொழில்நுட்ப ஜாம்பவான்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் அரசு மற்றும் பொது உள்கட்டமைப்பில் AI அதிகமாக உட்பொதிக்கப்படுவதால், நிர்வாகம் மற்றும் தனியுரிமை குறித்த கவலைகள் எழுகின்றன.

📰 பிற குறிப்பிடத்தக்க தலைப்புச் செய்திகள்

  • உலகளாவிய சைபர் கிரைம் தலைவன் சென் ஷி கம்போடியாவில் கைது செய்யப்பட்டு சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
  • சவூதி-யுஏஇ பதட்டங்கள் அதிகரிக்கின்றன ஏமனின் பிரிவினைவாதத் தலைவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் தப்பிச் சென்றதால், பிராந்திய விரிசல்கள் ஆழமடைகின்றன.
  • பிரிஜிட் பார்டோட்டின் இறுதிச் சடங்கு பிரான்சில் நடைபெற்றது, இது ஒரு முக்கிய கலாச்சார சின்னத்தின் மறைவைக் குறிக்கிறது.

❯❯❯❯ இது ஒரு வளர்ந்து வரும் கதை.
புதுப்பிப்புகள் தொடர்ந்து வரும், எனவே காத்திருங்கள்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
9 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
NEWS

ஐரோப்பா விளிம்பில்: லிவிவ் முதல் வடக்கு அட்லாண்டிக் வரை.

by Amizhthu 9 January 2026
written by Amizhthu

ஏவுகணைகள், எண்ணெய் கப்பல்கள் மற்றும் எரிசக்தி ஆயுதங்கள் மேற்கத்திய உலகை நேரடிப் போரின் வாசலுக்கு இட்டுச் செல்லும் விதம்

✦ லிவிவ் மீது தாக்குதல்: நேட்டோவின் வீட்டு வாசலில் ரஷ்யாவின் பாலிஸ்டிக் போர்முறை

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளிலிருந்து வெறும் 40 மைல் தொலைவில் அமைந்துள்ள உக்ரைனின் மேற்குப் பகுதி தளவாட மையமான லிவிவ் மீது ரஷ்யா நடத்திய இரவு நேரத் தாக்குதல், இந்தப் போரின் இயல்பையே மாற்றியமைத்துள்ளது. இதன் மூலம், நேட்டோவின் கிழக்கு எல்லைக்கருகே சோதனை நிலையிலுள்ள நடுத்தரத் தூர பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த மாஸ்கோ தயங்கவில்லை என்பதும் வெளிப்படையாகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘ஒரேஷ்னிக்’ ஏவுகணை, RS-26 ரூபிஷ் தளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இது முன்பு INF ஒப்பந்தத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட ஆயுத வகுப்பில் சேர்த்துக் கருதப்பட்டது. அதன் மீள்பயன்பாடு, ஒரு ராணுவ நடவடிக்கையாக மட்டுமல்ல;
பனிப்போருக்குப் பிந்தைய ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பு முற்றிலும் சிதைந்துவிட்டது என்பதற்கான அரசியல் அறிவிப்பாகவும் அமைந்துள்ளது.

இந்தத் தாக்குதல் முக்கியமான உள்கட்டமைப்புகள் மற்றும் தொழிற்பேட்டைகள் மீது விழுந்தது. தீ விபத்துகள் ஏற்பட்டன; மனிதாபிமான உதவிப் பொருட்கள் சேமிப்பு நிலையங்கள் அழிக்கப்பட்டன; மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. லிவிவ் பகுதியெங்கும் குறைந்தது நான்கு பொதுமக்கள் உயிரிழந்தனர்.

✦ ஒரேஷ்னிக்: தொழில்நுட்பம் வழியாகக் கட்டியெழுப்பப்படும் தடுப்பு அரசியல்

வழக்கமான குரூஸ் ஏவுகணைத் தாக்குதல்களைப் போல அல்லாமல், லிவிவ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஒரே நேரத்தில் செயலிழக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது தனித்தனி தாக்குதலல்ல; அடர்த்தியான (saturation) தாக்குதல் மாதிரி என இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

‘ஒரேஷ்னிக்’ ஏவுகணையின் உண்மையான முக்கியத்துவம் அதன் அழிவுத் திறனில் மட்டும் இல்லை; அதன் மூலோபாய அடையாளத்தில் உள்ளது:

