
காலியில் அஹங்கம – தித்தகல்ல பகுதியில் கடந்த வியாழக்கிழமை (15-01-2026) தாயை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மகனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் சமீர தொடன்கொட உத்தரவிட்டுள்ளார்.
அஹங்கம – தித்தகல்ல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய மகனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
அஹங்கம – தித்தகல்ல பகுதியில் கடந்த வியாழக்கிழமை (15-01-2026) சந்தேக நபரான மகன் மதுபோதையில் தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ள நிலையில் பின்னர் தனது தாயை கத்தியால் குத்தி கொலைசெய்துள்ளார்.
காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
- காலி, அக்மீமன பகுதியில் வாடகை வீட்டில் ‘குஷ்’ கஞ்சா பயிரிட்டதற்காக பெலாரஷ் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- கல்பிட்டி, இப்பந்திவு மற்றும் நீர்கொழும்பு மா ஓயா ஏரிப் பகுதியில் சுமார் 793 கிலோகிராம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
- இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்த பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை!
- இலங்கைக்கான இன்றைய நாணய மாற்று விகிதம்.
- அநுரகுமார திசாநாயக்கவும் கடந்த ஆட்சியாளர்களை போன்றே செயற்படுகிறார். – உதய கம்மன்பில
- இலங்கை காவல்துறை நாடு தழுவிய சோதனைகளை நடத்தி, ஒரே நாளில் 570 பேரை கைது செய்தது!
கொலைசெய்யப்பட்டவர் அஹங்கம – தித்தகல்ல பகுதியை சேர்ந்த 80 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஆவார்.
இதனையடுத்து சந்தேக நபரான மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.