அமிழ்து
www.amizhthu.com
  • News in ENGLISH
  • தமிழீழம்
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • நாட்காட்டி
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

முதன்மை செய்திகள்

இலங்கை

இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலத்திற்கே இருக்கும். – இராமநாதன் அர்ச்சுனா

by Amizhthu 20 December 2025
written by Amizhthu

இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலத்திற்கே இருக்கும் என்று மகாநாயக்க தேரர்கள் என்னிடம் கூறினார்கள் என யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19-12-2025) இடம்பெற்ற அனர்த்த நிவாரணங்களுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகோண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நான் தமிழன், இந்து ஆனால் கையில் அஸ்கிரிய பீடத்தால் எனக்கு கட்டிய பிரித் நூலும், மகாநாயக்க தேரர் கட்டிய பிரித் நூலும் உள்ளன. மகாநாயக்க தேரர்களை சந்தித்து நான் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கதைத்தேன். ஆனால் இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலமே இருக்கும் என்றே அவர்கள் பதிலளித்தனர். இந்த அரசாங்கம் தமிழ், சிங்கள மக்களுக்கு வேண்டாமென்றாகிவிட்டது.

இதேவேளை தகரங்கள் கழன்றிருந்தால் 20இலட்சம் ரூபா வழங்குவதாக கூறினார்கள். அதனை நம்பி நானும் இரண்டு தகடுகளை கழற்றினேன். அவ்வாறு பணம் கிடைக்காதாம். தகரம் மட்டுமல்ல உள்ளாடை வாங்கவும் பணமில்லாத நிலைமையே உள்ளது உங்களுக்கு கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலைமையே உள்ளது. நான் தமிழன். என்னை எந்தவொரு சிங்களவரும் கொல்ல மாட்டார் என்றார். 

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
20 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று 8 மணி நேர நீர் வெட்டு

by Amizhthu 20 December 2025
written by Amizhthu

கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று 20ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 8 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை (CEB) மேற்கொள்ளும் வீதி சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரை, பத்தரமுல்ல, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவதுகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மடிவெல, நுகேகொட, நாவல மற்றும் பின்வரும் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும்:

கொலன்னாவ, ஐடிஹெச், கொட்டிக்காவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, மொரட்டுவ மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
20 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

ஜனவரி 6 முதல் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

by Amizhthu 20 December 2025
written by Amizhthu

தி.மு.க., அரசின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ‘போட்டோ ஜியோ’ சார்பில், வரும் ஜனவரி, 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக, அதன் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார்தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கை, பழைய ஓய்வூதிய திட்டம். இதை நிறைவேற்றுவதாக கூறியே, முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றார். பதவியேற்ற பின் கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டார். இதை அவருக்கு நினைவுபடுத்த, கடந்த நான்கு ஆண்டுகளில், ஏராளமான போராட்டங்களை நடத்தி விட்டோம். இருப்பினும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசின் இந்த நடவடிக்கையால், தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மாறாக பழைய ஓய்வூதிய திட்டத்தை, முதல்வர் செயல்படுத்தி விட்டால், 70 சதவீத பிரச்னை சரியாகி விடும். ஜார்க்கண்ட், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட ஆறு மாநில அரசுகள், தேர்தல் வாக்குறுதி அளிக்காமல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளன.

எனவே, இறுதி கட்டமாக, வரும், 29ம் தேதி, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் கோரிக்கை ஆர்ப்பாட்டமும், அதை தொடர்ந்து, வரும் ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமும் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
20 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை

by Amizhthu 20 December 2025
written by Amizhthu

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய மலைப் பிரதேசங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 – 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
20 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
புலம்பெயர் தமிழர்கள்

யேர்மனியில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்.

by Amizhthu 20 December 2025
written by Amizhthu

தேசத்தின் குரல் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம்  அவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் நெற்ரெற்றால் நகரில் எழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது.

நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாகப்  பொதுச்சுடர்; ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தேசத்தின் குரல் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம்  அவர்களின திருவுருவப் படத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

அகவணக்கத்தினை தொடர்ந்து மலர்வணக்கமும் சுடர் வணக்கமும் இடம்பெற்றது.