• ஐரோப்பிய கண்டத்திற்குள் நடுத்தரத் தூரத் தாக்குதல் திறனை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது
• பல தசாப்தங்களாக நிலைத்திருந்த ஆயுதக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை முற்றிலும் நிராகரிக்கிறது
• எதிர்கால மோதல்களில் நேட்டோவின் முடிவெடுக்கும் நேரத்தை ஆபத்தான அளவில் குறைக்கிறது

இது உக்ரைனை நோக்கிய போர் மட்டுமல்ல;
முழு ஐரோப்பிய பாதுகாப்பு ஒழுங்கமைப்பிற்கே விடுக்கப்பட்ட சவால் ஆகும்.

✦ வடக்கு அட்லாண்டிக் முனை: “மாலினேரா சம்பவம்”

கிழக்கு ஐரோப்பாவில் பாலிஸ்டிக் ஏவுகணைகள் வெடிக்கும் வேளையில், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் அமைதியாக இரண்டாவது போர் மேடையாக மாறியுள்ளது.

17 நாட்கள் தொடர்ந்த துரத்தலுக்குப் பிறகு, அமெரிக்க கடற்படை SEALs வீரர்கள், ரஷ்யக் கொடியை ஏந்திய ‘மாலினேரா’ எண்ணெய் கப்பலை கைப்பற்றினர். இதற்கு எதிர்வினையாக, ரஷ்யா தனது ‘கசான்’ (Kazan) எனும் யாசென்-எம் ரக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அந்தப் பகுதியில் நிலைநிறுத்தியது. இதன் மூலம், வாஷிங்டன் “தடை அமலாக்க நடவடிக்கை” என கூறிய செயல், நேரடி வல்லரசு மோதலாக மாறியது.

மாஸ்கோவின் பதில் தெளிவானது:

• இந்தக் கப்பல் கைப்பற்றல் “கடல் கொள்ளை” என அறிவிக்கப்பட்டது
• அமெரிக்கத் தடைகள் சர்வதேச கடல்சார் சட்டத்தின் கீழ் செல்லாதவை என நிராகரிக்கப்பட்டன
• இது கடல் வழிப் பயணச் சுதந்திரத்தைச் சிதைக்கும் அபாயகரமான முன்னுதாரணம் என எச்சரிக்கப்பட்டது

கெர்மிலின் அனுப்பிய செய்தி ஒன்றே:
தடைகளை அமல்படுத்துவது இப்போது போர் நடவடிக்கைக்கு இணையானதாகிவிட்டது.

✦ பிரிட்டனின் தலையீடு: ஆதரவிலிருந்து நேரடிப் பங்கேற்பு வரை

பிரிட்டனின் பங்கு இப்போது வியத்தகு முறையில் மாறியுள்ளது. பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையில், பிரிட்டன்:

• அமெரிக்க நடவடிக்கைகளுக்காக ராணுவத் தளங்கள் மற்றும் வான்வெளியை வழங்கியுள்ளது
• கண்காணிப்பு விமானங்கள் மற்றும் கடற்படை வளங்களை ஈடுபடுத்தியுள்ளது
• எண்ணெய் கப்பல்களை இடைமறிப்பதற்கான தளவாட ஆதரவை வழங்கியுள்ளது

மேலும், உக்ரைனுக்குப் படைகளை அனுப்புவது குறித்த “உத்தேசப் பிரகடனம்”, நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு உட்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மறைமுக ஆதரவுக்கும் நேரடிப் பங்கேற்புக்கும் இடையிலான கோடு ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டது என விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

லண்டன் இனி பார்வையாளர் அல்ல.
அது ஒரு செயல்பாட்டு மையமாக மாறியுள்ளது.

✦ ஐக்கிய நாடுகள் சபை வரையும் கோடு: எண்ணெய், இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டம்

இந்தப் பின்னணியில், ஐக்கிய நாடுகள் சபை வாஷிங்டனுக்கு ஒரு அரிய, வெளிப்படையான எச்சரிக்கையை வழங்கியுள்ளது. வெனிசுலா எண்ணெய் மற்றும் கப்பல் கைப்பற்றல்கள் குறித்த அமெரிக்கக் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த ஐநா, ஒரு அடிப்படை சர்வதேச விதியை மீண்டும் உறுதிப்படுத்தியது:

“இயற்கை வளங்கள் அந்தந்த இறையாண்மை கொண்ட நாட்டு மக்களுக்கே சொந்தமானவை;
அவை எந்த வெளிநாட்டு சக்திக்கும் உரிமையல்ல.”

