தித்வா புயல் சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 160 கி.மீ தொலைவிலும், வேதாரண்யத்தில் இருந்து 100 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

தித்வா புயல் சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 160 கி.மீ தொலைவிலும், வேதாரண்யத்தில் இருந்து 100 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் காரணமாக , மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்த நிலையில் சனி மதியம் முதல் கனமழை வெளுத்து வாங்கியது.
கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றும், உள் பகுதிகளில் மிதமான காற்றும் தொடர்ந்து வீசி வருகிறது. கடலில் 8 அடி உயரம் வரை அலைகள் எழுந்து கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் உள்ள 28 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி துறைமுகங்கள், கடற்கரையோர ஆறுகளில் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.
கடலோர கிராமங்களிலும், தாழ்வான பகுதிகளிலும், குறுகலான சாலைகளிலும், விளை நிலங்களிலும் நீர் தேங்கியது.
மாவட்ட முழுவதும் விவசாயிகள் 67,993 ஹெக்டரில் சம்பா தாளடி நெற்பயிற் சாகுபடி செய்திருந்த நிலையில் தற்போது இடைவிடாது பெய்து வரும் மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு 9 ஆயிரம் ஹெக்டரில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்டம் முழுவதிலும் சம்பா தாளடி நெற் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து காற்று மற்றும் மழையின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் வயலில் தேங்கும் தண்ணீரை அவ்வப்போது வடிய வைத்து நெற்பயிர்களுடன், வாழை மற்றும் கரும்பு பயிர்களை பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தலா 31 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சீர்காழியிலும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தரங்கம்பாடியிலும் 2 நாட்களாக முகாமிட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைக்காக மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை சார்பில் மயிலாடுதுறை, சீர்காழி கோட்டங்களில் தலா 30 நீச்சல் வீரர்கள் கொண்ட 2 குழுக்கள் மற்றும் 10 பேர் கொண்ட பாம்பு பிடி வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறையில் மாவட்ட எஸ்.பி ஸ்டாலின், இக்குழுவினரை சந்தித்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மாவட்ட நீர்வளத்துறை கண்காணிப்பு அலுவலர் சந்திரகலா தலைமையில் அலுவலர்கள் மாவட்டம் முழுவதிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, நீர் நிலைகளில் உள்ள ஆகய தாமரை செடிகளை அகற்றியும், பொக்லைன் இயந்திரம் மூலம் மழை நீரை வடியச் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் (நவம்பர் 29) மாலை 4.30 மணியுடன் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): மயிலாடுதுறை 84.80, மணல்மேடு 49, சீர்காழி 84.60, கொள்ளிடம் 57.60, தரங்கம்பாடி 61.01, செம்பனார்கோவில் 119.70.
தென் மாவட்டங்களை நடுங்கவைக்கும் வகையில் நேற்று கடுமையான குளிர் பதிவாகி உள்ளது. மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பகலிலேயே ஊட்டி, கொடைக்கானலை ஒத்த குளிர் நிலவியது.

திருநெல்வேலியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று 22 டிகிரி வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. டிசம்பர் – ஜனவரி மாதங்களிலும் இதுபோன்ற பகல் நேர குளிர் இதற்கு முன் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் 22.6 டிகிரி வெப்பநிலை பதிவாகி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டு 24 டிகிரி வெப்பநிலை மட்டுமே பதிவாகியிருந்தது.
தூத்துக்குடியில் நேற்று 20.5 டிகிரி வெப்பநிலை பதிவு செய்யப்பட்டு, 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட 25.5 டிகிரி சாதனையை முறியடித்துள்ளது.