நிகழ்வில் கவிதைகள், எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள் மற்றும் சிறப்புப் பேச்சு ஆகியன   இடம்பெற்றன. இந்நிகழ்வைச் சிறப்பித்த கலைஞர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
20 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
ஆஸ்திரேலியா

பாண்டி பீச் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்குகள் தொடக்கம் — 10 வயது சிறுமியும் ஹோலோகாஸ்ட் உயிர் பிழைத்தவரும் உட்பட

by Amizhthu 19 December 2025
written by Amizhthu

ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது நடந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா இந்த வாரம் ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கியுள்ளது. 40‑க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்த தாக்குதலின் முதல் இறுதிச்சடங்குகள் வியாழக்கிழமை நடைபெற்றன. உயிரிழந்தவர்களில் 10 வயது சிறுமியும், ஹோலோகாஸ்டில் இருந்து உயிர் தப்பிய முதியவரும் அடக்கம் செய்யப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த தாக்குதலை தந்தை‑மகன் இருவரும் நடத்தியதாக போலீஸ் தெரிவித்துள்ளது. உயிர் பிழைத்த சந்தேக நபர், 24 வயதான நவீத் அக்ரம், 15 கொலை குற்றச்சாட்டுகள் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் உட்பட 59 குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுக்கிறார். அவரது தந்தை, 50 வயதான சாஜித் அக்ரம், போலீஸுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் கொல்லப்பட்டார்.

“எங்கள் சின்ன சூரியகதிர்” — 10 வயது சிறுமிக்கு விடை

சிட்னியில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு 10 வயது மதில்டாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். குடும்பத்தின் வேண்டுகோளின்படி, அவரது குடும்பப்பெயர் வெளியிடப்படவில்லை.

சிறுமியின் வெள்ளை நிற சிறிய பெட்டிக்குழி சினகோகிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டபோது, பலர் கண்ணீர் மல்க நின்றனர். அவர் விரும்பிய பொம்மைகள், மலர்கள், தேனீ வடிவ பலூன்கள் போன்றவை அஞ்சலியாக வைக்கப்பட்டன. ஹனுக்கா நிகழ்வில் உள்ள செல்லப்பிராணி பூங்காவை ரசித்துக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு தொடங்கியது.

“அவள் எங்கள் சின்ன சூரியகதிர்,” என்று அவரது ஆசிரியர்கள் நினைவுகூர்ந்தனர். “எங்கு சென்றாலும் மகிழ்ச்சி பரப்பும் குழந்தை.”

சமூக சேவை அமைச்சர் தான்யா பிளிபர்செக் நிகழ்வில் கலந்து கொண்டு குடும்பத்தினரை ஆறுதல் கூறினார். “ஏற்கனவே வெறுப்பின் இலக்காக உள்ள சமூகத்திற்கு இது தாங்க முடியாத துயரம்,” என்றார்.

ஹோலோகாஸ்ட் உயிர் பிழைத்தவருக்கு மரியாதை

அதே நாளில், ஹோலோகாஸ்டில் இருந்து உயிர் தப்பிய அலெக்ஸாண்டர் (அலெக்ஸ்) கிளெய்ட்மேன் அவர்களுக்கும் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

கிளெய்ட்மேன், சிறுவயதில் நாசி கொடுமையிலிருந்து தப்பியவர். தாக்குதல் நடந்தபோது தனது மனைவியை காப்பாற்ற முயன்றபோது அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். சிட்னியின் செவ்ரா கடிஷாவில் நடைபெற்ற இறுதிச்சடங்கில், “மனிதகுலத்தின் மிகக் கொடிய தருணங்களைத் தாண்டியும் நம்பிக்கையுடன் வாழ்ந்தவர்” என்று அவரை நினைவுகூர்ந்தனர்.

ரப்பிகள், “வரலாற்றின் இருண்ட அத்தியாயத்திலிருந்து உயிர் தப்பியவர், 2025‑இல் யூத விரோத தாக்குதலில் உயிரிழந்தது மிகக் கொடிய பரிதாபம்” என்று கூறினர்.