அனைத்து கடல்சார் அமலாக்க நடவடிக்கைகளும் சர்வதேச சட்டத்திற்குக் கீழ்ப்படிதல் அவசியம் என ஐநா வலியுறுத்துவது, தடைகளை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க கடல் குறுக்கீடுகளை நேரடியாகச் சவாலிடுகிறது.

✦ எரிசக்தி ஒரு ஆயுதமாக: ஐரோப்பா தானே உருவாக்கிக் கொண்ட நெருக்கடி

ரஷ்யா ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை முழுமையாக நிறுத்தியதன் மூலம், அந்தக் கண்டத்தின் பொருளாதார அடித்தளம் அம்பலமாகியுள்ளது:

• ஜெர்மனியின் தொழில்துறை உற்பத்தி 40 சதவீதம் வீழ்ச்சி
• பல ஐரோப்பிய தலைநகரங்களில் மின்சாரத் தடைகள்
• எரிசக்தி விலை உயர்வால் குடும்பங்கள் வறுமைக்குத் தள்ளப்படுதல்

ஆனால், மிகப்பெரிய முரண்பாடு வேறொரு இடத்தில் உள்ளது.
இந்தியா போன்ற நாடுகளை ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக ஐரோப்பா விமர்சிக்கும் நிலையில், 2025 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியமே ரஷ்யாவுக்கு LNG எரிவாயுக்காக சுமார் 8.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்தியுள்ளது.

எதிர்க்கிறோம் என்று கூறும் போருக்கே நிதியளிப்பதே — ஐரோப்பாவின் நிதர்சனம்.

✦ இறுதி ஆட்டம்: பன்முக மோதலை நோக்கி சரியும் உலகம்

லிவிவ் மீது வீழ்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளிலிருந்து,
வடக்கு அட்லாண்டிக் கடலில் நிலைநிறுத்தப்பட்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் வரை,
ஆயுதமாக்கப்பட்ட எரிசக்தி குழாய்கள் வரை —
இந்த மோதல் உக்ரைனின் எல்லைகளை வெகுவாகத் தாண்டியுள்ளது.

இது இனி ஒரு பிராந்தியப் போர் அல்ல.
இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கின் முறையான முறிவு:

• ராஜதந்திரத்திற்குப் பதிலாக ராணுவ பலம்
• சட்டத்திற்குப் பதிலாக தடைகள்
• படைகளுக்குப் பதிலாக எரிசக்தி
• பதற்றங்கள் இயல்பாக்கப்படுதல்

ஐரோப்பா இப்போது ஒரு வரலாற்றுச் சந்திப்பில் நிற்கிறது —
கிழக்கு–மேற்கு தேர்வல்ல;
மூலோபாய சுயாட்சியா, மீட்க முடியாத வீழ்ச்சியா என்பதற்கான தீர்மானம்.

 எழுதியவர்
ஈழத்து நிலவன்
தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் ராணுவ விவகார ஆய்வாளர்
09/01/2026

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
9 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

இந்தியா–பங்களாதேஷ் உறவுகளில் புதிய திருப்பம்: கலேதா ஜியா மறைவுக்குப் பிறகு நவீன அணுகுமுறை

by Amizhthu 9 January 2026
written by Amizhthu

சுருக்கம்

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியா மறைவுக்குப் பிறகு, இந்தியா தனது தூதரக அணுகுமுறையில் முக்கிய மாற்றத்தைச் signalling செய்கிறது. இதுவரை ஆவாமி லீக் தலைமையிலான அரசுகளுடன் நெருக்கமாக இருந்த இந்தியா, இப்போது BNP‑வுடன் புதிய கட்டத்தில் உரையாடத் தயாராக இருப்பது இருநாட்டு உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது.

