
காலியில் அஹங்கம – தித்தகல்ல பகுதியில் கடந்த வியாழக்கிழமை (15-01-2026) தாயை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மகனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் சமீர தொடன்கொட உத்தரவிட்டுள்ளார்.
அஹங்கம – தித்தகல்ல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய மகனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
அஹங்கம – தித்தகல்ல பகுதியில் கடந்த வியாழக்கிழமை (15-01-2026) சந்தேக நபரான மகன் மதுபோதையில் தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ள நிலையில் பின்னர் தனது தாயை கத்தியால் குத்தி கொலைசெய்துள்ளார்.
காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு மில்லியன் பண மோசடி
- ஜெர்மானியப் யுவதியிடம் அத்துமீறல் வழக்கில் மிஹிந்தலை தொல்லியல் துறை ஊழியர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்!
- இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க அவசரக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
- அக்குரேகொட வழக்கறிஞர் தம்பதி கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது.
- மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிராக கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்.
- திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருந்தால், அது முன்கூட்டியே அறிவிக்கப்படும் – இலங்கை எரிசக்தி அமைச்சர்
கொலைசெய்யப்பட்டவர் அஹங்கம – தித்தகல்ல பகுதியை சேர்ந்த 80 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஆவார்.
இதனையடுத்து சந்தேக நபரான மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.