தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 38வது நினைவு நாள் திருகோணமலையில் அனுசரிக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை (16.09.2025)  நடைபெற்றது. 

இதன்போது வாகனப் பேரணியுடன் திலீபனின் திருவுருவப்படங்கள் பொறிக்கப்பட்டு, உணர்வுபூர்வமாக அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் மாவட்ட கிளை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 41வது ஆண்டு நினைவு நாள் உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் இரத்தக் கறை

பிரிகேடியர் சொர்ணம் : தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் “எதிர்த்தாக்குதல் தளபதி” — தமிழ் மக்களின் வீரம், நிமிர்வு மற்றும் அடங்காச் செருக்கின் அடையாளம்