
காலி சிறைச்சாலையில் உள்ள கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த கைதி ஒருவர் திடீரென கிணற்றில் விழுந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18-01-2026) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அக்மீமன, கொனமுல்ல பிரதேசத்தில் 22 வயதுடைய கைதி ஆவார்.
கைதி போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் அக்மீமன பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி சிறைச்சாலையில் உள்ள கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் சிலர் இணைந்து கிணற்றில் விழுந்த கைதியை காப்பாற்றி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றியதையடுத்து அவர் ஞாயிற்றுக்கிழமை (18-01-2026) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Using the name “Karumpuli Miller” for a commercial film is an act of deep disrespect to Tamil martyrdom and history
- இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு வயது வரம்பு விதிப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்: ஆலோசகர் கருத்து
- கம்பஹா – கொய்கம சந்தி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது
- விளிம்பில் புவிசார் அரசியல்: உக்ரைன்–ரஷ்யா போர்: அபாயகரமான தந்திரோபாய–இரசாயன–மூலோபாய கட்டத்திற்குள் நுழைகிறது!
- வோல்ட்ரீம் தோட்டத்தில் ஏற்பட்ட தீ பரவலினால் 10 வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்பொன்று முற்றாக எரிந்து அழிந்துள்ளது.
- மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு