‘தமிழகத்தில் சில இடங்களில், நாளை முதல், வரும் 9ம் தேதி வரை, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், கடந்த 24 மணி நேரத்தில், மழை பெய்துள்ளது. நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவு பெற்ற, 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

தற்போது, தெற்கு கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதேபோல், தென் கிழக்கு மற்றும் அதை ஒட் டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை முதல் வரும் 9ம் தேதி வரை, சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உண்டு.
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் இருந்து ஆரம்பம்
- இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!
- தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு, தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்தூரம் “இசைவேள்வி – 2026”
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
- “வடகிழக்கு பருவமழை விலகியது: நீண்ட வறட்சி கட்டத்துக்கு தமிழ்நாடு தயாராகிறது”
- சீனா–ஜப்பான் உறவுகளில் பிளவு: தைவான் விவகாரம், பொருளாதார தாக்கம்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில், குறைந்தபட்ச வெப்ப நிலை, சில இடங்களில், ஜன., 7 வரை, 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை, படிப்படியாக குறையும். – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.