துயரத்தில் ஒன்றுபட்ட சிட்னி

15 பேரின் இறுதிச்சடங்குகள் அடுத்த சில நாட்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை, ரப்பி எலி ஷ்லாங்கரின் இறுதிச்சடங்கும் பாண்டியில் நடைபெற்றது.

பாண்டி பீச்சில் விடியற்கால நீந்துபவர்கள் அமைதியான அஞ்சலி நிகழ்வுகளை நடத்தினர். பாண்டி பவிலியன் அருகே மலர் அஞ்சலி மேடையும் பெரிதாகி வருகிறது.

பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், “தேசிய துயரம்” என்று தாக்குதலை வர்ணித்து, ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி சட்டங்களை மறுசீரமைப்பதாக உறுதியளித்துள்ளார்.

நீண்ட பாதை முன் உள்ளது

யூத அமைப்புகள் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் யூத விரோதத்தைக் கட்டுப்படுத்த தேசிய திட்டம் ஒன்றை கோருகின்றன. நியூ சவுத் வேல்ஸ் அரசு, உயிர் பிழைத்தவர்கள், சாட்சிகள் மற்றும் மீட்புப்படையினருக்கான மனநல ஆதரவை விரிவுபடுத்தியுள்ளது.

“15 உயிர்கள் பறிக்கப்பட்டன,” என்று ரப்பி யெஹோரம் உல்மன் கூறினார். “ஆனால் நாம் ஒன்றுபட்டு நிற்பதன் மூலம் அவர்களின் நினைவுகளை காக்கப் போகிறோம்.”

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
19 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

டெல்லி கடும் காற்று மாசைக் கட்டுப்படுத்த சீனாவின் செயல்திட்டங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தல்

by Amizhthu 19 December 2025
written by Amizhthu

புதுதில்லி மீண்டும் ஒரு தடிமனான நச்சு புகை மூட்டத்தில் மூழ்கியுள்ள நிலையில், சீனா கடந்த பத்து ஆண்டுகளில் காற்று மாசைக் கட்டுப்படுத்த எடுத்த கடுமையான நடவடிக்கைகளை இந்திய தலைநகர் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. ஒருகாலத்தில் “உலகின் புகை மூட்டத் தலைநகர்” என அழைக்கப்பட்ட பீஜிங் இன்று ஒப்பீட்டளவில் சுத்தமான காற்றை அனுபவிப்பது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த விவாதம் இந்த வாரம் மேலும் தீவிரமானது. இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம், சீனா காற்று மாசை குறைக்க எடுத்த முக்கிய நடவடிக்கைகளை விளக்கும் பதிவுகளை வெளியிட்டது. தூதரக பேச்சாளர் யூ ஜிங், இது “இரு வேகமாக நகரமயமாகும் நாடுகளின் பொதுவான சவால்” எனக் குறிப்பிட்டு, பீஜிங் மற்றும் டெல்லி இடையிலான தற்போதைய காற்றுத் தர வேறுபாட்டை சுட்டிக்காட்டினார். பீஜிங் AQI 68 என “திருப்திகரமான” நிலையைப் பதிவு செய்த நிலையில், டெல்லியின் AQI 447 என “மிகவும் ஆபத்தான” நிலையை எட்டியது.

சீனாவின் பரிந்துரைகள்: படிப்படியாக எடுத்த நடவடிக்கைகள்

சீனத் தூதரகம் வெளியிட்ட தகவல்களில், பீஜிங்கின் காற்றுத் தரத்தை மாற்றியமைக்க உதவிய முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு:

1. வாகன வெளியேற்றக் கட்டுப்பாடுகள்

பழைய, அதிக மாசு உமிழும் வாகனங்களை நீக்குதல், கடுமையான வெளியேற்றத் தரநிலைகளை அமல்படுத்துதல், மின்சார வாகனங்களை ஊக்குவித்தல் ஆகியவை முக்கிய பங்காற்றின. பீஜிங்–தியான்ஜின்–ஹெபெய் பகுதிகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மாசை குறைக்க உதவின.

2. தொழிற்சாலைகளின் மறுசீரமைப்பு

கனரக தொழிற்சாலைகள் நகர மையங்களில் இருந்து மாற்றப்பட்டன அல்லது மூடப்பட்டன. பழைய தொழிற்சாலை பகுதிகள் பூங்காக்கள் மற்றும் வணிக மையங்களாக மாற்றப்பட்டன.

3. பொதுப் போக்குவரத்து விரிவாக்கம்

பீஜிங் மெட்ரோ, மின்பஸ்கள் மற்றும் சைக்கிள் பாதைகள் போன்றவற்றில் பெரிய முதலீடு செய்தது. இதனால் தனியார் வாகனப் பயன்பாடு குறைந்தது.

4. பிராந்திய ஒருங்கிணைப்பு

சீனாவின் மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் விரைவான, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உதவியது. இந்தியாவின் ஜனநாயக அமைப்பில் இது சற்று சவாலானதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

டெல்லியின் நெருக்கடி தீவிரமடைகிறது

சமீப வாரங்களில் டெல்லியின் காற்றுத் தரம் கடுமையாகக் குறைந்துள்ளது. இதனால் GRAP (Graded Response Action Plan) இன் 4வது கட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமானத் தடை, வாகன இயக்கக் கட்டுப்பாடு, வீட்டிலிருந்து வேலை செய்யும் அறிவுறுத்தல்கள் உள்ளிட்டவை நடைமுறையில் உள்ளன.

நகரின் மருத்துவமனைகள் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றன. பள்ளிகள் இடைக்கிடையாக மூடப்பட்டுள்ளன. சாலைகளில் காட்சி தெளிவு குறைந்ததால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விமான தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

அரசியல் மற்றும் பொதுமக்கள் அழுத்தம் அதிகரிக்கிறது

பாராளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் நீண்டகால, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றனர். தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. லாவு ஸ்ரீ கிருஷ்ண தேவாராயலு, “சீனா எடுத்த கடுமையான நடவடிக்கைகளைப் போலவே நாமும் செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

பொதுமக்களும் ஒவ்வொரு குளிர்காலத்திலும் மீண்டும் மீண்டும் ஏற்படும் இந்த நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு தேவை எனக் கோருகின்றனர்.

நிபுணர்கள்: சீனாவின் முறை நேரடியாகப் பயன்படுத்த முடியாது

சீனாவின் வெற்றி முக்கிய பாடங்களை வழங்கினாலும், இந்தியாவின் அரசியல் அமைப்பு, பொருளாதார சூழல் மற்றும் பிராந்திய சிக்கல்கள் காரணமாக அதே மாதிரி நடவடிக்கைகளை நேரடியாகப் பயன்படுத்த முடியாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால் வாகன வெளியேற்றக் கட்டுப்பாடு, தொழிற்சாலை ஒழுங்குமுறை, பிராந்திய ஒருங்கிணைப்பு போன்றவை இந்திய சூழலுக்கு ஏற்ப மாற்றி பயன்படுத்தலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

இது எல்லை தாண்டிய ஒத்துழைப்புக்கான தருணமா?

சீனாவின் இந்த அணுகுமுறை, போட்டியை விட பொதுவான சவால்களை முன்னிறுத்தும் ஒரு தூதரக முயற்சியாக சிலர் கருதுகின்றனர். இந்தியா பீஜிங்கின் செயல்திட்டங்களில் இருந்து எவ்வளவு கற்றுக்கொள்கிறது என்பது இன்னும் தெளிவில்லை. ஆனால் ஒரு விஷயம் உறுதி — தைரியமான, நீண்டகால நடவடிக்கைகள் இல்லாமல், டெல்லியின் காற்று மாசு நெருக்கடி ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்தை ஆபத்துக்குள்ளாக்கும்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
19 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
சர்வதேசச் செய்திகள்

2026‑ஆம் ஆண்டில் மேலும் மோசமடையும் உலகப் பாதுகாப்பு நிலை

by Amizhthu 19 December 2025
written by Amizhthu

அணு பதற்றம், கலப்பு போர், சூடான் முதல் வெனிசுலா வரை பரவும் மோதல்கள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை.

2025 முழுவதும் உலகப் பாதுகாப்பு சூழல் கணிசமாகக் குறைந்துள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அணு ஆயுத பதற்றம் அதிகரித்திருப்பதும், கலப்பு போர் முறைகள் விரிவடைந்திருப்பதும், சூடான் முதல் வெனிசுலா வரை பல பிராந்தியங்களில் மோதல்கள் தீவிரமடைந்திருப்பதும் 2026‑இல் மேலும் மோசமடையக்கூடும் என அவர்கள் கூறுகின்றனர். புதிய ஆண்டை நோக்கி உலகம் நகரும் நிலையில், தூதரக வாயில்கள் பலவீனமடைந்து, பல்வேறு புவியியல் அரசியல் மோதல்கள் விரிவடையும் அபாயம் அதிகரித்துள்ளது.

🌍 அணு பதற்றம் மீண்டும் உயர்வு

நிபுணர்கள் கூறுவதாவது, பல ஆண்டுகளாக பின்னணியில் இருந்த அணு அபாயங்கள் 2025‑இல் மீண்டும் உலக கவனத்தை ஈர்த்தன.

  • பல அணு ஆயுத நாடுகள் புதிய சோதனைகள் அல்லது மேம்பட்ட ஏவுகணை அமைப்புகளை வெளியிட்டன.
  • அணு பரவலைக் கட்டுப்படுத்தும் முக்கிய சர்வதேச உடன்படிக்கைகள் பலவீனமடைந்தன அல்லது முடங்கின.
  • குறிப்பாக ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் இராணுவப் பதற்றம் மற்றும் கடுமையான அரசியல் பேச்சு அதிகரித்தது.

தூதரக முயற்சிகள் வலுப்படுத்தப்படாவிட்டால், 2026‑இல் அணு ஆயுத நவீனமயமும் வேகமான முடிவெடுக்கும் தொழில்நுட்பங்களும் மேலும் அபாயத்தை உருவாக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

🛰️ கலப்பு போர்: புதிய சாதாரணம்

பாரம்பரிய போர்களைத் தாண்டி, 2025‑இல் கலப்பு போர் முறைகள் — இணையத் தாக்குதல், தவறான தகவல் பரப்பல், பொருளாதார அழுத்தம், மறைமுக நடவடிக்கைகள் — அதிகரித்தன.

  • அரசுகள் மற்றும் தனியார் இணைய பாதுகாப்பு நிறுவனங்கள் முக்கிய கட்டமைப்பு, நிதி மற்றும் தொடர்பு துறைகளை குறிவைத்து அதிகளவிலான இணையத் தாக்குதல்கள் நடந்ததாக தெரிவித்தன.
  • தவறான தகவல் பிரச்சாரங்கள் தேர்தல்கள், பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பதற்றங்களை பாதித்தன.
  • நேரடி போரைத் தூண்டாமல் எதிரிகளை பலவீனப்படுத்தும் கருவியாக கலப்பு போர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

2026‑இல் இந்த போர் முறைகள் மேலும் நுணுக்கமாகவும் தீவிரமாகவும் மாறக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

🔥 ஆப்பிரிக்காவிலிருந்து லத்தீன் அமெரிக்கா வரை பரவும் மோதல்கள்

2025‑இல் பல நீடித்த மோதல்கள் மேலும் மோசமடைந்தன. இதன் மனிதாபிமான மற்றும் அரசியல் விளைவுகள் 2026‑இல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

சூடான்

உள்நாட்டுப் போர் நாட்டை மேலும் சிதறடித்து, கோடிக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்தது. உணவு, தண்ணீர், மருத்துவ உதவி போன்ற அடிப்படை தேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சமாதான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமின்றி உள்ளன.

வெனிசுலா

அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார சரிவு புதிய போராட்டங்களையும் குடியேற்ற அலைகளையும் தூண்டியது. எல்லைப் பகுதிகளில் ஆயுதக் குழுக்களுக்கிடையேயான மோதல்கள் அதிகரித்து, அண்டை நாடுகள் கவலை தெரிவித்தன.

மற்ற சூடுபுள்ளிகள்

  • சஹேல் பிராந்தியத்தில் தீவிரவாத செயல்பாடுகள் விரிவடைந்தன.
  • கிழக்கு ஐரோப்பாவில் இராணுவக் குவிப்பு மற்றும் சிறிய அளவிலான மோதல்கள் தொடர்ந்தன.
  • இந்தோ‑பசிபிக் கடல் பிராந்தியத்தில் கடல் எல்லைத் தகராறுகள் நீடித்தன.

🔮 2026‑க்கான முன்னறிவிப்பு

சர்வதேச ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படாவிட்டால், 2026‑இல் பின்வரும் அபாயங்கள் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்:

  • பெரிய சக்திகளுக்கிடையேயான தவறான கணக்கீடுகளின் அபாயம்
  • இணைய மற்றும் தகவல் போர் விரிவடைதல்
  • மோதல் பகுதிகளில் மனிதாபிமான நெருக்கடிகள் தீவிரமாதல்
  • உலக அமைதி மற்றும் பாதுகாப்பை காக்கும் நிறுவனங்கள் மீது அதிக அழுத்தம்

சில தூதரக முயற்சிகள் நடைபெறுகின்றன என்றாலும், தற்போதைய பாதையை மாற்றுவதற்கான வாய்ப்பு குறுகிவருகிறது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
19 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

தமிழ்நாட்டில் 50 இடங்களை பாஜக எதிர்பார்க்கிறது

by Amizhthu 19 December 2025
written by Amizhthu

சட்டசபை தேர்தலில் தமிழக பா.ஜ. எதிர்பார்க்கும் 50 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தயாரித்து, கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,-வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதி பட்டியலை தயாரித்து பா.ஜ., வினர் தலைமைக்கு அனுப்பியுள்ளனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, இந்த பட்டியலை தெரிவிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கட்சியினர் கூறினர்.

பட்டியலில் உள்ள தொகுதிகள்:

  • திருத்தணி
  • ஆவடி,
  • அம்பத்துார்
  • துறைமுகம்
  • ஆயிரம் விளக்கு
  • மயிலாப்பூர்
  • விருதுநகர்
  • தாம்பரம்
  • திருப்போரூர்
  • உத்திரமேரூர்
  • காஞ்சிபுரம்
  • தளி
  • திருவண்ணாமலை
  • திருக்கோவிலுார்
  • ஈரோடு கிழக்கு
  • மொடக்குறிச்சி
  • தாராபுரம்
  • ஊட்டி
  • திருப்பூர் வடக்கு/தெற்கு
  • கோயம்புத்துார் தெற்கு
  • சிங்காநல்லுார்
  • பழநி
  • அரவக்குறிச்சி
  • ஸ்ரீரங்கம்
  • திருச்சி கிழக்கு
  • திட்டக்குடி
  • விருத்தாச்சலம்
  • சிதம்பரம்
  • மயிலாடுதுறை
  • திருவிடைமருதுார்
  • கும்பகோணம்
  • திருவையாறு
  • திருமயம்
  • காரைக்குடி
  • சிவகங்கை
  • மதுரை வடக்கு/மத்திய தொகுதி
  • திருப்பரங்குன்றம்
  • ராஜபாளையம்
  • ஸ்ரீவில்லிபுத்துார்
  • விருதுநகர்
  • திருச்சுழி
  • ராமநாதபுரம்
  • திருச்செந்துார்
  • கோவில்பட்டி
  • திருநெல்வேலி
  • நாகர்கோவில்
  • குளச்சல்
  • விளவங்கோடு.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
19 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

திருப்பரங்குன்றம் வழக்கு: “மலை மீது இருப்பது தீபத்துாண் என்பதற்கு ஆதாரம் இல்லை.” – தமிழக அரசு தகவல்

by Amizhthu 19 December 2025
written by Amizhthu

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக தாக்கலான மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், ‘அது தீபத்துாண் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை’ என, தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பினரின் வாதங்கள் நிறைவடைந்ததால், தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் நேற்று 5வது நாளாக நடந்தது.

தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும், மனுதாரர்களான ராம ரவிக்குமார், பரமசிவம், அரசு பாண்டி, கார்த்திகேயன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஸ்ரீராம், வள்ளியப்பன், கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் அருண் சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோரும் ஆஜராகினர்.

ராமன்: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள துாணில் தீபம் ஏற்றப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆதாரத்தை ராம ரவிக்குமார் உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. தமிழக அரசு தரப்பில், தர்கா நிர்வாகம் உள்ளிட்ட யாருக்கும் ஆதரவான நிலைப்பாடு எடுக்கவில்லை. தர்கா நிர்வாகம், தனியாக மேல்முறையீடு செய்து வழக்கறிஞரை நியமித்து வாதத்தை முன்வைத்துள்ளது.

1923 சிவில் வழக்கு அடிப்படையில் மதுரை கீழமை நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் திருப்பரங்குன்றம் மலையை ஆய்வு செய்தார். அவர், ‘மலை உச்சியில் தர்கா மட்டுமே உள்ளது. வேறு வழிபாட்டு தலத்திற்குரிய கட்டுமானம் எதுவும் இல்லை’ என, தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.

காலம் காலமாக தீபம் ஏற்றும் இடத்திற்கு பதிலாக, மலை உச்சியில் ஏற்ற உத்தரவிடக்கோரி தாக்கலான வழக்கை, தனி நீதிபதி வேணுகோபால், 2014ல் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் கல்யாணசுந்தரம், பவானி சுப்பராயன் அமர்வு, 2017ல் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பான மற்றொரு வழக்கில், 1996ல் விசாரித்த நீதிபதி கனகராஜ், ‘மனுதாரர் அறநிலையத்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுக வேண்டும்’ என, உத்தரவிட்டார்.

1923 முதல் 2025 வரை பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளில், தீபத்துாண் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

இவ்விவகாரத்திற்கு ஏற்கனவே சட்ட ரீதியாக தீர்வு காணப்பட்டுவிட்டது. அதற்கு மீண்டும் உயிரூட்ட முடியாது. தற்போது, ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு மீது, தனி நீதிபதி தவறான முடிவு எடுத்து உத்தவிட்டுள்ளார்.

உச்சிப்பிள்ளையார் கோவில், மலையின் பாதியில் அமைந்துள்ளது. அங்கு, 100 ஆண்டுகளுக்கு மேல் தீபம் ஏற்றப்படுகிறது. அந்நடைமுறையை, ஒரே நாள் இரவில் தனி நீதிபதியின் உத்தரவுப்படி மாற்றியமைக்க முடியாது.

வழிபாட்டுத் தலங்கள் சட்டப்படி, நாடு சுதந்திரம் அடைந்தபோது, வழிபாட்டுத்தலங்கள் எந்த நிலையில் இருந்தனவோ, அதே நிலையில் தற்போதும் தொடர வேண்டும்; மாற்றம் செய்ய முடியாது.

ராம ரவிக்குமார் தரப்பு, ‘மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்’ என, மட்டுமே குறிப்பிட்டு, திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பியது. ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில், ‘தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவை செயல் அலுவலர் நிராகரித்துள்ளார். இதுபோன்ற சூழலில், அறநிலையத்துறை சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவின்படி, நான்கு கட்ட நிலையில் இணை கமிஷனர், கமிஷனர் உள்ளிட்டோரிடம் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. கமிஷனர், இணை கமிஷனரிடம் அரசு பாண்டி மனு அளித்துள்ளார். அதை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தயார்.

நீதிபதிகள்: இவ்விவகாரத்தை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொண்டே செல்வது?

எஸ்.ஸ்ரீராம், வள்ளியப்பன், கார்த்திகேயன்: சூபி கலாசாரத்தை பின்பற்றி தர்காவில் தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால், தீபத்துாணில் தீபம் ஏற்ற ஆட்சேபிக்கப்படுகிறது. மலை மேல் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றப்படும் என்பதற்கு கோவில் நிர்வாகம் வெளியிட்ட புத்தகத்தில் குறிப்பு உள்ளது.

மலையிலுள்ள கல்லாத்திமரம், கோவிலின் தலவிருட்சமாகும். அதில், தர்கா தரப்பினர் கொடியை கட்டி வைத்துள்ளனர். கோவிலுக்கு சொந்தமான அப்பகுதியை, தர்கா தரப்பில் உரிமை கோர வாய்ப்புள்ளது.

அரசு தரப்பில் கூறுவது போல், அறநிலையத்துறையின் குறிப்பிட்ட சட்டப்பிரிவின்படி கோவில் திருவிழாவில் முதல் மரியாதை அளித்தல் உள்ளிட்ட சில விஷயங்களுக்காக மட்டுமே அதிகாரிகளை அணுக முடியும்.

மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி செயல் அலுவலரிடம் மனு அளித்ததும், கோவில் நிர்வாகம் தரப்பு விரைவாக செயல்பட்டு, தீபத்துாணை மூடி மறைத்துள்ளது. இதனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில், தீபத்துாணில் தீபம் ஏற்றுவது உள்ளிட்ட இதர நிவாரணங்கள் கோரப்பட்டது. அது தீபத்துாண்தான் என்பதற்கு போதுமான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ரிட் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது. நீதிமன்ற அவமதிப்பு மேல்முறையீட்டு வழக்குகள் மீதான விசாரணை ஜன., 7க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
19 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா சந்தனக்கூடு ஜனவரி 6, 2026 அன்று நடைபெற உள்ளது.

by Amizhthu 19 December 2025
written by Amizhthu

இதற்கான அமைதிக் கூட்டம் திருமங்கலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சிவஜோதி தலைமையில் நடந்தது. இதில் திருப்பரங்குன்றம் கோயில் உதவி ஆணையாளர் சசி பிரியா, தாசில்தார் கவிதா, தர்கா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் சார்பில் 2026 ஜனவரி 6 ல் நடக்க உள்ள சந்தனக்கூடு திருவிழா, 2025 டிசம்பர் 21ல் திருப்பரங்குன்றம் மலை மேல் ஏற்றப்படும் மரத்திலான கொடியேற்ற நிகழ்வுக்கு, கடந்த ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகளை இந்த ஆண்டும் கடைபிடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. வழக்கமான வீதிகளில் ஊர்வலம் செல்லும் போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படா வண்ணம் திருவிழாவினை நடத்த வேண்டும்.

புதிய நடைமுறைகளை ஏற்படுத்தவோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடிகளை வெடித்தலோ கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் பட்சத்தில் தர்கா நிர்வாகத்தினர் முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
19 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

“திமுக இளைஞர் அணி மண்டல மாநாட்டிற்காக ஜல்லிக்கற்கள் மற்றும் மண் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வெட்கக்கேடானது” – சீமான்.

by Amizhthu 19 December 2025
written by Amizhthu

அவரது அறிக்கை:

திருவண்ணாமலையில், 14ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற, தி.மு.க., இளைஞரணி மாநாடு நடந்தது. அந்த இடத்தை சமப்படுத்த, மலப்பம்பாடி ஏரியில் இருந்து, 2,000 லோடு சரளை மண் சட்டவிரோதமாக திருடப்பட்டுள்ளது. இது, தி.மு.க.,வினருக்கு சொந்தமான அருணாச்சலேஸ்வரா சர்க்கரை ஆலை வளாகத்தில், கொட்டி வைக்கப்பட்டது.

அனுமதியின்றி ஏரிக்கரையில், 30 அடி தார் சாலை அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து, உழவர் உரிமை இயக்கம் சார்பில், அருள் ஆறுமுகம், அம்மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு மனு கொடுத்தார். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும், குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, 14ம் தேதி, 2,000 விவசாயிகளை திரட்டி மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அருள் ஆறுமுகம் மற்றும் 22 விவசாயிகளை முன்னெச்சரிக்கையாக, போலீசார் கைது செய்து, போளூர் சிறையில் அடைத்தனர். தி.மு.க., மாநாடு முடிந்ததும் விடுதலை செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வேலுார் மத்திய சிறையில் அடைத்தது பேரவலமாகும்.

கொலை, கொள்ளை, பாலியல் குற்றவாளிகள், போதைப் பொருள் விற்போரை கைது செய்ய திறனற்ற தி.மு.க., அரசு, அப்பாவி விவசாயிகளை பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பது தான், விவசாயிகளை பாதுகாக்கும் முறையா. தி.மு.க.,வின் மண் காக்கும், மானம் காக்கும் முறையா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
19 December 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • News in ENGLISH
  • தமிழீழம்
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • நாட்காட்டி
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d