பின்னணி: கலேதா ஜியாவின் அரசியல் மரபும் இந்தியா–பங்களாதேஷ் உறவுகளும்

2025 டிசம்பர் 30 அன்று 80 வயதில் காலமான கலேதா ஜியா, மூன்று தசாப்தங்களுக்கு மேல் பங்களாதேஷ் அரசியலில் முக்கியமான பாத்திரம் வகித்தார்.
அவரது ஆட்சி காலங்களில் இந்தியாவுடன் உறவுகள் பல்வேறு காரணங்களால் பதட்டமாக இருந்தன —

  • நீர்விநியோக பிரச்சினைகள்
  • எல்லைத் தாண்டிய தீவிரவாதம் குறித்த குற்றச்சாட்டுகள்
  • ஜமாஅத்‑எ‑இஸ்லாமியுடன் BNP‑வின் கூட்டணி

அவரது மறைவுக்குப் பிறகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததுடன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் டாக்காவில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் பங்கேற்றது முக்கிய தூதரகச் சைகையாகப் பார்க்கப்படுகிறது.

தூதரக மாற்றத்தின் முக்கிய சைகை

டாக்கா பயணத்தின் போது, ஜெய்சங்கர் BNP செயல் தலைவர் தாரிக் ரஹ்மானை சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு, இந்தியா BNP‑வை “நம்பகமற்ற கூட்டாளி” எனக் கருதியிருந்த பழைய நிலைப்பாட்டிலிருந்து விலகி, புதிய உரையாடலுக்கான வாயிலைத் திறக்கிறது என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

BNP தரப்பும் இந்த சந்திப்பை “நல்லிணக்கமானது” என்றும் “புதிய கட்டத்தின் தொடக்கம்” என்றும் வர்ணித்துள்ளது.

இந்த மாற்றத்திற்கான காரணங்கள்

இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன:

  • பங்களாதேஷின் அரசியல் கலக்கம்
    2024 மாணவர் போராட்டங்கள் ஆவாமி லீக் ஆட்சியை கவிழ்த்தன. இந்தியா ஹசீனாவுக்கு ஆதரவாக இருந்ததாகக் கருதப்பட்டதால், இந்தியாவுக்கு எதிரான மனநிலை அதிகரித்தது.
  • ஹசீனாவின் இந்திய தஞ்சம்
    2024 போராட்டங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்திருப்பது இருநாட்டு உறவுகளில் நுணுக்கமான சூழலை உருவாக்கியுள்ளது.
  • BNP‑வின் புதிய அரசியல் நிலைப்பாடு
    ஜமாஅத்‑எ‑இஸ்லாமியிலிருந்து தன்னைத் தெளிவாகப் பிரித்துக் கொண்ட BNP, இந்தியாவுக்கு ஏற்ற அரசியல் கூட்டாளியாக மாறியுள்ளது.
  • வரவிருக்கும் தேர்தல்
    2026 பிப்ரவரி 12 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் BNP ஆட்சிக்கு வரக்கூடும் என்ற சூழ்நிலையில், இந்தியா முன்கூட்டியே உறவுகளைச் சீரமைக்க முயல்கிறது.

பிராந்திய மற்றும் உள்நாட்டு விளைவுகள்

இந்திய–பங்களாதேஷ் உறவுகள் சமீபத்தில் பல காரணங்களால் பதட்டமடைந்துள்ளன —

  • சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த கவலைகள்
  • எல்லை குற்றச்செயல்கள்
  • IPL ஒளிபரப்பு தடை போன்ற கலாச்சார‑விளையாட்டு விவகாரங்கள்

தாரிக் ரஹ்மானின் “தேசிய ஒற்றுமை” அழைப்பு, பங்களாதேஷ் இந்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து இந்தியாவுக்கு மறைமுக நம்பிக்கை அளிக்கும் முயற்சியாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

BNP‑வின் கருத்து

BNP மூத்த தலைவர் அமீர் காஸ்ரு மஹ்மூத் சௌதுரி, இந்தியாவின் அணுகுமுறையை “நல்ல முன்னேற்றம்” என வரவேற்றார்.
அவர், கடந்த காலத்தில் சில முரண்பாடுகள் இருந்தாலும், BNP ஆட்சிக் காலங்களில் இருநாட்டு உறவுகள் பெரும்பாலும் நிலையானவையாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

முடிவு

கலேதா ஜியாவின் மறைவு, இந்தியா–பங்களாதேஷ் உறவுகளில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பங்களாதேஷ் அரசியல் மாற்றத்தின் நடுவில், இந்தியா BNP‑வுடன் உரையாடத் தயாராக இருப்பது, எதிர்கால அரசாங்கத்துடன் நிலையான உறவை உருவாக்கும் நோக்கத்தைக் காட்டுகிறது.
இந்த புதிய அணுகுமுறை நீண்டகால ஒத்துழைப்பாக மாறுமா என்பது, இருநாடுகளும் வரலாற்று நம்பிக்கையின்மையை எவ்வாறு சமாளிக்கின்றன என்பதிலேயே அமையும்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
9 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
ஆசியா

KKR ஆசிய தனியார் கடன் சந்தையில் புதிய அலை—$2.5 பில்லியன் நிதி முடிவு

by Amizhthu 9 January 2026
written by Amizhthu

ஆசியாவின் தனியார் கடன் சந்தைக்கு முக்கிய ஊக்கமாக, உலகளாவிய முதலீட்டு நிறுவனம் KKR, தனது இரண்டாவது ஆசிய கடன் நிதியான Asia Credit Opportunities Fund II‑க்கு $2.5 பில்லியன் முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது. 2022‑ல் தொடங்கிய முதல் நிதியின் $1.1 பில்லியன் அளவிலிருந்து இது குறிப்பிடத்தக்க உயர்வு.

🌏 ஆசிய தனியார் கடன் சந்தைக்கு வலுவான முன்னேற்றம்

ஆசியாவில் இன்னும் வங்கிகள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அதிக வருமானம் தரும் மாற்று கடன் வாய்ப்புகளுக்கான முதலீட்டாளர்களின் ஆர்வம் வேகமாக உயர்ந்து வருகிறது.
2024‑இல் $59 பில்லியன் மதிப்பிலிருந்த ஆசிய தனியார் கடன் சந்தை, 2027‑க்குள் $92 பில்லியன் ஆக வளரும் என மதிப்பிடப்படுகிறது.

💼 நிதியின் நோக்கம் மற்றும் முதலீட்டு திசை

  • மொத்த $2.5B‑ல் $700 மில்லியன் தனிப்பட்ட கணக்குகளிலிருந்து.
  • Performing credit முறை—நேரடி கடன், இருதரப்பு கடன், மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட கடன் வாய்ப்புகள்.
  • குறிக்கோள்: Low‑to‑mid teens வருமானம்.
  • ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற சந்தைகளில் KKR தனது கடன் அணியை விரிவுபடுத்தி வருகிறது.

🏦 வங்கிகளுடன் போட்டி இன்னும் கடினம்

ஆசியாவில் வங்கிக் கடன்கள் இன்னும் மலிவானவை—சுமார் 200–400 bps குறைவான வட்டி.
மேலும், வங்கிகள் வழங்கும் cash‑management, revolving credit போன்ற சேவைகள் தனியார் கடன் வழங்குநர்களுக்கு போட்டியாக உள்ளன.

📈 ஏன் இது முக்கியம்

KKR‑இன் இந்த நிதி முடிவு,

  • ஆசிய தனியார் கடன் சந்தையின் வளர்ச்சியில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை,
  • வங்கிகளுக்கு மாற்றாக நெகிழ்வான நிதி தேடும் நடுத்தர நிறுவனங்களின் தேவை,
  • உலகளாவிய சொத்து மேலாளர்கள் தனியார் கடனில் அதிக கவனம் செலுத்தும் போக்கு
    என பல மாற்றங்களை வெளிப்படுத்துகிறது.

செப்டம்பர் நிலவரப்படி, KKR உலகளவில் $315 பில்லியன் கடன் சொத்துகளை நிர்வகிக்கிறது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
9 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
ஆசியா

📈 ஆசிய பங்குச் சந்தைகள் பறக்கச் செய்த சிப் ராலி

by Amizhthu 9 January 2026
written by Amizhthu

ஆசிய பங்குச் சந்தைகள் இந்த வாரம் வலுவான உயர்வைச் சந்தித்தன. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மேம்பட்ட செமிகண்டக்டர் தேவையின் வேகமான வளர்ச்சி காரணமாக, ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் முக்கிய குறியீடுகள் வரலாற்றிலேயே உயர்ந்த நிலையை எட்டின. உலகளாவிய சிப் சந்தையின் மீளுருச்சியைக் குறிக்கும் இந்த உயர்வு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

🌏 பிராந்திய சந்தை நிலவரம்

  • ஜப்பானின் TOPIX குறியீடு 3,530 புள்ளிகளைத் தாண்டி புதிய சாதனையை எட்டியது.
  • Renesas Electronics, Rohm போன்ற சிப் நிறுவனங்கள் 2–3% வரை உயர்ந்தன.
  • AI சார்ந்த சிப் தேவையின் அதிகரிப்பு மற்றும் நினைவக சிப் விலைகளின் உயர்வு முதலீட்டாளர்களை ஈர்த்தது.
  • தென் கொரியாவின் KOSPI குறியீடு கூட வரலாற்று உச்சத்தைத் தொட்டது.
  • Samsung Electronics, SK Hynix போன்ற உலகின் முன்னணி நினைவக சிப் தயாரிப்பாளர்கள் வலுவான உயர்வை பதிவு செய்தனர்.
  • லாபப் பதிவு காரணமாக குறியீடு பின்னர் சிறிது தளர்ந்தாலும், சாதனை நிலைக்கு அருகில் தொடர்ந்தது.
  • மற்ற சந்தைகளும் நேர்மறை சிக்னல்களைப் பெற்றன:
  • ஹாங்காங் Hang Seng 1.2% உயர்வு
  • சீனாவின் CSI 300, ஷாங்காய் காம்பசிட் மிதமான உயர்வு
  • சிங்கப்பூர் STI 0.8% உயர்வு
  • ஆஸ்திரேலியா ASX 200 சிறிய சரிவு

💡 இந்த உயர்வுக்கு காரணம் என்ன?

  • AI மற்றும் டேட்டா சென்டர் தேவையின் வெடிப்பு
  • நினைவக சிப் வழங்கல் குறைவு, விலை உயர்வுக்கு வழிவகை
  • Samsung Electronics போன்ற நிறுவனங்களின் வலுவான காலாண்டு லாப எதிர்பார்ப்பு
  • அமெரிக்க சந்தைகளின் நேர்மறை முடிவு, ஆசிய சந்தைகளுக்கு ஊக்கம்

📊 பெரிய படத்தில் என்ன தெரிகிறது?

செமிகண்டக்டர் துறை தற்போது ஆசிய பங்குச் சந்தைகளின் முதுகெலும்பாக மாறியுள்ளது.
AI கட்டமைப்பு முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், நினைவக சிப் விலைகளும் 2026 முழுவதும் உயர்வாக இருக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். இதனால் ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற சிப் மைய நாடுகள் தொடர்ந்து பலன் பெறும் வாய்ப்பு அதிகம்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
9 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

இந்தியாவின் முதல் டீப்-டெக் ஸ்டார்ட்அப் கொள்கையை தமிழ்நாடு அறிமுகப்படுத்தியது

by Amizhthu 9 January 2026
written by Amizhthu

தமிழ்நாடு, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி, நாட்டின் முதல் டீப்-டெக் ஸ்டார்ட்அப் கொள்கையை உமாஜின்TN 2026 மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்த முயற்சி, பாரம்பரிய ஐடி சேவை மையத்திலிருந்து, மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் உயர் தொழில்நுட்ப தயாரிப்பு மையமாக மாநிலத்தை மாற்றும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழுமையான சுருக்கம்

₹100 கோடி நிதியுடன் 100 ஸ்டார்ட்அப்புகளுக்கு ஆதரவு

தமிழ்நாடு டீப்-டெக் ஸ்டார்ட்அப் கொள்கை 2025–26 மூலம் அரசு ₹100 கோடி நிதியை ஒதுக்கி, 100 டீப்-டெக் ஸ்டார்ட்அப்புகளை வளர்க்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆரம்ப கட்ட நிதி, இன்க்யூபேஷன், சந்தை அணுகல், உலகளாவிய கூட்டாண்மை போன்ற அனைத்துத் துறைகளிலும் ஆதரவு வழங்கப்படும்.

கொள்கை கவனம் செலுத்தும் முக்கிய துறைகள்:

  • செயற்கை நுண்ணறிவு (AI)
  • பிளாக்செயின்
  • செமிகண்டக்டர்
  • ரோபோட்டிக்ஸ்
  • விண்வெளி தொழில்நுட்பம்
  • மின்னணு உற்பத்தி
  • AVGC (அனிமேஷன், VFX, கேமிங், காமிக்ஸ்)

2025 ஆம் ஆண்டில் இந்திய டீப்-டெக் ஸ்டார்ட்அப்புகள் 87 ஒப்பந்தங்களில் $530 மில்லியன் முதலீடு பெற்றுள்ள நிலையில், இந்த கொள்கை நேரத்திற்கேற்ற முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.

கொள்கையின் முக்கிய இலக்குகள்

அரசு வெளியிட்ட தகவல்களின் படி, தமிழ்நாடு பின்வரும் இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது:

  • 100 டீப்-டெக் ஸ்டார்ட்அப்புகளுக்கு நிதி மற்றும் வழிகாட்டுதல்
  • ₹100 கோடி பொது–தனியார் முதலீடு
  • 10 தொழில்நுட்ப மாற்ற ஒப்பந்தங்கள் (அகாடமியா–தொழில் இணைப்பு)
  • ஸ்டார்ட்அப்புகளின் வருடாந்திர காப்புரிமை மனுக்கள் 25% அதிகரிப்பு
  • 10,000 மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு மேம்பட்ட தொழில்நுட்ப பயிற்சி
  • 10 ஆராய்ச்சி புலமைப்பரிசுகள்
  • துறைவாரியான டெஸ்ட்-பெட்கள் அமைத்தல்
  • சிறப்பு திறன் மையங்கள் (Centres of Excellence) உருவாக்கம்

இந்த கொள்கையின் செயல்பாட்டை iTNT Hub ஒருங்கிணைக்கும்.

பரந்த சூழல் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள்

கொள்கை பல்வேறு ஆதரவு அமைப்புகளை உருவாக்குகிறது:

  • அரசு துறைகள் புதிய தொழில்நுட்பங்களை ஆரம்ப கட்ட பயனாளர்களாக ஏற்கும் திட்டம்
  • புதுமை நட்பு கொள்முதல் முறைகள்
  • இன்க்யூபேட்டர்கள், ஆக்சிலரேட்டர்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், கார்ப்பரேட் இனோவேஷன் மையங்களுக்கு ஆதரவு

ஸ்டார்ட்அப்புகள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது செயல்பாடுகள் இருக்க வேண்டும்; மேலும் குறைந்தது 25% பணியாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

AI & VFX துறைகளில் பெரிய முதலீடுகள்

கொள்கை வெளியீட்டுடன் இணைந்து, பல நிறுவனங்கள் முக்கிய முதலீடுகளை அறிவித்தன:

  • Better Compute Works – ₹5,000 கோடி AI டேட்டா சென்டர்; 1,450 வேலைவாய்ப்புகள்
  • Eros GenAI – ₹3,600 கோடி AI ஆராய்ச்சி மைய விரிவாக்கம்; 1,000 வேலைவாய்ப்புகள்
  • Phantom Digital Effects – ₹100 கோடி VFX விரிவாக்கம்; 1,000 வேலைவாய்ப்புகள்

இந்த முதலீடுகள், தமிழ்நாட்டை AI, VFX, R&D மையமாக மாற்றும் அரசின் நோக்கத்தை வலுப்படுத்துகின்றன.

முதல்வர் ஸ்டாலின் கூறியது

முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு ஐடி சேவை மையத்திலிருந்து புதுமை சார்ந்த தொழில்நுட்ப மையமாக மாறி வருவதை வலியுறுத்தினார். மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் AI சாட்பாட் வழங்குவது இலவசம் அல்ல, எதிர்கால முதலீடு என அவர் குறிப்பிட்டார்.

மொத்தப் பொருள்

இந்த டீப்-டெக் ஸ்டார்ட்அப் கொள்கை, இந்தியாவின் புதுமை சூழலில் ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. நிதி, ஆராய்ச்சி, தொழில்–அகாடமியா இணைப்பு, உலகளாவிய முதலீடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு உலகத் தரத்திலான டீப்-டெக் மையமாக உருவாகும் நோக்கத்துடன் முன்னேறுகிறது. இது மாநிலத்தின் $1 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடையவும் உதவும்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
9 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d