கோவில்பட்டி 21.8, தென்காசி 21, திருச்செந்தூர் 20, பாம்பன் 23, கன்னியாகுமரி 26.6 என தென் மாவட்டங்கள் முழுவதும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குளிர் பதிவாகியுள்ளது. இத்தகவலை தன்னார்வ வானிலை ஆய்வாளர் தென்காசி ராஜா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (நவ.,27) ஆபரண தங்கம், கிராம் 11,770 ரூபாய்க்கும், சவரன், 94,160 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 180 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்று (நவ.,28) தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 11,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 94,720 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து, 183 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (நவ.,29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.95,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,980க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.192க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வட தமிழகத்தை நோக்கி டிட்வா புயல் நகர்ந்து வருகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா அளித்த பேட்டி:

சென்னை நகர், புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம், காரைக்காலில் 5ம் எண் புயல் சின்னம் ஏற்றப்பட்டுள்ளது. நாளை மறுதினம் டிட்வா புயல் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.
இன்று தமிழகத்தில் மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை என 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 13 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் நகரும் வேகம் அதிகரித்துள்ளது. தற்போது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு அருகே 350 கி.மீ துாரத்தில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு வட தமிழகத்தை நெருங்கும். நாகை மாவட்டத்தில் மிக மிக அதிக மழை பெய்துள்ளது. கோடியக்கரையில் 25. செ.மீ மழை பதிவாகி உள்ளது.
இன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையிலான கடந்த 7 மணி நேரத்தில் நாகையில் 11 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. காரைக்காலில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
காற்றின் வேகம்
புயல் தாக்கம் காரணமாக, வட தமிழகத்தில் இன்று தரைக்காற்று 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். டெல்டா மாவட்டங்களில் 80 கி.மீ வேகத்திலும், சென்னையில் 75 கி.மீ வேகத்திலும் தரைக்காற்று வீசலாம்.
நாளை மாலை சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டின் கடற்கரைக்கு 25 கி.மீ வரை டிட்வா புயல் நெருங்கி வரும். செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம்,கடலுார் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நாளை 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். சென்னையில் நாளை 60 கி.மீ. முதல் 70 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
டிசம்பர் 1 முதல் மழை படிப்படியாக குறையக்கூடும். – இவ்வாறு அமுதா கூறினார்.
விலகியது
புயல் தற்போது இலங்கையை விட்டு முழுவதும் விலகியுள்ளது. சனி மாலை 5 மணி நிலவரப்படி யாழ்ப்பாணத்தில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (29-11-2025) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்கடலில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழக கடலோர பகுதிகளை டிட்வா புயல் நெருங்கி வருகிறது. சென்னையில் இருந்து தெற்கே 380 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இன்று அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய
வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (நவ.,29) மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நமாக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
நாளை (நவ.,30) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* சென்னை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
* திருவண்ணாமலை
* வேலூர்
* திருப்பத்தூர்
* தர்மபுரி
* கிருஷ்ணகிரி
நாளை (நவ.,30) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கடலூர்
* கள்ளக்குறிச்சி
* சேலம்
திருவள்ளூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 1ம் தேதி கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
(முழுமையாக படித்து விட்டு கோபப்படுங்கள்)
இப்போதெல்லாம் நகரங்களில் புறவழிச் சாலைகளின் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் இருவர் என்ற கணக்கில் ஜொலிக்கும் உடை உடுத்தி, செல்போனில் ஃப்ளாஷ் லைட் எரியவிட்டு பாலியல் தொழில் செய்யும் பெண்களை பார்க்க முடிகிறது.

அவர்களை கடந்து போகும் போதெல்லாம் பல்வேறு சிந்தனைகள் மனதில் தோன்றும். தமிழர் மாண்பு, தமிழர் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் இவற்றின் மீது எப்போது இடிவிழத் தொடங்கியது ? என்ற நினைவு மனதை இரணமாக்கும்.
அந்த தொழில் செய்யும் பெண்களை நினைத்து நமக்கு கோபம் வரவேண்டுமா ? பரிதாபப் படவேண்டுமா ? என்ற கேள்விக்கு என்னிடம் இன்றளவும் பதில் இல்லை.
