“நக்சல் பிரச்சனைகளில் இருந்து இந்தியா விரைவில் விடுதலை பெறும்.” – இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில், சிஆர்பிஎப் படையின் கோப்ரா பட்டாலியன் மற்றும் மாநில காவல்துறையின் கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையில், ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் முக்கியப்புள்ளி சஹ்தேவ் சோரன் என்ற பர்வேஷ் ஒழிக்கப்பட்டுள்ளான்.

கூடுதலாக சஞ்சல் என்ற ரகுநாத் ஹெம்பிராம் மற்றும் ராம்கேலவன் என்ற பிர்சென் கஞ்சு ஆகியோரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து, வடக்கு ஜார்க்கண்டில் உள்ள பொகாரோ பகுதியில் இருந்து நக்சல்வாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. விரைவில், முழு நாடும் நக்சல் பிரச்னையிலிருந்து விடுபடும்.

இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.

Related posts

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாதது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஏர் இந்தியா 6 சர்வதேச விமான சேவைகளை ரத்து செய்துள்ளது

கேரளாவின் புதிய முதலமைச்சரின் பெயர் நாளை அறிவிக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு.