
காலியில் அஹங்கம – தித்தகல்ல பகுதியில் கடந்த வியாழக்கிழமை (15-01-2026) தாயை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மகனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் சமீர தொடன்கொட உத்தரவிட்டுள்ளார்.
அஹங்கம – தித்தகல்ல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய மகனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
அஹங்கம – தித்தகல்ல பகுதியில் கடந்த வியாழக்கிழமை (15-01-2026) சந்தேக நபரான மகன் மதுபோதையில் தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ள நிலையில் பின்னர் தனது தாயை கத்தியால் குத்தி கொலைசெய்துள்ளார்.
காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
- “நாம் நீலகாமம்” போராட்டத்திற்கு முழு ஆதரவு – நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உறுதிப்படுத்தினார்.
- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றம் செல்லுமாறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அவரிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளனர்.
- இலங்கை வானிலை அறிக்கை
- வத்தளை, மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- மத்திய கிழக்கு போர்நிறுத்தத்தின் தாக்கம்: கொழும்பு பங்குச் சந்தையில் வலுவான ஏற்றம்.
- பள்ளி மாணவர்களை குறிவைத்து மின்னணு சிகரெட்டுகளை விற்பனை செய்த பெண் கைது
கொலைசெய்யப்பட்டவர் அஹங்கம – தித்தகல்ல பகுதியை சேர்ந்த 80 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஆவார்.
இதனையடுத்து சந்தேக நபரான மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.