அவர்கள்மீது கோபம் கொண்டால் அவர்களை இந்த நிலைக்கு தள்ளிய சூழல் மீது கோபம் வேண்டும். அவர்கள் மீது பரிதாபம் கொண்டால் அவர்களை போல் இருக்கும் பலர் வேறு வேலைகள் செய்து வாழ்கிறார்களே என்ற எண்ணம் வருகிறது. அவர்கள் மீது கோபப்படுவதை விட…! அவர்களை நுகர்வோர்களாக பயன்படுத்தும் சமுதாய கழிவுகளை என்ன சொல்வது ?,
திருமணம் ஆகி மனைவியின் மீது மோகம் குறைந்த நிலையில் ஒருவரோ, அல்லது திருமணம் ஆகாமல் இருக்கும் இளவயதில் இருக்கும் ஒருவரோ அல்லது இந்த இரண்டிலும் இல்லாமல் தன்னுடைய அந்த நேரத் தேவைக்காக எதையும் செய்யலாம், அல்லது எதையும் மீறலாம் என்று நினைக்கும் வக்கிர புத்தி உள்ளவர்களாக இப்படி ஏதோ ஒரு வகையினர்தான் அவர்களின் நுகர்வோர். இவர்களுக்கு அறம், பொருள், கற்பு என எந்தவித சமுதாய நோக்கும் இல்லாமல் அந்த நேரத்து சுகம் என்பதை தாண்டி வேறு எதுவும் இல்லை.
இவற்றை தடுத்து நிறுத்தவேடிய காவல்துறைகள் மற்றும் பொது புத்தி இவர்களை அனுமதிப்பதோடு மட்டுமின்றி நுகர்வு பொருளாக பயன்படுத்தவும் செய்கிறது…
நிற்க… !
அரசியலில் தவெக…!
அன்றைய தினத்தில் காங்கிரசின் அடாவெடியை தடுக்க இல்லாத ஒன்றை தத்துவமாக வைத்து 1949 திமுக உருவானது. அதன் பிறகு தமிழகத்தில் உருவான எந்த கட்சிக்கும் தனித்த சித்தாந்த வரையறை என எதுவும் கிடையாது நாம் தமிழர் கட்சியை தவிர. திமுகவில் இருந்து அதிமுக, மதிமுக, தனியாக தேமுதிக, மக்கள் நீதி. மையம், என எல்லாம் பெயரில் சிறிய மாற்றங்களோடு வந்தனவே தவிர வேறு எதுவும் அவர்களே பேசி தங்களை பிரகடன படுத்திக்கொள்ள வில்லை.
திமுக = காங்கிரஸ் எதிர்ப்பு
அதிமுக = திமுக எதிர்ப்பு
மதிமுக = திமுக எதிர்ப்பு
மையம் = எதை எதிர்த்தது என தெரியவில்லை
அமமுக = EPS எதிர்ப்பு
நாம் தமிழர்க்கட்சியை பொறுத்தவரை தனித்த கொள்கை வரையறை கோட்பாட்டு பாதை, தனித்த தலைமை என எல்லாவற்றிலும் உயிர்ப்பு நிலை தத்துவத்தோடு களத்தில் உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் :
உண்மையில் இந்த கட்சியின் கொள்கை என்ன ?, சித்தாந்தம் என்ன ?, எதை எதிர்ப்பது ? எதை ஆதரிப்பது ? என எதுவும் புரியாமல், தன்னிடம் உள்ள திரைக்கவர்ச்சி என்ற ஒற்றை மூலதனம் எதுவும் இல்லை. அந்த சாலையோரத்தில் நிற்கும் பாலியல் தொழிலாளி போல்…! இந்த வார்த்தை உங்களுக்கு. மிகக் கடுமையாக தோன்றலாம். உற்றுப் பார்த்தால் உண்மை தெளிவு பெறலாம் !
கொள்கை தலைவர்கள் !
காமராஜர் = இந்திய தேசியம்
பெரியார் = இந்திய தேசியத்தை எதிர்த்த மாதிரி நடித்த திராவிட பேர்வழி
அம்பேத்கார் = சட்டம் ஒருக்கப்பட்டோர் விழிப்புணவு
வேலுநாச்சியார் = விடுதலை போராட்ட குறியீடு
அஞ்சலை அம்மாள் = தவெக வெளிபடுத்த வில்லை.
உண்மையில் அம்பேத்கார் அவர்களை மதித்தால் விஜய் கட்சி தலைவனாக இருக்க முடியாது. சட்டத்தை இயற்றியவர் கொள்கை தலைவராக கொண்டு, பிளாக் டிக்கெட் வருமானம், இலாட்டறி டிக்கெட் வருமானம் ஒருபுறம் என இவர்களின் தகுதி என்னவென்று பாருங்கள்.
கொள்கைத் தலைவர்களை வரிசை படுத்தி இவர்களால் கொள்கையை சொல்லவும் முடியாது, கொள்கையை வரிசைப்படுத்தி இவர்களால் கொள்கை தலைவர்களையும் சொல்ல முடியாது. ஏனென்றால் இவர்களிடம் கொள்கை என்ற ஒன்று கிடையாது.
காமராஜர் : இவர்களை பொறுத்தவரை தன்னை நேர்மையானவராக கட்டிக்கொள்ள, அவரை ஒரு சமுதாயத்தினராக பார்ப்பவர்களின் வாக்கினை பெற !
பெரியார் : தெலுங்கர்கள் மற்றும் நாயக்கர்களின் மற்றும் பிறமொழியாளர்களின் வாக்கினை பெற !
அம்பேத்கார் : ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கினை பெற !
வேலு நாட்சியார் : தென் மாவட்டங்களில் மறவர்களின் வாக்கினை பெற !
அஞ்சலை அம்மாள் : வட மாவட்டங்களில் வன்னியர்களின் வாக்கினை பெற !
அண்ணா : காஞ்சிபுரத்தில் மக்களை ஏமாற்ற !
செங்கோட்டையன் : மேற்கு மாவட்டங்களில் கவுண்டர்களின் வாக்கினை பெற !
கஸ்டமர்களின் பார்வையை ஈர்க்கும் வகையில் விதவிதமாக ஆடையணிந்து நிற்கும் சாலையோர பாலியல் தொழில்களுக்கும் இந்த அணுகுமுறைக்கும் என்ன வேறுபாடு உங்களால் காணமுடிகிறது ?
தேர்தல் வாக்குறுதியாக வீட்டுக்கு ஒரு கார் இலட்சியம், பைக் நிச்சயம் என்பதெல்லாம் ஒரு கோமாளி கூட சொல்ல மாட்டான். விஜயின் சமீபத்திய அறிக்கையின் படு வீட்டுக்கு 39 இலட்சம் தேவை படும். ஏற்கனவே ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 இலட்சம் டெபாசிட் செய்கிறேன் என்ற மோடியையே கோமாளியாக பார்த்த நாம், இந்த நாகரீக கோமாளியை எப்படி பார்ப்பது ?
எப்படியாவது அரியணை ஏறிவிட வேண்டும் என்ற வெறியை தவிர வேறு எதுவும் இல்லை. தன்னை பார்க்க வந்து 41 பேர் இறந்து போனார்கள் என்ற பெருந்துயரை ஒருவனால் எளிதாக கடந்துவிட முடியும் என்றால் அவன் எதற்கு சங்கடப் பட போகிறான் சொல்லுங்கள் ?
வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழில் செய்யும் ஒருவரால் அவருக்கும் அவரை நுகர்வு செய்யும் பயனாளருக்கும் மட்டுமே பாதிப்பு.
ஆனால் என்ன நடந்தாலும், எத்தனை பேர் செத்தாலும், கொள்கை, கோட்பாடு என எது இல்லாவிட்டாலும், பிளாக் டிக்கெட், இலட்டரி டிக்கெட் பணம் என்றாலும், சாதிக்கு ஒரு ஆள்களாக பிடித்தேனும் அதிகாரத்தை அடையவேண்டும் என்ற அரசியல் விபச்சாரம் நாட்டுக்கே, நாட்டு மக்களுக்கே ஆபத்தானது.
சாலையில் தன்னுடைய வயிற்று பிழைப்பிற்காக நிற்கும் பாலியல் தொழிலாளி போல…
எந்தவித தனித்த கொள்கை கோட்பாடு என எதுவும் இல்லாவிட்டாலும் அதிகாரத்தை அடைந்தே தீருவேன் என்ற வெறியோடு விஜய் நிற்கிறார் !
பாலியல் தொழிலாளியை நோக்கி சொல்லும் நுகர்வோர் போல, 50 வருட அரசியல் அனுபவம் கொண்டுள்ள செங்கோட்டையன் சென்றுள்ளார். இந்த பட்டியல் இனி நீளும் என்றே நினைக்கிறேன் !
அரசியலை ஒரு கவர்சி தொழிலாக மாற்றுகின்ற வேலையை துளிகூட அரசியல் அறிவற்ற விஜய் செய்கிறார் !
தேர்தல் களம் 2026 இவர்களுக்கு சரியான பதிலைச் சொல்லும் !
வேறு வழியில்லை என்ற நிலையில் அந்த வேலையை செய்யும் பாலியல் தொழிலாளிகளை கூட மன்னித்து அவர்களை நல்வழி படுத்தி விடலாம். ஆனால் விஜய் போன்றோர்கள் மன்னிக்க கூடாது !
நன்றி
தமிழம் செந்தில்நாதன்
29-11-2025
ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார், திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த போதே, ஒரு வழக்கு ஒன்றில் சீமானுடன் மோதல் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரமாக குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர். திருச்சி டிஐஜி ஆக பணிபுரிந்த வருண்குமார், தற்போது சென்னையில் சிபிசிஐடி டிஐஜி ஆக பணியாற்றி வருகிறார்.
இவர், திருச்சி 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ” தன் மீதும், குடம்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தூண்டுதலின் பேரில் நாம் தமிழர் கட்சியினர் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புகின்றனர். இது தொடர்பாக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார்.
தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக்கோரி திருச்சி நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து, ஐகோர்ட் மதுரை கிளையில் சீமான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி எல். விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவு: அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கடமையை முறையாக நிறைவேற்றினால் பிரச்னை இல்லை. அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிக்க அரசியல்வாதிகளுக்கு உரிமை உள்ளது. இது போன்ற விவகாரங்களில் கீழமை நீதிமன்றங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மனு அனுமதிக்கப்படுகிறது. கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வங்கக்கடலில் இலங்கை அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை, ‘தித்வா’ புயலாக வலுவடைந்தது. இது, நாளை மறுநாள் சென்னையை நெருங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில், தெற்கு இலங்கை அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது, நேற்று காலை, ‘தித்வா’ புயலாக வலுவடைந்தது. ‘தித்வா’ என்றால் நீர்பரப்பு என பொருள் கூறப்படுகிறது. ஏமன் நாட்டின் பரிந்துரை அடிப்படையில் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நேற்று மதியம் நிலவரப்படி, சென்னையில் இருந்து 700 கி.மீ., தொலைவில், புதுச்சேரியில் இருந்து 610 கி.மீ., தொலைவில் தித்வா புயல் மையம் கொண்டிருந்தது. மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்த இந்த புயல், நேற்று பிற்பகல் முதல் மெதுவாக நகரத் துவங்கியுள்ளது.
இந்த புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில், நாளை மறுதினம் சென்னை, புதுச்சேரி கடலோர பகுதிகளை நெருங்க வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது, அடுத்தடுத்த நகர்வுகள் அடிப்படையில் தெரிய வரும்.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலுார், கடலுார் மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், அடுத்த ஐந்து நாட்களுக்கு பலத்த சூறாவளி வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். – இவ்வாறு அவர் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்த படி வெள்ளம் சென்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை, மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நாலுமுக்கு எஸ்டேட்டில் 256 மி.மீ. ஊத்து எஸ்டேட்டில் 250 மி.மீ.,காக்காச்சியில் 225 மி.மீ. மாஞ்சோலையில் 210 மி.மீ. மழை பதிவானது.
பாபநாசத்தில் 78 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 75 மி.மீ., சேரன்மகாதேவியில் 69 மி.மீ. மி.மீ., மழை பெய்தது.
பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 121 அடி(மொத்த உயரம் 143 அடி), மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 100 அடியானது( மொத்த உயரம் 118 அடி). பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 6200 கன அடி வீதமும் மணிமுத்தாறு அணைக்கு 3000 கன அடி வீதமும் நீர்வரத்து இருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழை தாமிரபரணி ஆற்றில் வெள்ளமாக சென்றது.
இதனால் திருநெல்வேலி ஜங்ஷன் குறுக்குத்துறை முருகன் கோயில் கட்டுமானத்தை மூழ்கடித்தது. அங்கிருந்த சுவாமி விக்ரகங்கள் ,முக்கிய பொருட்கள் கரையில் உள்ள கோயிலுக்கு ஏற்கனவே பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.
”பீஹார் மாநிலத்தை போல தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி தர்மத்தை பா.ஜ., கடைபிடிக்கும்,” என, சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:
பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் பெண்கள் முன்னேற்றத்திற்கும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் ஒரு திட்டம் கொண்டு வந்தார். முதற்கட்டமாக 10,000 ரூபாய் கொடுத்தனர். மீதமுள்ள தொகையை விரைவில் வழங்கவுள்ளனர். தேர்தல் முடிந்து விட்டது.
தேர்தலுக்காக என்னவெல்லாம் சொன்னார்களோ, அதை நிதிஷ் குமார் வரிசையாக செய்து முடிப்பார்.
அதே போல் காங்கிரசும் நாங்கள் வெற்றி பெற்றால் 2 லட்சம், 3 லட்சம் ரூபாய் வரை கொடுப்போம் என்கின்றனர். ஆனால், பீஹார் மக்கள் காங்கிரசை நம்பவில்லை.
கடந்த 25 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் மீது நம்பிக்கை வைத்து, மறுபடியும் ஆட்சி பொறுப்பை அளித்துள்ளனர். பீஹாரில் காங்கிரசுக்கு எப்படி படுதோல்வி ஏற்பட்டதோ, அதை நிலைதான் தமிழகத்திலும் வரும்.
இந்த உண்மை தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தெரிந்து விட்டது. அதனால் தான், பீஹாரில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றதை, தவறாகப் பேசுகிறார்.
குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மக்களின் நிலை, இந்தியா முழுதும் இருக்கும் மக்களிடமும் இருக்கிறது. அது பீஹாரிலும் இருந்தது. தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்று விட்டது. பீஹாரில், கடந்த 2020ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.,வை விட ஐக்கிய ஜனதா தளம் கட்சி குறைந்த எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்களை பெற்று இருந்தது.
ஆனாலும், நிதிஷ் குமார் முதல்வர் ஆக்கப்பட்டார். இப்போதும், அவரே முதல்வர் ஆக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் கூட்டணி தர்மம் தான்.
காங்., எந்த மாநிலத்திலும் அப்படி நடந்து கொண்டதில்லை. காங்., எப்படி ஜனநாயகம் பற்றி பேச முடியும். – இவ்வாறு அவர் கூறினார்.
வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக, பெய்த கனமழையால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, நாகை, கரூர், அரியலூர், மதுரை, கடலூர் ஆகிய 17 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.,24) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் (நவ.,26) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை கனமழை காரணமாக இன்று (நவ.,24) பள்ளிகளுக்கு மட்டும் 10 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
தூத்துக்குடி
ராமநாதபுரம்
திருவாரூர்
கள்ளக்குறிச்சி
புதுக்கோட்டை
திருச்சி
தஞ்சாவூர்
மயிலாடுதுறை
விருதுநகர்
சிவகங்கை
நாகை
கரூர்
அரியலூர்
மதுரை
கடலூர்
கனமழை காரணமாக இன்று (நவ.,24) பள்ளி, கல்லூரிகளுக்கு 2 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
கனமழை எச்சரிக்கை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (நவ.,24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், கனமழை காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது